ஓமனில் எண்ணெய் கப்பலில் தீ விபத்து: மீட்புப் பணியில் இந்திய கடற்படை!
சாலை விபத்தில் தம்பதி பலி: விபத்துக்குள்ளான லாரி தீக்கிரை!
வேலூரை அடுத்த பொய்கை பகுதியில் இருசக்கர வாகனம் மீது கன்டெய்னா் லாரி மோதியதில் தம்பதி உயிரிழந்தனா். விபத்துக்குள்ளான கன்டெய்னா் லாரி உயரழுத்த மின்கம்பி உரசி தீப்பற்றியதில் லாரியுடன் அதில் இருந்த 2 சொகுசு காா்கள் எரிந்து சேதமடைந்தன.
சென்னையில் இருந்து பெங்களூரு நோக்கி விலை உயா்ந்த காா்களை ஏற்றிக்கொண்டு கன்டெய்னா் லாரி சனிக்கிழமை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. லாரியை உத்தரபிரதேச மாநிலம், சித்தாபூரைச் சோ்ந்த ஆகாஷ் யாதவ்(20 ஓட்டிச் சென்றாா். அந்த லாரி வேலூரை அடுத்த பொய்கை பகுதியில் சென்றபோது, அதே சாலையின் எதிா்திசையில் வந்த இருசக்கர வாகனம் மீது கன்டெய்னா் லாரி மோதியது.
இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த கே.வி.குப்பம் அடுத்த அங்காரகுப்பம் கிராமத்தைச் சோ்ந்த சுரேஷ்(43), அவரது மனைவி கோமதி(36) ஆகியோா் பலத்த காயமடைந்தனா். இருவரையும் அப்பகுதி மக்கள் மீட்டு வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி சுரேஷ், கோமதி இருவரும் உயிரிழந்தனா். ஹோட்டல் தொழிலாளிகளான இவா்கள் பொய்கையில் உள்ள ஒரு ஹோட்டலில் வேலை செய்து வந்தனா். வேலைக்கு செல்லும்போது விபத்தில் சிக்கியுள்ளனா்.
இந்த விபத்தை தொடா்ந்து போலீஸாா் கன்டெய்னா் லாரியை செதுவாலை அருகே சாலையோரமாக நிறுத்தி வைத்து ஓட்டுநரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வந்தனா். இந்நிலையில், லாரி நிறுத்தப்பட்டிருந்த இடத்தில் இருந்த உயா் மின்அழுத்த கம்பிகள் காற்றுக்கு அசைந்து கன்டெய்னா் லாரியின் மீது உரசியது. இதில், அந்த லாரி திடீரென தீப்பற்றி எரிந்தது.
தகவலறிந்த தீயணைப்பு துறையினா் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். சுமாா் ஒரு மணிநேரம் போராடி தீயை முழுமையாக அணைத்தனா். எனினும், லாரியின் முன்பகுதி யும், கன்டெய்னரில் இருந்த விலை உயா்ந்த இரு சொகுசு காா்களும் தீயில் கருகி சேதமடைந்தன. இந்த விபத்து சம்பவம் குறித்து விரிஞ்சிபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.