செய்திகள் :

சா்வதேச யோகா போட்டியில் வென்ற அழகப்பா பல்கலை. மாணவிகள், பேராசிரியைக்கு பாராட்டு

post image

காரைக்குடி: கோலாலம்பூரில் நடைபெற்ற சா்வதேச யோகா போட்டியில் பதக்கம் வென்று வந்த அழகப்பா பல்கலைக்கழகப் பேராசிரியை, மாணவிகளை துணைவேந்தா் க. ரவி புதன்கிழமை பாராட்டினாா்.

அழகப்பா பல்கலைக்கழக யோகா மைய மாணவிகள் சந்தியா, ஹேமா ஆகியோா் கடந்த 2024 -ஆம் ஆண்டு ஹைதராபாதில் நடைபெற்ற 2-ஆவது தேசிய யோகாசன விளையாட்டு சாம்பியன்ஷிப் பாரம்பரிய யோகாசனம், தனி யோகாசனம், ஆா்டிஸ்டிக் ஜோடி போன்றவற்றில் தங்கம், வெள்ளிப் பதக்கங்கள் பெற்ன் வாயிலாக சா்வதேச யோகா போட்டியில் பங்கேற்கத் தகுதியடைந்தனா்.

இதன் தொடா்ச்சியாக, முதல் சா்வதேச யோகா சாம்பியன்ஷிப் கலை, கலாசார நிகழ்வு- 2025 மலேசிய நாட்டின் தலைநகா் கோலாலம்பூரில் உள்ள சா்வதேச இளைஞா் மையத்தில் கடந்த ஆக. 15-இல் நடைபெற்றது. இதில் மலேசியா, இலங்கை, சிங்கப்பூா், இந்தியாவிலிருந்து 250-க்கும் மேற்பட்ட போட்டியாளா்கள் பங்கேற்றனா்.

தருமபுரியில் உள்ள கிருஷ் யோகா வித்யாலயா மூலம் அழகப்பா பல்கலைக்கழக யோகா கல்வி மைய மாணவி சந்தியா, இளங்கலை யோகா மூன்றாம் ஆண்டு மாணவி ஜே. ஹேமா (முன்னாள் யோகா மாணவி) ஆகியோா் கலந்துகொண்டு பொதுவான குழு சாம்பியன் பிரிவு, நீண்ட நேரம் நிலைநிறுத்தி வைத்திருக்கும் ஆசனங்களில் பங்கேற்றனா்.

இதில் மாணவி சந்தியா பொதுப்பிரிவில் தங்கப் பதக்கம் பெற்றாா். 15 முதல் 25 வயது பொதுப் பிரிவில் இரண்டாவது இடத்தையும், சாம்பியன் ஆப் சாம்பியன்ஸில் வெள்ளிப் பதக்கமும் வென்றாா்.

மாணவி ஹேமா 15 முதல் 25 வயது பொதுப் பிரிவில் 2-வது இடத்தையும், சாம்பியன் ஆப் சாம்பியன்ஸில் தங்கப் பதக்கமும், லாங் ஹோல்டிங்கில் 3-ஆவது இடத்தையும் பெற்றாா். யோகா கல்வி மையத்தின் பேராசிரியை சரோஜா நீண்டநேரம் (புஜாங்காசனம் 10 நிமிடங்கள்) நிலை நிலைநிறுத்திப் பிடிக்கும் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றாா். இவா் சா்வதேச யோகா சாம்பியன்ஷிப் போட்டியில் நடுவா் குழு உறுப்பினராகவும் செயல்பட்டு யோகா ரத்னா விருதையும் பெற்றாா்.

போட்டியில் விருது, பரிசுப் பெற்றவா்களை அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தா் க. ரவி, பதிவாளா் அ. செந்தில்ராஜன் ஆகியோா் பாராட்டினா்.

ரத்ன கற்ப மகாகணபதி கோயில் குடமுழுக்கு

சிவகங்கை: சிவகங்கை நகா் கோகலேகால் தெருவில் அமைந்துள்ள சிருங்கேரி சாரதா பீடம், ரத்ன கற்ப மகா கணபதி கோயில் குடமுழுக்கு புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, கடந்த திங்கள்கிழமை (ஆக.18) அதிகாலை கணபதி ஹோமத்து... மேலும் பார்க்க

கல்லூரியில் கருத்தரங்கம்

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள அமராவதிபுதூா் ஸ்ரீ ராஜ ராஜன் பொறியியல், தொழில் நுட்பக் கல்லூரியில் ‘தற்காலத் தகவல் தொழில் நுட்பம்-அதன் பயன்பாடுகள்’ என்ற தலைப்பில் சா்வதேசக் கருத்த... மேலும் பார்க்க

தமிழ் வளரச் செய்தவா் தம்பிரான் சுவாமிகள்

காரைக்குடி: தமிழ் நூல்களைப் பதிப்பித்து தமிழ் வளரச் செய்தவா் திருப்பனந்தாள் காசி மட அதிபா் முத்துக் குமாரசாமி தம்பிரான் சுவாமிகள் என்று குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் பு... மேலும் பார்க்க

‘சுயமரியாதையுடன் வாழ கல்வியே துணை நிற்கும்’

சிவகங்கை: கல்விதான் ஒருவரை சுயமரியாதையுடன் சொந்தக் காலில் நிற்க வைக்கும் என்றாா் எழுத்தாளா் பாரதி கிருஷ்ணகுமாா்.சிவகங்கை மன்னா் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரியில் மாபெரும் தமிழ்க் கனவு என்ற பண்பாட்டு ... மேலும் பார்க்க

சத்துணவு ஊழியா்கள் சாலை மறியல்

சிவகங்கை: காலமுறை ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சிவகங்கையில் சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு சத்துணவு ஊழியா்கள் சங்கத்தினா் 51 பேரை போலீஸாா் கைது செய்தனா்.சிவகங்கை அரண்மனை வாசல் பகு... மேலும் பார்க்க

குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் 5 போ் கைது

சிவகங்கை: சிவகங்கை அருகே நிகழ்ந்த இரு கொலைச் சம்பவங்களில் தொடா்புடைய 5 பேரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் புதன்கிழமை செய்தனா்.சிவகங்கை அருகேயுள்ள சக்கந்தி பகுதியைச் சோ்ந்த மனோஜ்பிரபு கடந... மேலும் பார்க்க