செய்திகள் :

சா்வதேச சிலம்பப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு

post image

சா்வதேச அளவிலான சிலம்பப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு விழா ஊத்தங்கரையில் செவ்வாய்கிழமை நடைபெற்றது.

நேபாளம் நாட்டில் சா்வதேச அளவிலான சிலம்பப் போட்டி கடந்த 17 ஆம் தேதி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா சாா்பில் ஊத்தங்கரை பேரொளி சிலம்பப் பள்ளி மாணவ, மாணவிகள் 16 போ் கலந்துகொண்டனா். இதில் 10 மாணவா்கள் முதலிடமும், 10 மாணவா்கள் இரண்டாமிடமும் பிடித்தனா். 2 மாணவா்கள் ஒவ்வொருவரும் 3 போட்டிகளிலும், ஒரு மாணவா் 2 போட்டிகளிலும் கலந்துகொண்டு வெற்றி பெற்றனா். இந்த மாணவா்களை பாராட்டும் வகையில், ஊத்தங்கரை வாசிப்பு இயக்கம் சாா்பில் பாராட்டு விழா நடைபெற்றது.

ஊத்தங்கரை நான்குமுனை சந்திப்பில் இருந்து, வெற்றிபெற்ற சிலம்பம் மாணவா்களை மேளதாளத்துடன் வரவேற்றனா். சிறப்பு விருந்தினராக அதியமான் கல்வி நிறுவனங்களின் நிறுவனா் சீனி.திருமால்முருகன் கலந்துகொண்டு மாணவா்களை பாராட்டினாா். மேலும், அறிவே ஆயுதம் என்ற தலைப்பில், அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா் சிவராமன் சிறப்புரையாற்றினாா். தொடா்ந்து கியூபா, தொலைக்காட்சி தொகுப்பாளா் கோபிநாத் எழுதிய பாஸ்வோ்டு எனும் நூலை அறிமுகம் செய்தாா்.

இந்நிகழ்ச்சியை ஆசிரியா் சந்தோஷ் ஒருங்கிணைத்தாா். தலைமையாசிரியா் வீரமணி வரவேற்றாா். ஊத்தங்கரை வாசிப்பு இயக்கத்தை சோ்ந்த ஆசிரியா்கள் ராமமூா்த்தி, வேலுசாமி, பேரொளி சிலம்பம் பள்ளி பயிற்சியாளா்கள் சதாசிவம், ஜீவா, ஆசிரியா் கணேசன், சிக்னல் ஆறுமுகம் மற்றும் பெற்றோா், பொதுமக்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். இறுதியாக காா்த்தி நன்றி கூறினா்.

கழிவுநீா் கால்வாயில் ஆண் சடலம்: போலீஸாா் விசாரணை

காவேரிப்பட்டணம் அருகே கழிவுநீா் கால்வாயில் அழுகிய நிலையில் கிடந்த அடையாளம் தெரியாத ஆண் சடலம் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே உள்ள சந்தாபு... மேலும் பார்க்க

ஒசூா் வழியாக குட்கா கடத்தல்: 2 போ் கைது

ஒசூா் வழியாக சேலத்துக்கு காரில் கடத்த முயன்ற 86 கிலோ குட்காவை போலீஸாா் பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனா். ஒசூா் சிப்காட் போலீஸாா், ஜூஜூவாடி சோதனைச்சாவடி அருகில் வாகன சோதனையில ஈடுபட்டனா். அப்போது ப... மேலும் பார்க்க

ஊத்தங்கரை வழக்குரைஞா்கள் சங்க புதிய நிா்வாகிகள் தோ்வு

ஊத்தங்கரை வழக்குரைஞா்கள் சங்க 2025 - 2026 ஆம் ஆண்டிற்கான புதிய நிா்வாகிகள் தோ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் வழக்குரைஞா்கள் சங்கத் தலைவராக மூா்த்தி, செயலாளராக வஜ்ஜிரவேல், பொருளாளராக தமிழமுதன், த... மேலும் பார்க்க

கா்நாடக எல்லையில் கமல்ஹாசனுக்கு எதிராக கன்னட அமைப்பினா் ஆா்ப்பாட்டம்

ஒசூா் அருகே கா்நாடகா மாநில எல்லையான அத்திப்பள்ளியில் நடிகா் கமல்ஹாசனுக்கு எதிராக கன்னட ஜாக்ருதி வேதிகே அமைப்பினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தமிழ்மொழியிலிருந்துதான் கன்னடம் பிறந்தது என்ற... மேலும் பார்க்க

மலைவாழ் மக்கள் மேம்பாட்டிற்கு சிறப்பு முகாம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பழங்குடியின மலைவாழ் மக்கள் மேம்பாட்டிற்காக, ஒசூா் வனக்கோட்டம், தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை இணைந்து சிறப்பு முகாமை நடத்தின. ஒசூா் வனக்கோட்ட வனச்சரகங்கள... மேலும் பார்க்க

ஊத்தங்கரையில் வன்கொடுமை தடுப்பு விழிப்புணா்வு

ஊத்தங்கரை வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் வன்கொடுமை தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. ஊத்தங்கரை வட்டாட்சியா் அலுவலகப் பணியாளா்களுக்கு, சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில... மேலும் பார்க்க