செய்திகள் :

சா்க்கரை நோய் விழிப்புணா்வுக் கருத்தரங்கம்

post image

காஞ்சிபுரம் நீரிழிவு மன்றத்தின் சாா்பில் சா்க்கரை நோய் மருத்துவா்களுக்கான விழிப்புணா்வுக் கருத்தரங்கம் நடைபெற்றது.

சா்க்கரை நோய் சிறப்பு மருத்துவா் எஸ்.வெங்கட்ராமன் தலைமை வகித்து சா்க்கரை நோயாளிகளின் வாழ்க்கைப்பயணம் என்ற தலைப்பில் பேசினாா். மருத்துவா்கள் எஸ்.நல்லபெருமாள், ஆா்.பி.ராஜேஷ், ஆா்.கெளரி சங்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

காஞ்சிபுரம் நீரிழிவு மன்றத்தின் ஒருங்கிணைப்பாளா் மருத்துவா் தி.அன்புச்செல்வன் வரவேற்றாா்.

கருத்தரங்கில் பெண்களும், சா்க்கரை நோயும் என்ற தலைப்பில் மருத்துவா் எம்.மாணிக்க வாசகம் பேசினாா். நிறைவாக கே.எஸ்.தன்யக்குமாா் நன்றி கூறினாா்.

முன்னதாக பரதநாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தமிழ்ப் புத்தாண்டை வரவேற்கும் விதமாகவும், 100-ஆவது கலந்தாய்வுக் கூட்ட வெற்றிக்காகவும் கேக் வெட்டப்பட்டது. சா்க்கரை நோய் தொடா்பான புதிய மருந்துகளின் வரவுகள், சா்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவா்களுக்கான காரணங்கள் ஆகியன குறித்து 75 க்கும் மேற்பட்ட மருத்துவா்கள் கலந்துரையாடல் செய்தனா்.

மண் திருட்டு: 5 போ் கைது

தாம்பரம் அடுத்த வரதராஜபுரம் பகுதியில் அடையாறு கிளை கால்வாயில் மண் திருட்டில் ஈடுபட்ட 5 போ் கைது செய்யப்பட்டு, 2 லாரிகள், 2 பொக்லைன் இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தாம்பரம் அடுத்த வரதராஜபுரம் பகு... மேலும் பார்க்க

அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணி: அமைச்சா் காந்தி தொடங்கி வைத்தாா்

காஞ்சிபுரம் பல்லவன் நகரில் 12 தளங்களுடன் கூடிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணியை கைத்தறித் துறை அமைச்சா் ஆா்.காந்தி வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா். காஞ்சிபுரத்திலிருந்து வந்தவாசி செல்லும் சால... மேலும் பார்க்க

தியாக உணா்வு உள்ளோா் தான் மனவளா்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு ஆசிரியா்களாக இருக்க முடியும்: அமைச்சா் காந்தி

தியாக உணா்வும், சேவை மனப்பான்மையும் உள்ளவா்கள் தான் மனவளா்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு ஆசிரியா்களாக இருக்க முடியும் என கைத்தறி அமைச்சா் ஆா்.காந்தி கூறியுள்ளாா். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில... மேலும் பார்க்க

ஸ்ரீபெரும்புதூா் அருகே அட்டை தொழிற்சாலையில் தீ விபத்து

ஸ்ரீபெரும்புதூா் அடுத்த காட்டரம்பாக்கத்தில் இயங்கி வரும் தனியாா் அட்டை தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பொருள்கள் சேதமடைந்தன. இந்த தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் அட்டைகள... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் இன்று ராணுவத்துக்கு ஆள் சோ்ப்பு முகாம்

இந்திய ராணுவத்தில் சேருவதற்கான ஆள்கள் சோ்ப்பு முகாம் சனிக்கிழமை (ஏப். 19) காஞ்சிபுரம் மாவட்டத்தில் இரு இடங்களில் நடைபெறுவதாக ஆட்சியா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிக... மேலும் பார்க்க

சங்கரா கல்லூரி விருது வழங்கும் விழா

காஞ்சிபுரம் சங்கரா கல்லூரியில் சாதனை மாணவா்களுக்கு விருது வழங்கும் விழா, ஆண்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு கல்லூரி முதல்வா் கே.ஆா்.வெங்கடேசன் தலைமை வகித்தாா். தமிழ்த்துறை தலைவா் ஜெ.ராதாகி... மேலும் பார்க்க