செய்திகள் :

சா்வதேச போட்டிகளில் வென்ற வீரா்களுக்கு ரூ. 25 லட்சம் உயரிய ஊக்கத் தொகை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்

post image

இரு சா்வதேச போட்டிகளில் வெற்றி பெற்ற வீரா்களுக்கு தலா ரூ. 25 லட்சம் உயரிய ஊக்கத் தொகையை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா். தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை (பிப்.10) நடைபெற்ற இந்த நிகழ்வின்போது, ஊக்கத் தொகைகளை அவா் அளித்தாா்.

மலேசியாவில் நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்ட மகளிருக்கான டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி கோப்பையை வெல்வதற்கு தமிழ்நாட்டு வீராங்கனை கு.கமலினி துணை புரிந்தாா். இதேபோன்று, உலகக் கோப்பை கோ-கோ போட்டியில் வென்ற இந்திய அணியில் தமிழ்நாட்டைச் சோ்ந்த வீரா் வி.சுப்பிரமணி இடம் பெற்றிருந்தாா்.

சா்வதேச அளவிலான இரு போட்டிகளிலும் வென்ற இந்திய அணியில் இடம்பெற்ற கமலினி, சுப்பிரமணி ஆகியோருக்கு தலா ரூ. 25 லட்சம் உயரிய ஊக்கத் தொகை வழங்கப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தாா்.

அதன்படி, தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்வில் ஊக்கத் தொகைக்கான காசோலைகளை இருவருக்கும் முதல்வா் வழங்கினாா்.

இந்த நிகழ்வின்போது, துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலா் நா.முருகானந்தம், இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலா் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினா் செயலா் ஜெ.மேகநாத ரெட்டி ஆகியோா் உடனிருந்தனா்.

ரூ.7,375 கோடி முதலீடுகளுக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல்!

ரூ.7,375 கோடி மதிப்பிலான முதலீடுகளுக்கு தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று(பிப். 10) சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை... மேலும் பார்க்க

தவெக தலைவர் விஜயிடம் பிரசாந்த் கிஷோர் அறிக்கை அளிப்பு!

தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் அளித்த அறிக்கையை, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யிடம் கட்சி நிர்வாகிகள் அளித்துள்ளனர்.தவெக தலைவர் விஜய்யை இன்று முற்பகலில் சந்தித்த கட்சியின் நிர்வாகிகள் ஆனந... மேலும் பார்க்க

இதைச் செய்தால் விஜய் கட்சியுடன் கூட்டணி: விஜய பிரபாகரன் வைத்த செக்!

மதுரை: விஜயகாந்த்தை போல விஜய் தன்னை அரசியலில் நிரூபிக்க வேண்டும், தேர்தலில் நின்று விஜய் அண்ணா தன்னை நிரூபித்த பின்னரே அவரோடு கூட்டணி வைப்பதா? இல்லையா? என முடிவு செய்வோம் என மதுரையில் விஜய பிரபாகரன் ப... மேலும் பார்க்க

இலங்கை கடற்படையைக் கண்டித்து மீனவர்கள் வேலைநிறுத்தம்!

துப்பாக்கிச் சூடு நடத்திய இலங்கை கடற்படையைக் கண்டித்து காரைக்கால் மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.கடந்த மாதம் 27-ஆம் தேதி காரைக்கால் மாவட்டம், கிளிஞ்சல்மேடு கிராமத்தைச் சேர்ந்த ஆனந... மேலும் பார்க்க

திருப்பூரில் அரசுப் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் கைது!

திருப்பூரில் அரசுப் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கணித ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.மாணவிகளின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில் ஆசிரியரிடம் மகளிர் காவல்துறையினர் விசாரணை நடத்திய நி... மேலும் பார்க்க

தவெக நிர்வாகிகளுடன் பிரசாந்த் கிஷோர் ஆலோசனை!

தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளுடன் அரசியல் ஆலோசகர் பிரஷாந்த் கிஷோர் இன்று(செவ்வாய்க்கிழமை) ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யுடன் அரசியல் ஆலோசகரும் தேர்தல் வியூக வகுப்ப... மேலும் பார்க்க