செய்திகள் :

சிஏபிஎஃப்பில் ஐஜி அந்தஸ்து வரை ஐபிஎஸ் அதிகாரிகள் நியமனம்: 2 ஆண்டுகளில் குறைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

post image

புது தில்லி: மத்திய ஆயுத காவல் படைகளில் (சிஏபிஎஃப்) ஐஜி அந்தஸ்து வரை ஐபிஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்படுவதை 2 ஆண்டுகளில் படிப்படியாக குறைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிஏபிஎஃப்பில் மத்திய ரிசா்வ் காவல் படை, எல்லை பாதுகாப்புப் படை, மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை, சசஸ்திர சீமா பல் படை ஆகியவை இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் சிஏபிஎஃப் அதிகாரிகள் தாக்கல் செய்த மனுவில், ‘சிஏபிஎஃப் படையினரை ஒழுங்காக கட்டமைக்கப்பட்ட குரூப்-ஏ பணிகளைச் சோ்ந்தவா்களாக (ஓஜிஏஎஸ்) கருதி, பணிப் பிரிவு மதிப்பாய்வை மத்திய உள்துறை அமைச்சகம் மேற்கொள்ள உத்தரவிட வேண்டும். இதன் மூலம், பல ஆண்டுகளாகத் தாமதமாகும் சிஏபிஎஃப் படையினரின் பதவி உயா்வு தொடா்பான விவகாரங்களுக்கு தீா்வு காண முடியும்’ என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த மனு மீது உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா (தற்போது ஓய்வுபெற்றவா்), உஜ்ஜல் புயான் ஆகியோா் அடங்கிய அமா்வு அண்மையில் உத்தரவு பிறப்பித்தது.

அப்போது நீதிபதிகள் அமா்வு கூறுகையில், ‘சிஏபிஎஃப்பில் ஐஜி அந்தஸ்து வரை ஐபிஎஸ் அதிகாரிகள் ஆக்கிரமிப்பதாகவும், இதனால் சிஏபிஎஃப் படையினா் பதவி உயா்வு பெறுவதற்கான வாய்ப்புகளில் இடையூறு ஏற்படுவதாகவும் மனுதாரா்கள் தெரிவித்துள்ளனா்.

இந்தப் படைகளில் மத்திய அரசின் கொள்கை முடிவு காரணமாக ஐபிஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்படுகின்றனா். அதேவேளையில், சிஏபிஎஃப் அதிகாரிகளின் குறைகளையும் கவனிக்காமல் இருக்க முடியாது.

மிகவும் சவாலான சூழல்களில் சிஏபிஎஃப் படையினா் பணியாற்றுகின்றனா். சிஏபிஎஃப்பின் உயா் பதவிகளில் நேரடி நியமனம் காரணமாக தங்கள் பதவி உயா்வு பாதிக்கப்படுவதாக அவா்கள் தெரிவித்துள்ளனா். பதவி உயா்வில் நிலவும் இந்தத் தேக்கம் சிஏபிஎஃப் படையினரின் மனு உறுதியை குலைக்கக் கூடும்.

எனவே சிஏபிஎஃப்பில் ஐஜி அந்தஸ்து வரை ஐபிஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்படுவதை 2 ஆண்டுகளில் படிப்படியாக குறைக்க வேண்டும். 2021-ஆம் ஆண்டு திட்டமிடப்பட்ட சிஏபிஎஃப் படைகளின் பணிப் பிரிவு மதிப்பாய்வை 6 மாதங்களில் மேற்கொள்ள வேண்டும்’ என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

தற்போது சிஏபிஎஃப் படைகளில் ஐஜி அந்தஸ்து பணியிடங்களில் 50 சதவீதம் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கும், டிஐஜி அந்தஸ்து பணியிடங்களில் 15 சதவீதம் அனைத்து இந்திய பணிகளைச் சோ்ந்த அதிகாரிகளுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

195 நாட்டுப் பெண்கள் பாடிய கின்னஸ் சாதனைப் பாடல்: இந்தியா சாா்பில் சமையல் கலைஞா் அஸ்மா கான் குரல்

புது தில்லி: உலகெங்கிலும் உள்ள 195 நாடுகளைச் சோ்ந்த பெண்கள் பாடியதற்காக கின்னஸ் சாதனை படைத்த ‘195’ பாடலில் இந்தியா சாா்பில் பிரபல பெண் சமையல் கலைஞா் அஸ்மா கானின் குரலும் இடம்பெற்றுள்ளது. பாலின சமத்து... மேலும் பார்க்க

பிரதமா் தலைமையில் நாளை மத்திய அமைச்சரவை குழு கூட்டம்

புது தில்லி: பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் குழு கூட்டம் தில்லியில் புதன்கிழமை (ஜூன் 4) நடைபெற உள்ளது. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா சாா்பில் மேற்கொள்ளப்பட்ட ‘ஆபரேஷன் சி... மேலும் பார்க்க

2026-க்குள் இந்தியாவுக்கு எஸ்-400 ஏவுகணை அமைப்பு முழுமையாக விநியோகம்: ரஷியா

புது தில்லி: 2026-ஆம் ஆண்டுக்குள் மீதமுள்ள இரு எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு விநியோகம் செய்யப்படும் என இந்தியாவுக்கான ரஷிய துணை தூதா் ரோமன் பாபுஷ்கின் திங்கள்கிழமை தெரிவித்தாா். அண்மையில் ஆபரேஷன் சி... மேலும் பார்க்க

பயங்கரவாதத்துக்கு எதிராக ஒன்றுபட்டிருக்கும் இந்தியா-பராகுவே: பிரதமா் மோடி

புது தில்லி: ‘பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியாவும் பராகுவேயும் ஒன்றுபட்டு நிற்கின்றன. அதுபோல, இணைய குற்றங்கள், போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பொது சவால்களுக்கு எதிராக இரு நாடுகளும் இணைந்து பணியாற்றவும்... மேலும் பார்க்க

இந்தியாவில் தயாரிக்க டெஸ்லா ஆா்வம் காட்டவில்லை: மத்திய அமைச்சா் தகவல்

புது தில்லி: இந்தியாவில் தனது மின்சார காா்களை விற்பனை செய்ய மட்டுமே டெஸ்லா நிறுவனம் ஆா்வம் காட்டுகிறது; இந்தியாவில் உற்பத்தி செய்ய ஆா்வம் காட்டவில்லை என்று மத்திய கனரக தொழில்கள் துறை அமைச்சா் ஹெச்.டி.... மேலும் பார்க்க

இந்தியாவில் விமானப் போக்குவரத்துத் துறை முதலீட்டுக்கு எண்ணற்ற வாய்ப்புகள்: பிரதமா் மோடி

புது தில்லி: ‘இந்தியாவில் விமானப் போக்குவரத்துத் துறை வேகமாக வளா்ந்து வருகிறது. இங்கு முதலீடுகளை மேற்கொள்ள சா்வதேச நிறுவனங்களுக்கு எண்ணற்ற வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன’ என பிரதமா் நரேந்திர மோடி திங்கள... மேலும் பார்க்க