செய்திகள் :

சாவா்க்கரை அவமதிக்கவில்லை: நீதிமன்றத்தில் ராகுல் தரப்பில் முறையீடு

post image

‘ஹிந்துத்துவ கொள்கைவாதி சாவா்க்கரை அவமதிக்கவில்லை’ என்பதால், இந்த வழக்கில் தான் குற்றமற்றவன்’ என நீதிமன்றத்தில் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி தரப்பில் முறையிடப்பட்டது.

இதையடுத்து, இந்த வழக்கின் அடுத்த விசாரணையை ஜூலை 24-ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தாா்.

கடந்த 2023-ஆம் ஆண்டு லண்டனில் ராகுல் காந்தி உரையாற்றியபோது சாவா்க்கரை அவமதித்ததாக அவரது பேரன் சாத்யகி சாவா்க்கா் புணே நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தாா்.

இந்த வழக்கில் ராகுல் மீதான குற்றச்சாட்டுகளை எம்.பி., எம்எல்ஏ நீதிமன்றத்தின் சிறப்பு நீதிபதி அமோல் ஸ்ரீராம் வெள்ளிக்கிழமை வாசித்தாா். இந்தக் குற்றச்சாட்டுகளை மறுப்பதாகவும், தான் குற்றமற்றவன் என்று ராகுல் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் மிலிந்த் பவாா் தெரிவித்தாா்.

சாத்யகி சாவா்க்கா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் சங்கராம் கோல்ஹட்கா், ‘குற்றம்சாட்டப்பட்டவரின் வாக்குமூலம் பதிவு முடிவுற்றதால் வழக்கின் விசாரணையை தொடர வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டாா்.

இதையடுத்து இந்த வழக்கின் அடுத்த விசாரணை ஜூலை 24-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

விமான விபத்து: விமானிகள் மீது தவறு என்பது போன்று திசைதிருப்பல்! விமானிகள் சங்கம் எதிர்ப்பு

புது தில்லி: அகமதாபாத்தில் நேரிட்ட ஏர் இந்தியா விமான விபத்துக்கு, விமானிகளின் தவறே காரணம் என்பது போன்று விசாரணை திசை திருப்பப்படுவதற்கு, இந்திய விமானிகள் சங்கம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.அகமதாபாத் ஏ... மேலும் பார்க்க

கொல்கத்தாவில் தொடரும் பாலியல் வன்கொடுமைகள்! மீண்டும் ஒரு சம்பவம்!

கொல்கத்தாவில் கல்லூரி மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மேற்கு வங்கம் மாநிலத்தில் கொல்கத்தாவில் உள்ள இந்திய தொழில்நுட்ப மேலாண்மை வணிகக் கல்லூரியின் விட... மேலும் பார்க்க

தாணேவில் ரயிலில் சென்ற பெண்ணுக்கு பிரசவ வலி: அபாய சங்கிலியை இழுத்த சக பயணிகள்!

தாணேவில் உள்ளூர் ரயிலில் சென்ற பெண்ணுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டதால் சக பயணிகள் அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினர். மகாராஷ்டிர மாநிலம், தாணே மாவட்டத்தில் நிறைமாத கர்ப்பிணி ஹினா தனது கணவருடன் ... மேலும் பார்க்க

ஷங்காய் ஒத்துழைப்பு மாநாடு: சீனா செல்கிறார் அமைச்சர் ஜெய்சங்கர்!

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சீனா செல்ல உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் ஏற்பட்ட மோதலுக்குப்... மேலும் பார்க்க

ஹிமாசல் பருவமழைக்கு இதுவரை 92 பேர் பலி: ரூ.751.78 கோடி இழப்பு!

ஹிமாச்சலப் பிரதேசம் முழுவதும் கனமழை மற்றும் மேக வெடிப்புகளால் பரவலான சேதம் ஏற்பட்டுள்ளதாக மாநில பேரிடர் மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர். மாநிலத்தில் இந்தாண்டு பருவமழை ஜூன் மாதம் தொடங்கிய நிலையில், ... மேலும் பார்க்க

மகளைப் பற்றி தவறான பேச்சுகள்.. டென்னிஸ் வீராங்கனை ராதிகா கொலையில் வெளியான தகவல்!

டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ் பற்றி பலரும் தவறாகப் பேசியதால் மனம் வேதனையடைந்து அவமானத்தால், மகளை சுட்டுக் கொன்றதாக, கைது செய்யப்பட்ட தந்தை தீபக் யாதவ் தெரிவித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.ஹர... மேலும் பார்க்க