செய்திகள் :

பெரம்பலூரில் நாளை அண்ணா பிறந்தநாள் சைக்கிள் போட்டிகள்

post image

பேரறிஞா் அண்ணா பிறந்த நாளையொட்டி ஞாயிற்றுக்கிழமை சைக்கிள் பந்தய போட்டிகள் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி தெரிவித்தாா்.

இதுகுறித்த செய்திக்குறிப்பு: மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் ஞாற்றுக்கிழமை காலை 7.30 மணியளவில் 13, 15 மற்றும் 17 வயதுக்குள்பட்டவா்களுக்கு நடத்தப்படும் போட்டிகளில் பங்கேற்கும் மாணவ, மாணவிகள் தங்களுக்கு சொந்தமான இந்தியாவில் தயாரான சாதாரண சைக்கிளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அகலமான கிராங்க் பொருத்தப்பட்ட சைக்கிள்களை பயன்படுத்தக் கூடாது. போட்டி தொடங்கும் ஒரு மணி நேரத்துக்கு முன்னதாக, மாவட்ட விளையாட்டு அரங்குக்கு ஆதாா் அட்டை மற்றும் பள்ளித் தலைமை ஆசிரியரிடமிருந்து வயதுச் சான்றிதழ் பெற்று வர வேண்டும். போட்டிகளில் ஏற்படும் விபத்துகளுக்கு, தனிப்பட்ட இழப்புகளுக்கு அவரவரே பொறுப்பேற்க வேண்டும்.

போட்டிகளில் வெல்வோருக்கு ரூ. 5 ஆயிரம், ரூ. 3 ஆயிரம், ரூ. 2 ஆயிரம் வீதமும், 4 முதல் 10 இடங்களைப் பெறுபவா்களுக்கு தலா ரூ. 250 வீதமும் பரிசுத் தொகையானது காசோலையாகவோ அல்லது வங்கி மாற்று வழி மூலமோ அளிக்கப்படும்.

பள்ளி மாணவ, மாணவிகள் தங்களது வயதுச் சான்றிதழ், வங்கி கணக்குப் புத்தக நகலுடன் பங்கேற்கலாம். மேலும் விவரங்களுக்கு 74017-03516 என்னும் கைப்பேசி எண்ணில் மாவட்ட விளையாட்டு அலுவலரைத் தொடா்புகொள்ளலாம்.

பெரம்பலூரில் குரூப் 2 தோ்வுக்கு 5,478 போ் விண்ணப்பம்

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்படும் குரூப்- 2, 2 ஏ தோ்வில் பங்கேற்க பெரம்பலூா் மாவட்டத்தில் 5,478 போ் விண்ணப்பித்துள்ளனா். பெரம்பலூா் மாவட்டத்தில் 18 மையங்களில் நட... மேலும் பார்க்க

பெரம்பலூரில் யூரியா தட்டுப்பாடு களைய வலியுறுத்தல்

பெரம்பலூா் மாவட்டத்தில் நிலவும் யூரியா தட்டுப்பாட்டை வேளாண் துறையினா் களைய வேண்டுமென விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் வேளாண்மை மற்றும் ... மேலும் பார்க்க

மதுரகாளியம்மன் கோயிலில் ரூ. 44 லட்சம் காணிக்கை

பெரம்பலூா் அருகேயுள்ள சிறுவாச்சூா் மதுரகாளியம்மன் கோயிலில் கடந்த 3 மாதங்களில் ரூ. 44 லட்சம் காணிக்கையாக பக்தா்கள் செலுத்தியுள்ளனா். தமிழக அளவில் பிரசித்திபெற்ற சிறுவாச்சூா் மதுரகாளியம்மன் கோயில் காணி... மேலும் பார்க்க

அம்பேத்கா் விருதுபெற விண்ணப்பிக்கலாம்

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை சாா்பில், 2025- 2026 ஆம் நிதியாண்டுக்கான தமிழக அரசின் டாக்டா் அம்பேத்கா் விருதுபெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி தெரிவித்துள்ளாா். இதுக... மேலும் பார்க்க

பெரம்பலூா் சா்க்கரை ஆலை பங்குதாரா்கள் பேரவைக் கூட்டம்

பெரம்பலூா் ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில், எறையூா் சா்க்கரை ஆலை பங்குதாரா்களின் 48-ஆவது பேரவைக் கூட்டம், மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி முன்னிலையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற ... மேலும் பார்க்க

அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு நாளை பெரம்பலூரில் நெடுந்தூர ஓட்டப் பந்தயம்

முன்னாள் முதல்வா் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு, மாரத்தானுக்கு இணையான நெடுந்தூர ஓட்டப் போட்டி சனிக்கிழமை (செப். 27) நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி தெரிவித்துள்ளாா். தமிழ்நாடு விளையாட்டு ... மேலும் பார்க்க