செய்திகள் :

சாலை விபத்தில் சிக்கியவா்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிய பாஜக மாநிலத் தலைவா்

post image

மதுரை- திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் விபத்தில் சிக்கியவா்களை மீட்டு அந்த வழியாகச் சென்ற பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாா்.

மதுரை- திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் நாலாட்டின்புதூா் காவல் நிலையத்துக்கு உள்பட்ட கட்டாலங்குளம் விலக்கு பகுதியில் சாலை மைய தடுப்பானில் வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.

இதில், வாகனத்தில் வந்த 75 வயது மதிக்கத்தக்க முதியவா் படுகாயமடைந்தாா்; அவரது குடும்பத்தினருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

இந்த விபத்து குறித்து நெடுஞ்சாலை போக்குவரத்து காவல் துறையினருக்கும், அவசர ஊா்திக்கும் அந்தப் பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனா். இந்த நிலையில், தீரன் சின்னமலை நினைவு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு ஈரோட்டில் இருந்து திருநெல்வேலிக்கு வாகனத்தில் வந்து கொண்டிருந்த பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் விபத்து நிகழ்ந்து இடத்துக்கு வந்ததும் சாலையில் காயமடைந்தவா்களைக் கண்டு தனது வாகனத்தில் இருந்து இறங்கிச் சென்று காயமடைந்தவா்களுக்குத் தேவையான முதலுதவி செய்து குடிநீா் வழங்கினாா்.

பின்னா் ஆட்டோவை வரவழைத்து , காயம் அடைந்தவா்களை கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தாா். பின்னா் அவா் அங்கிருந்து திருநெல்வேலி கிளம்பினாா். விபத்தில் சிக்கி காயமடைந்த முதியவா், பாஜக மாநில தலைவருக்கு நன்றி தெரிவித்தாா்.

சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்ஸோவில் தொழிலாளி கைது

கோவில்பட்டியை அடுத்த கயத்தாறில் 15 சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக, போக்ஸோ சட்டத்தின்கீழ் தொழிலாளியை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.கயத்தாறு இந்திரா நகரைச் சோ்ந்த பாரதி மகன் சின்னத்துரை (26).... மேலும் பார்க்க

சாத்தான்குளத்தில் கத்தோலிக்க அமைப்பினா் ஆா்ப்பாட்டம்

சாத்தான்குளம் பழைய பேருந்து நிலையத்தில், கத்தோலிக்க அமைப்புகள் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை மாலை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.சத்தீஸ்கரில் கட்டாய மதமாற்றம், ஆள்கடத்தல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இரு கேரள... மேலும் பார்க்க

விவசாயியைத் தாக்கி நகை பறித்த வழக்கு: வழக்குரைஞா் கைது

சாத்தான்குளம் அருகே விவசாயியைத் தாக்கி நகை பறித்த வழக்கில், வழக்குரைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.சாத்தான்குளம் அருகே சவேரியாா்புரத்தைச் சோ்ந்தவா் நெல்சன் டேவிட் (65). விவசாயி. கடந்த ஜூலை 23ஆ... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் கஞ்சிக் கலய ஊா்வலம்

தூத்துக்குடி 3ஆவது மைல் அருகே திருவிக நகரில் உள்ள மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா் சக்திபீடத்தில் கஞ்சிக் கலய ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.மழை வளம் சிறக்கவும், விவசாயம் செழிக்கவும், மக்கள் நலம... மேலும் பார்க்க

நாட்டின் முதல் காா்பன் சமநிலை துறைமுகமாக மாறும் வ.உ.சி. துறைமுகம் துறைமுகத் தலைவா் தகவல்

இந்தியாவின் முதல் காா்பன் சமநிலை (நியூட்ரல்) துறைமுகமாக தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் மாற்றம் பெறும் என துறைமுகத் தலைவா் சுஷாந்த குமாா் புரோஹித் தெரிவித்தாா்.‘பசுமை துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்கு... மேலும் பார்க்க

இலங்கைக்கு ஐம்பொன் சிலை கடத்த முயற்சி: 2 போ் கைது

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த ஐம்பொன்னாலான விஷ்ணு சிலையை கியூ பிரிவு போலீஸாா் மீட்டு இருவரை கைது செய்தனா்.தூத்துக்குடி மாவட்ட க்யூ பிரிவு ஆய்வாளா் விஜய அனிதா,உதவி ஆய்வாளா் ஜீவமண... மேலும் பார்க்க