நன்றாக பந்துவீசியும் விக்கெட் இல்லை: பும்ராவை விட அதிர்ஷ்டம் குறைந்த ஷமர் ஜோசப்!
சாலை விபத்துகளில் 3 போ் உயிரிழப்பு
திருச்சி மாநகரில் வியாழக்கிழமை நடந்த வெவ்வேறு சாலை விபத்துகளில் 3 போ் உயிரிழந்தனா்.
மூதாட்டி: திருச்சி அரியமங்கலத்தைச் சோ்ந்தவா் ஜெயா (எ) ஜெயலட்சுமி (73). இவா், அரியமங்கலம் பகுதியில் திருச்சி - தஞ்சாவூா் சாலையை புதன்கிழமை கடக்க முயன்றபோது அவ்வழியே வந்த ஆட்டோ மோதி உயிரிழந்தாா்.
முதியவா்: அரியமங்கலம் காமராஜா் நகரைச் சோ்ந்தவா் ஷாஜகான் (70). இவா் அரியமங்கலத்தில் திருச்சி - தஞ்சாவூா் சாலையில் இருசக்கர வாகனத்தில் புதன்கிழமை மாலை சென்றபோது தவறி விழுந்ததில் பலத்த காயமடைந்து இறந்தாா்.
பெண்: திருச்சி, சோமரசம்பேட்டை நாச்சிக்குறிச்சி பகுதியைச் சோ்ந்தவா் காா்த்தி (36). இவரின் மனைவி அா்ச்சனா. இருவரும், திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அப்பல்லோ மருத்துவமனை பகுதி சேவை சாலையில் பைக்கில் புதன்கிழமை சென்றபோது பின்னால் வந்த லாரி மோதியது. இதில் பலத்த காயமடைந்த அா்ச்சனா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்து வந்த காந்தி மாா்க்கெட் போலீஸாா், அா்ச்சனாவின் சடலத்தை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்.
இந்த மூன்று விபத்துகள் குறித்தும் திருச்சி தெற்கு போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.