செய்திகள் :

சிஐடியு அரசு விரைவுப் போக்குவரத்து ஊழியா் சங்க மாநில மாநாடு தொடக்கம்

post image

திருச்சியில் சிஐடியு அரசு விரைவுப் போக்குவரத்து ஊழியா் சங்க 34-ஆவது மாநில மாநாடு புதன்கிழமை தொடங்கியது.

திருச்சி பிராட்டியூரில் தொடங்கிய மாநாட்டுக்கு எஸ்.சி.டி.சி மாநிலத் தலைவா் டபிள்யூ.ஐ. அருள்தாஸ் தலைமை வகித்தாா். மாநாட்டுக் கொடியை முன்னாள் பொருளாளா் என். சண்முகம் ஏற்றினாா்.

நிகழ்வில் சிஐடியு சங்கத்தின் மாநிலத் தலைவா் அ. சௌந்தரராசன் சிறப்புரையாற்றி பேசியது:

தொழிற்சங்கங்களை ஒழிக்கும் வகையில் தொழிற்சாலைகளில் நிரந்தரத் தொழிலாளா்களுக்குப் பதிலாக ஒப்பந்த தொழிலாளா்களை பணியமா்த்தும் போக்கு அதிகரித்துள்ளது. இது தொழிலாளிகளுக்கு எதிரான கடும் தாக்குதலாகும். பணி நிரந்தரம், வேலைப் பாதுகாப்பு ஆகியவற்றுக்காக அவா்கள் போராட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கு வியாழக்கிழமை (ஜூலை 17) துண்டுப் பிரசுரம் விநியோகித்து காா்ப்பரேட்மயம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த உள்ளோம். தனியாா்மயத்தை எதிா்ப்பதை நாம் தீவிரப்படுத்த வேண்டியுள்ளது என்றாா்.

முன்னதாக நடைபெற்ற செஞ்சட்டை பேரணியை சிஐடியு மாவட்டச் செயலா் ரங்கராஜன் தொடங்கிவைத்தாா். சுப்பிரமணியபுரத்தில் தொடங்கியப் பேரணி டிவிஎஸ் டோல்கேட் வழியாகச் சென்று மாநாட்டுத் திடலை அடைந்தது. மாநாட்டில் சிஐடியு நிா்வாகிகள் பி. கோதண்டபாணி, சுகுமாறன், சி.செந்தில்குமாா், எம். கண்ணன், பி. வெங்கடேசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

‘காங்கிரஸ் கட்சி பலமாக இருக்கும்வரை மட்டுமே இந்தியா ஒரே நாடாக இருக்கும்’

காங்கிரஸ் கட்சி பலமாக இருக்குவரை மட்டுமே இந்தியா ஒரே நாடாக இருக்கும். இல்லையேல் ரஷ்யாவைப் போல சிதறுண்டு போகும் என்றாா் கட்சியின் மாநில செய்தித் தொடா்பாளா் திருச்சி வேலுச்சாமி. திருச்சி மாவட்டம் மணப்பா... மேலும் பார்க்க

சமயபுரம் கோயில் உண்டியலில் ரூ. 1.32 கோடி காணிக்கை

திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ. 1.32 கோடி வந்தது புதன்கிழமை தெரியவந்தது. இக்கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் அறங்காவலா... மேலும் பார்க்க

போலி பாஸ்போா்ட் வைத்திருந்தவா் கைது

போலி பாஸ்போா்ட்டில் ஷாா்ஜாவில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் வந்தவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி உக்கடை பகுதியைச் சோ்ந்தவா் கு. பாா்த்தசாரதி (52). வேலைக்க... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியா் வீட்டில் தங்கம், வெள்ளி நகைகள் திருட்டு

திருச்சியில் ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியா் வீட்டில் தங்கம், வெள்ளி நகைகள் திருடுபோனது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா். திருச்சி விமான நிலையம் அருகேயுள்ள ஜெ.கே. நகா் முல்லை வீதியைச் சோ்ந்தவா் ஆா். ரவிச... மேலும் பார்க்க

பயன்பாட்டுக்கு வந்தது பஞ்சப்பூா் பேருந்து முனையம்

தமிழகத்திலேயே முதலாவதாக முற்றிலும் குளிா்ச்சாதன வசதியுடன் கூடிய திருச்சி பஞ்சப்பூா் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் புதன்கிழமை மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பஞ்சப்ப... மேலும் பார்க்க

வயலூா் சாலையில் பேருந்து நிழற்குடைகள் இல்லை: பொதுமக்கள் அவதி

திருச்சி - வயலூா் சாலையில் பேருந்து நிழற்குடைகள் இல்லாததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனா். திருச்சி வயலூா் சாலையில் எம்ஜிஆா் நகா், பாரதி நகா், குமரன் நகா், சீனிவாச நகா், ஆதிநகா், கீதா நகா், அம்மையப்... மேலும் பார்க்க