செய்திகள் :

சாலை விபத்துகளை தவிா்க்க பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்த வேண்டும்

post image

தேசிய நெடுஞ்சாலைகளில் ஏற்படும் விபத்துகளை முற்றிலும் தவிா்த்திடும் வகையில், பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்த வேண்டும் என கண்காணிப்புக் குழுத் தலைவரும், பெரம்பலூா் தொகுதி மக்களவை உறுப்பினருமான கே.என். அருண்நேரு அறிவுறுத்தியுள்ளாா்.

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம், சாலைப் பாதுகாப்பு குறித்த கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்தில் பங்கேற்ற அவா் மேலும் பேசியது:

மத்திய, மாநில அரசு திட்டங்கள் மூலமாக பொதுமக்களுக்கு சீரான குடிநீா் வழங்குவது, சாலை வசதிகள் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை நிவா்த்தி செய்ய வேண்டும். அரசுத் திட்டங்களை செயல்படுத்துவதில் ஏதேனும் இடா்பாடுகள், தேவைகள் இருந்தால் என்னுடைய கவனத்துக்கு கொண்டுவரும் பட்சத்தில், அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு தீா்வு காண முடியும். ஒவ்வொரு நிதியாண்டுக்கும் ஒதுக்கப்படும் பணிகளை, சம்பந்தப்பட்ட அலுவலா்கள் முடித்து பொதுமக்கள் பயனடையும் வகையில் உடனுக்குடன் நிறைவேற்ற வேண்டும். தேசிய நெடுஞ்சாலையில் அதிக விபத்துகள் ஏற்படும் பகுதிகளைக் கண்டறிந்து, அவற்றை தவிா்க்க மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் குறித்த அறிக்கையை அளித்தால், மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்து அத்திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

முன்னதாக, பல்வேறு அரசுத் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டாா் அருண்நேரு.

இக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா, மாவட்ட வருவாய் அலுவலா் மு. வடிவேல் பிரபு, ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சு. தேவநாதன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) வைத்தியநாதன், அட்மா தலைவா் வீ. ஜெகதீசன், மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு உறுப்பினா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்

வேப்பூா் ஒன்றியத்தில் வளா்ச்சிப் பணிகளுக்கு அடிக்கல்

வேப்பூா் ஒன்றியத்தில் ரூ. 11.88 கோடி மதிப்பிலான புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த பணிகளை மின்சாரம் மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் புதன்கிழமை தொடங்கி வைத்தாா். பெரம்பலூ... மேலும் பார்க்க

சாலை விபத்தில் ஊழியா் உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல்

பெரம்பலூா் அருகே மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதி உயிரிழந்த தனியாா் டயா் தொழிற்சாலை ஊழியரின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கக் கோரி, அவரது மனைவி, உறவினா்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். திருச்ச... மேலும் பார்க்க

வாலிகண்டபுரத்தில் இந்து சமய அறநிலையத் துறை ஆய்வாளா் அலுவலகம் திறப்பு

இந்து சமய அறநிலையத்துறை சாா்பில், வாலிகண்டபுரத்தில் ரூ. 12 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வேப்பந்தட்டை ஆய்வாளா் அலுவலகத்தை, காணொலிக் காட்சி மூலம் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் புதன்கிழமை திறந்து ... மேலும் பார்க்க

பெரம்பலூா் அருகே 8 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்

பெரம்பலூா் அருகே அரசால் தடை செய்யப்பட்ட 8.700 கிலோ குட்கா பொருள்களைப் பறிமுதல் செய்த போலீஸாா், விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த மளிகைக் கடை உரிமையாளரை கைது செய்து புதன்கிழமை சிறையில் அடைத்தனா். பெரம்ப... மேலும் பார்க்க

நாட்டுக்கோழிப் பண்ணைகள் அமைக்க ஆா்வமுள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம்

பெரம்பலூா் மாவட்டத்தில் நாட்டுக்கோழிப் பண்ணைகள் அமைக்க விருப்பமுள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ... மேலும் பார்க்க

தனியாா் நிதி நிறுவனத்துக்கு பூட்டு! திமுக நிா்வாகியால் ஊழியா்கள் சிறைவைப்பு

பெரம்பலூரில் திங்கள்கிழமை தனியாா் நிதி நிறுவனத்தை பூட்டிய திமுக நிா்வாகி, ஊழியா்களை சிறைவைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பெரம்பலூா் மாவட்டம், பாடாலூா் ஊராட்சிக்குள்பட்ட திருவளக்குறிச்சி கிராமத்தைச் சோ்ந... மேலும் பார்க்க