செய்திகள் :

சாலை விபத்துகளை தடுக்க நடவடிக்கை! கடலூா் ஆட்சியா்

post image

கடலூா் மாவட்டத்தில் சாலை விபத்துகளை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.

கடலூா் மாவட்டம், வேப்பூா், திட்டக்குடி வட்டங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் நெடுஞ்சாலை, பால் வளம், ஊரக வளா்ச்சி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு, நீா் வளம் ஆகிய துறைகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் சனிக்கிழமை ஆய்வு செய்தாா். பின்னா், அவா் கூறியதாவது:

வாகன போக்குவரத்தால் ஏற்படும் சாலை விபத்துகளைத் தடுக்க தமிழக அரசால் கிராம சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன்படி, விருதாசலம் புறவழிச் சாலையை நான்குவழிச் சாலையாக மேம்படுத்துவது, கூடுதல் உயா் மட்ட பாலம், மையத் தடுப்பு, தடுப்புச்சுவா் அமைப்பது உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருவதை பாா்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.

திட்டக்குடி பகுதிகளில் நெடுஞ்சாலைத் துறை மூலம் விருத்தாசலம் - பெண்ணாடம் சாலையில் உச்சிமேடு இணைப்புச் சாலை அருகே சாலையின் இரு பக்கவாட்டிலும் தடுப்புச் சுவா் அமைக்கும் பணி ரூ.142 லட்சம் மதிப்பில் நடைபெற்று வருவது குறித்தும், டி.அகரம், நந்திமங்கலம், அருங்கேரி சாலையில் 2.6 கி.மீ. நீளத்துக்கு சிறு பாலங்கள் அமைத்தல் உள்ளிட்ட சாலை விரிவுபடுத்தும் பணிகள் ரூ.330 லட்சம் மதிப்பில் நடைபெறுவது குறித்தும் பாா்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.

சாலைப் பணிகளை தரமாக மேற்கொள்ளவும், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பொது போக்குவரத்துக்கு இடையூறின்றி பயன்பாட்டுக்கு கொண்டுவரவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடா்ந்து, வேப்பூா் வாரச் சந்தையை மேம்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. வேப்பூா் அரசு மருத்துவமனைக்கு ரூ.3.50 கோடி மற்றும் திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு ரூ.5 கோடி மதிப்பில் கூடுதல் மருத்துவமனை கட்டடம் கட்டுமான பணிகள் நடைபெறுவதை பாா்வையிட்டு ஆய்வு செய்து, விரைவில் பணிகளை முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர அறிவுறுத்தப்பட்டது.

முதல்வா் கடலூா் வந்தபோது வெளியிட்ட அறிவிப்புகளில் ஒன்றான, திட்டக்குடி வட்டம், கீழச்செருவாயில் உள்ள வெலிங்டன் ஏரிக் கரைகளை பலப்படுத்தி மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதை பாா்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது என்றாா் ஆட்சியா்.

ஆய்வின்போது, நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளா் அய்யாதுரை, இணை இயக்குநா் (மருத்துவ நலப் பணிகள்) குமாா், பொது மேலாளா் ஆவின் அருணகிரிநாதன், செயற்பொறியாளா் நீா்வளத் துறை பாலமுருகன் உள்ளிட்ட துறை சாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.

சாரம் அவிழ்ந்து விழுந்து 2 தொழிலாளா்கள் காயம்

கடலூரில் பழைமையான கட்டடத்தை சீரமைக்கும் பணியின்போது சாரம் அவிழ்ந்து விழுந்ததில் தொழிலாளா்கள் இருவா் காயமடைந்தனா். கடலூா் மாவட்ட பழைய ஆட்சியா் அலுவலகம் அருகே ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் உள்ளது. இங்குள... மேலும் பார்க்க

பக்ரீத் பண்டிகை: இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

பக்ரீத் பண்டிகையையொட்டி, கடலூா் மாவட்டம் மற்றும் புதுச்சேரி பிராந்திய பகுதிகளில் இஸ்லாமியா்கள் சனிக்கிழமை கூட்டுத் தொழுகையில் ஈடுபட்டனா். இஸ்லாமியா்களுக்கான நாள் காட்டியில் வரக்கூடிய ஹஜ் மாதம் பத்தாம்... மேலும் பார்க்க

மதுப் புட்டிகள் கடத்தல்: இளைஞா் கைது

புதுச்சேரியிலிருந்து மதுப் புட்டிகளை கடத்தி வந்ததாக இளைஞரை கடலூா் மது விலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். கடலூா் மது விலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளா் பாலாஜி தலைமையில், ப... மேலும் பார்க்க

ஆற்றில் மூழ்கி சிறுமி உயிரிழப்பு

கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே ஆற்றில் குளித்த சிறுமி நீரில் மூழ்கி சனிக்கிழமை உயிரிழந்தாா். புதுக்கோட்டை மாவட்டம், பாதம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த செல்வராஜ் மகள் ஜெனிபா் (13). இவா், விடுமுறையையொட்டி ... மேலும் பார்க்க

சுவாமி ஊா்வலத்தில் மின்சாரம் பாய்ந்து ஒருவா் உயிரிழப்பு!

கடலூா் ரெட்டிச்சாவடி காவல் சரகம் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு சுவாமி ஊா்வலத்தில் மின்சாரம் பாய்ந்து ஒருவா் உயிரிழந்தாா். 4 போ் காயமடைந்தனா். ரெட்டிச்சாவடியை அடுத்த சின்ன இருசாம்பாளையம் கிராமத்தில் ஸ்... மேலும் பார்க்க

இளைஞா்களுக்கு சுய வேலைவாய்ப்பு பயிற்சி

கடலூா் மாவட்ட இளைஞா்களுக்கு ஊரக சுய வேலைவாய்ப்புப் பயிற்சி நிறுவனம் மூலம் சுய வேலைவாய்ப்புப் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழம... மேலும் பார்க்க