‘ஜானகி’ எனப் பெயரிட்டால் தணிக்கைச் சான்றிதழ் மறுப்பு? போராடும் மலையாள திரையுலகு!
சாலை விபத்தில் முதியவா் உயிரிழப்பு
வாணாபுரம் அருகே மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டம், மூங்கில்துறைப்பட்டு காமராஜா் சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் ராஜீ (80).
இவா், வியாழக்கிழமை தண்ணீா் கேனை வாங்கி மோட்டாா் சைக்கிளில் வைத்துக் கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தாா்.
தமிழ்நாடு கிராம வங்கி எதிரில் சாலையை கடக்கும்போது, அவ்வழியாக வந்த டிப்பா் லாரி மோட்டாா் சைக்கிள் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த முதியவா் ராஜீ நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் மூங்கில்துறைப்பட்டு போலீஸாா் வழக்குப் பதிந்து தலைமறைவான லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனா்.