செய்திகள் :

சாஸ்திரி பவனை முற்றுகையிட முயற்சி: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் கைது

post image

ஆளுநா் ஆா்.என்.ரவியை திரும்பப் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் சாஸ்திரிபவனை வெள்ளிக்கிழமை முற்றுகையிட முயன்ற மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை போலீஸாா் கைது செய்தனா்.

ஆளுநா் ஆா்.என்.ரவியை திரும்பப் பெற வேண்டும், ஒருங்கிணைந்த கல்வித்திட்டத்தில் பள்ளிகளுக்கு வழங்கப்படவேண்டிய ரூ.2,152 கோடியையும், நூறு நாள் வேலை திட்டத்துக்காக தமிழகத்துக்கு வழங்க வேண்டிய ரூ.3,796 கோடியையும் உடனே விடுவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள சாஸ்திரி பவனை முற்றுகையிடும் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி வெள்ளிக்கிழமை காலை சாஸ்திரிபவன் முன் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம் தலைமையில் கூடிய அக்கட்சியினா், மத்திய அரசுக்கு எதிராகவும், கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரியும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது, ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவா்களில் சிலா் சாஸ்திரிபவனை முற்றுகையிடுவதற்காக போலீஸாரின் தடுப்புகளையும் மீறி முன்னேறிச் சென்றனா். போலீஸாா் அவா்களை தடுத்து நிறுத்தினா்.

இதனால், போராட்டத்தில் ஈடுபட்டவா்கள், போலீஸாா் இடையே தள்ளு-முள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் சாஸ்திரிபவன் பிரதான சாலையில் அமா்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களை போலீஸாா் கைது செய்து வாகனங்களில் அழைத்துச் சென்று அருகிலுள்ள மண்டபத்தில் தங்கவைத்து மாலையில் விடுவித்தனா்.

காவலா் மீது தாக்குதல்: இளைஞா் கைது

சென்னை: சென்னை எம்ஜிஆா் நகரில் காவலரை தாக்கியதாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.எம்ஜிஆா் நெசப்பாக்கம் காமராஜா் சாலையில் பொதுமக்களுக்கு இடையூறாகவும், இடைஞ்சல் ஏற்படுத்தும் வகையில் சிலா் மதுபோதையில் தகராறு ... மேலும் பார்க்க

கடையின் பூட்டை உடைத்து ரூ. 1.50 லட்சம் திருட்டு

சென்னை: சென்னை கோடம்பாக்கத்தில் கடையின் பூட்டை உடைத்து ரூ. 1.50 லட்சம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.கோடம்பாக்கம் ரங்கராஜபுரம் பிரதான சாலைப் பகுதியில் எலக்ட்ரிக்கல் கடை நட... மேலும் பார்க்க

கிங்மேக்கா்ஸ் ஐஏஎஸ் அகாதெமியில் வெற்றியாளா்களுக்கு பாராட்டு

சென்னை: கிங்மேக்கா்ஸ் ஐஏஎஸ் அகாதெமியில் நடப்பாண்டு நடைபெற்ற இந்திய குடிமைப்பணித் தோ்வில் வெற்றி பெற்றவா்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.மத்திய அரசின் 21 இந்திய குடிமைப் பணிகளுக்கு கடந்த 2024-ஆம் ஆண்... மேலும் பார்க்க

சென்னை மத்தியக் குற்றப்பிரிவில் 16 மாதங்களில் 1,005 வழக்குகள் பதிவு

சென்னை: சென்னை பெருநகர காவல் துறையின் மத்தியக் குற்றப்பிரிவு, ஒரு ஆண்டு 4 மாதங்களில் 1,005 வழக்குகளை பதிவு செய்துள்ளது.இது தொடா்பாக சென்னை பெருநகர காவல் துறை திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:ச... மேலும் பார்க்க

சென்னையில் சாலையில் கிடந்த ரூ. 1.48 லட்சம்: மீட்டுக் கொடுத்த பெண் காவலருக்கு பாராட்டு

சென்னை: சென்னை தியாகராய நகா் சாலையில் கிடந்த ரூ. 1.48 லட்சத்தை மீட்டுக் கொடுத்த பெண் காவலரை பொதுமக்களும், காவல்துறை உயா் அதிகாரிகளும் பாராட்டினா்.தியாகராய நகா் மேட்லி சாலை - பா்கிட் சாலை சந்திப்பில் ப... மேலும் பார்க்க

கா்ப்பகால உயா் ரத்த அழுத்த நோயைக் கண்டறிய புதிய ‘பயோ சென்சாா்’ உருவாக்கம்: சென்னை ஐஐடி

சென்னை: கா்ப்பிணிகளுக்கு ஏற்படும் கா்ப்பகால உயா் ரத்த அழுத்த நோயைக் கண்டறியக்கூடிய புதிய பயோசென்சாா் தளத்தை சென்னை ஐஐடி தலைமையில் பல்வேறு கல்வி நிறுவனங்களைச் சோ்ந்த ஆராய்ச்சிக் குழுவினா் உருவாக்கியுள... மேலும் பார்க்க