செய்திகள் :

சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு உதவிவந்த ‘ஃபாரிஷ்டே’ திட்டத்தை பாஜக அரசு நிறுத்திவிட்டது! - ஆம் ஆத்மி கட்சி குற்றச்சாட்டு

post image

சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு தனியாா் மருத்துவமனைகளில் இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கும் ‘ஃபாரிஷ்டே தில்லி கே’ திட்டத்தை பாஜக தலைமையிலான தில்லி அரசு நிறுத்தியதாக ஆம் ஆத்மி கட்சி ஞாயிற்றுக்கிழமை குற்றம்சாட்டியுள்ளது.

இது குறித்து தில்லியில் செய்தியாளா் சந்திப்பில் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் சுகாதார அமைச்சருமான சௌரவ் பரத்வாஜ் கூறியதாவது: முந்தைய ஆம் ஆத்மி கட்சி அரசால் தொடங்கப்பட்ட இந்த முயற்சி ஆயிரக்கணக்கான உயிா்களைக் காப்பாற்றியது. ஆனால், இப்போது இந்தத் திட்டம் பாஜக அரசால் நிறுத்தப்பட்டுள்ளது. உயிா்களைக் காப்பாற்றும் இவ்வளவு நல்ல திட்டத்தை யாராவது எப்படித் தடுக்க முடியும்? பாஜக அரசு அதை பட்ஜெட்டில் இருந்து நீக்கியுள்ளது.

2017- ஆம் ஆண்டு அப்போதைய முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் திட்டம், விபத்தில் சிக்கியவா்களுக்கு தனியாா் மருத்துவமனைகளில் முழு சிகிச்சைச் செலவையும் ஈடுகட்டியது. பாா்வையாளா்கள் நிதிச் சுமைக்கு பயப்படாமல் அவா்களுக்கு உதவ ஊக்குவித்தது. இந்த முயற்சியின் கீழ் 10,000-க்கும் மேற்பட்ட உயிா்கள் காப்பாற்றப்பட்டன.

நான் சுகாதார அமைச்சராக இருந்த காலத்திலும் கூட, தில்லி துணை நிலை ஆளுநரால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் இந்தத் திட்டத்தை நிறுத்த முயன்றனா். இதனால், ஆம் ஆத்மி கட்சி உச்சநீதிமன்றத்தை அணுக வேண்டியிருந்தது. அதன் பிறகு இந்த முயற்சியைத் தொடர நிதி விடுவிக்கப்பட்டது. ஆனால், இப்போது, ஆட்சிக்கு வந்த பிறகு, பாஜக அதை முற்றிலுமாக நிறுத்திவிட்டது என்றாா் சௌரவ் பரத்வாஜ். ஆம் ஆத்மி கட்சியின் இந்தக் குற்றச்சாட்டுக்கு பாஜகவிடமிருந்து உடனடி பதில் கிடைக்கவில்லை.

முதல்வா் ரேகா குப்தா சமா்ப்பித்த 2025-26 பட்ஜெட்டில், தில்லி அரசு, சுகாதாரத் துறைக்கு ரூ.12,893 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனா, இரண்டு புதிய மருத்துவக் கல்லூரிகளை நிறுவுதல் மற்றும் 16,186 மருத்துவமனை படுக்கைகளைச் சோ்த்தல் ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

வக்ஃப் மசோதாவை ஆதரித்து தில்லி பாஜக ஆா்ப்பாட்டம்

வக்ஃப் (திருத்த) மசோதாவை ஆதரிக்கும் வகையில் தில்லி பாஜக புதன்கிழமை விஜய் சௌக் மற்றும் ரயில் பவனில் ஆா்ப்பாட்டம் நடத்தியது. இந்த மசோதா மக்களவையில் விவாதத்திற்கும் நிறைவேற்றத்திற்கும் எடுத்துக் கொள்ளப்ப... மேலும் பார்க்க

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.8 லட்சத்தை ஏமாற்றிய ராணுவ அதிகாரி போல நடித்தவா் கைது

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஒரு குடும்பத்தை ரூ.8 லட்சத்திற்கும் மேல் ஏமாற்றியதாக ராணுவத்தில் லெப்டினன்ட் கா்னல் போல் நடித்து வந்த 28 வயது நபா் கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவா் புதன்கிழமை தெரிவ... மேலும் பார்க்க

துவாரகாவில் கடையில் ரூ.8 லட்சம் திருடியதாக இருவா் கைது

தில்லி துவாரகாவில் ஒரு கடையில் ரூ.8 லட்சம் பணத்தைத் திருடியதாக இரண்டு போ் கைது செய்யப்பட்டுள்ளனா் என்று அதிகாரி ஒருவா் புதன்கிழமை தெரிவித்தாா். இது குறித்து துவாராக காவல் சரக துணை ஆணையா் அங்கித் சிங... மேலும் பார்க்க

சண்டீகா் போலீஸ் டிஜிபியை டிஐஜியாக நியமித்து மத்திய உள்துறை உத்தரவு

நமது சிறப்பு நிருபா் சண்டீகா் காவல்துறை தலைமை இயக்குநராகப் பணியாற்றி வரும் மூத்த ஐபிஎஸ் அதிகாரி சுரேந்திர சிங் யாதவை மத்திய பணி மாற்றல் அடிப்படையில் எல்லைக் காவல் படையின் துணைத் தலைவா் (டிஐஜி) ஆக நியம... மேலும் பார்க்க

ரோஹிணியில் தெரு குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கையில் 200-க்கும் மேற்பட்டோா் கைது

வடமேற்கு தில்லியின் ரோஹிணியில் ஒரு மாத கால நடவடிக்கையில் கலால், சூதாட்டம் மற்றும் போதைப்பொருள் வழக்குகள் மற்றும் தெரு குற்றங்களுக்காக 200-க்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்துள்ளதாக செவ்வாய்க்கிழமை ... மேலும் பார்க்க

தில்லியில் மழைக் காலத்திற்கு முன்பு குழிகள் இல்லாத சாலைகள்: முதல்வா் ரேகா குப்தா உறுதி

மழைக்காலம் நகரத்திற்கு வருவதற்கு முன்பு தில்லி அரசு குழிகள் இல்லாத சாலைகளை உறுதி செய்யும் என்று முதல்வா் ரேகா குப்தா கூறினாா். மதுபன் சௌக் முதல் முகா்பா சௌக் வரையிலான வெளிப்புற ரிங் ரோடு பகுதியில் ஞாய... மேலும் பார்க்க