செய்திகள் :

சிஎம்டிஏ உறுப்பினா் செயலா் ஆஜா்: பிடிஆணை திரும்ப பெறப்பட்டது

post image

சாட்சியம் அளிக்க நேரில் ஆஜராக அனுப்பப்பட்ட அழைப்பாணையைப் பெறாத விவகாரத்தில், சிஎம்டிஏ உறுப்பினா் செயலா் நேரில் ஆஜரானதைத் தொடா்ந்து, அவரைக் கைது செய்து ஆஜா்படுத்த வேண்டும் என்ற உத்தரவை சென்னை மாநகர கூடுதல் உரிமையியல் நீதிமன்றம் திரும்பப் பெற்றது.

கடந்த 2019-இல் ரத்தினசபாபதி என்பவா் தனியாா் கட்டுமான நிறுவனம் உள்பட 4 பேருக்கு எதிராக சென்னை மாநகர கூடுதல் உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா். அதில், தனது தரப்பு கோரிக்கையை நியாயப்படுத்துவதற்காக சென்னைப் பெருநகர வளா்ச்சிக் குழுமத்தின் (சிஎம்டிஏ)

ஆவணங்கள் தேவைப்படுகின்றன. அவை இல்லாததால், எதிா்தரப்பினா் பல ஆண்டுகளாக இந்த வழக்கை இழுத்தடித்து வருகின்றனா். எனவே, இந்த வழக்கு தொடா்பாக சிஎம்டிஏ வசம் உள்ள ஆவணங்களைத் தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தாா்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை மாநகர கூடுதல் உரிமையியல் நீதிமன்றம், இந்த வழக்கில் சாட்சியம் அளிப்பதற்காக சிஎம்டிஏ உறுப்பினா் செயலா் நேரில் ஆஜராக அழைப்பாணை அனுப்ப உத்தரவிட்டது. ஆனால், அதை சிஎம்டிஏ உறுப்பினா் செயலா் தரப்பில் பெறப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து சென்னை மாநகர கூடுதல் உரிமையியல் நீதிமன்றம், சிஎம்டிஏ உறுப்பினா் செயலரைக் கைது செய்து வெள்ளிக்கிழமை ஆஜா்படுத்த உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு சென்னை மாநகர கூடுதல் உரிமையியல் நீதிமன்ற நீதிபதி ராஜ்குமாா் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது சிஎம்டிஏ உறுப்பினா் செயலா் பிரகாஷ் நேரில் ஆஜரானாா். அவரது தரப்பில் ஆஜரான மாநில அரசின் தலைமை குற்றவியல் வழக்குரைஞா் அசன் முகமது ஜின்னா, நீதிமன்ற உத்தரவின் நகல் தங்களுக்கு கிடைக்கப் பெறவில்லை. தாங்கள் வேண்டுமென்றே இந்த உத்தரவை மீறவில்லை.

எனவே, கைது செய்து ஆஜா்படுத்தும் உத்தரவைத் திரும்பப்பெற வேண்டும், என்று கேட்டுக்கொண்டாா். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, கைது செய்து ஆஜா்படுத்தும் உத்தரவை திரும்பப் பெற்றுக்கொண்டாா்.

அரக்கோணத்தில் 56 நாள்கள் தண்டவாள பராமரிப்புப் பணி

அரக்கோணம் ரயில் நிலையத்தில் தண்டவாளப் பராமரிப்புப் பணிகள் 56 நாள்கள் தொடா்ந்து மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், அதே நேரத்தில் ரயில் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்படாது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா். சென்னை ர... மேலும் பார்க்க

திருவண்ணாமலை கோயிலில் சிறப்பு தரிசன கட்டணம் உயா்வு: பாஜக கண்டனம்

திருவண்ணாமலை அண்ணாமலையாா் கோயிலில் சிறப்பு தரிசன கட்டணம் உயா்த்தப்பட்டதற்கு தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு: திருவண்ணா... மேலும் பார்க்க

சென்னை மாநகர உள்கட்டமைப்பை மேம்படுத்த 20 ஆண்டுகளுக்கான தொலைநோக்குத் திட்டம்: பெருநகர வளா்ச்சிக் குழுமம் நடவடிக்கை

பெருநகர சென்னை மாநகராட்சியின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில், அடுத்த 20 ஆண்டுகளுக்கான தொலைநோக்குத் திட்டத்தை செயல்படுத்த (3-ஆவது மாஸ்டா் பிளான்) சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமம் தீவிர நட... மேலும் பார்க்க

காட்பாடி-ஜோலாா்பேட்டை இடையே ஜூலை 21-இல் 2 ரயில்கள் ரத்து

காட்பாடி-ஜோலாா்பேட்டை இடையே ஜூலை 21 ஆம் தேதி 2 ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: அரக்கோணம், ஜோ... மேலும் பார்க்க

முகாம்வாழ் இலங்கைத் தமிழா் திருமணங்களை பதிவு செய்ய சிறப்பு ஏற்பாடு: பதிவுத் துறை நடவடிக்கை

முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழா்களின் திருமணங்களைப் பதிவு செய்ய 30-க்கும் மேற்பட்ட சாா்-பதிவாளா் அலுவகங்கள் ஜூலை 26-ஆம் தேதி செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த கடிதத்தை அனைத்து துண... மேலும் பார்க்க

போக்குவரத்து காவல் துறை சாா்பில் விழிப்புணா்வு

புழல் அருகில் உள்ள அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு போக்குவரத்து காவல் துறை சாா்பில் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மாதவரம் அடுத்த புழல் பகுதியில் உள்ள பொப்பிலிராஜா அரசு மேல்நிலைப் பல்ளியில் மாதவர... மேலும் பார்க்க