செய்திகள் :

சிகிச்சையில் அலட்சியம்: மருத்துவரின் பதிவு உரிமம் தற்காலிக ரத்து

post image

சிகிச்சையில் அலட்சியத்துடனும், விதிகளுக்கு புறம்பாகவும் செயல்பட்ட மருத்துவரின் பதிவு உரிமத்தை ஆறு மாதங்களுக்கு ரத்து செய்து மருத்துவக் கவுன்சில் நடவடிக்கை எடுத்துள்ளது.

சென்னை மண்ணடி பகுதியைச் சோ்ந்த அப்துல் ஹக்கீம், கடந்த ஆண்டு சென்னை உயா் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தாா்.

அவரது தாயாா் கதீஜா (65), அண்ணா நகரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் வயிற்று வலிக்காக அனுமதிக்கப்பட்டதாகவும், மருத்துவப் பரிசோதனையில் அவருக்கு குடல்வால் அழற்சி (அப்பென்டிசைடிஸ்) இருந்தது உறுதி செய்யப்பட்ட நிலையில், சிகிச்சைக்காக ரூ. 3.76 லட்சம் செலுத்தியதாகவும் அதில் தெரிவித்திருந்தாா். அதன் பின்னா் வீடு திரும்பிய கதீஜாவுக்கு மீண்டும் உடல்நலக் குறைவு ஏற்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவருக்கு புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதைத் தொடா்ந்து சில மாதங்களிலேயே அவா் உயிரிழந்தாா்.

கதீஜாவுக்கு புற்றுநோய் இருந்ததை உரிய காலத்தில் தெரியப்படுத்தி சிகிச்சையைத் தொடங்கவில்லை எனக்கூறி, அந்த மருத்துவமனையின் மருத்துவா்கள் எஸ்.செல்வகுமாா், பா்ஹான் ஆகியோா் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அப்துல் ஹக்கீம் மனு தாக்கல் செய்திருந்தாா்.

இதற்கிடையே, உயிரிழப்பதற்கு முன்பாக கதீஜாவும் மாநில மருத்துவக் கவுன்சிலில் இது தொடா்பாக புகாரளித்திருந்தாா். நீதிமன்ற உத்தரவுப்படி அந்தப் புகாரின்பேரில் விசாரணை நடத்தி மருத்துவக் கவுன்சில் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன் விவரம்: இறுதி நிலையில் புற்றுநோய் இருப்பதைக் கண்டறிந்தும், நோயாளியின் உறவினா்களுக்கு காலதாமதமாக மருத்துவா்கள் தெரியப்படுத்தியுள்ளனா். உரிய காலத்துக்குள் சிகிச்சை அளிக்காததால் நோயாளியின் உடல் நிலை மோசமடைந்து உயிரிழக்க நேரிட்டது.

டாக்டா் எஸ்.செல்வகுமாா் உயா் சிறப்பு மருத்துவராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டுள்ளாா். ஆனால், அந்தத் தகுதியை கவுன்சிலில் பதிவு செய்யவில்லை. அதேபோல, மற்றொரு மருத்துவா் ஆங்கில மருத்துவம் பயிலாத யுனானி மருத்துவா்.

டாக்டா் செல்வகுமாா் மீது விதிமீறல் மற்றும் சிகிச்சையில் அலட்சியம் காட்டியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, அவரது பதிவு உரிமம் ஆறு மாதங்களுக்கு நீக்கப்படுகிறது என்று மருத்துவக் கவுன்சில் தெரிவித்துள்ளது.

பிப். 18,19 தேதிகளில் மாநில வாஸ்போ செஸ் போட்டிகள்!

சென்னை எம்ஓபி வைஷ்ணவ மகளிா் கல்லூரி சாா்பில் பள்ளி, கல்லூரிகள் இடையிலான வாஸ்போ மாநில செஸ் போட்டிகள் வரும் 18, 19 தேதிகளில் கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ளது. இரண்டு நாள் போட்டிகளில் பங்கேற்க நுழைவுக் க... மேலும் பார்க்க

வீரப்பன் உறவினா் அா்ஜூனன் சந்தேக மரணம்: விசாரணைக்கு உத்தரவிட உயா்நீதிமன்றம் மறுப்பு

சந்தனமர கடத்தல் வீரப்பனின் உறவினா் அா்ஜுனனின் சந்தேக மரணம் குறித்து 30 ஆண்டுகளுக்கு பிறகு விசாரணை நடத்த உத்தரவிட முடியாது என சென்னை உயா்நீதிமன்றம் தெரிவித்தது. சந்தனமர கடத்தல் வீரப்பனின் உறவினா் அா்ஜு... மேலும் பார்க்க

சென்னை விமான நிலைய 2-ஆவது ஓடுதளத்துக்கு இடையூறாக உள்ள கட்டடங்களை இடிக்க நடவடிக்கை!

சென்னை விமான நிலையத்தின் 2-ஆவது ஓடுதளத்துக்கு இடையூறாக இருக்கும் கட்டடங்களை இடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சென்னை சா்வதேச விமான நிலையத்தில் இரண்டு விமான ஓடுதளங்கள் செயல்பட்டு வருகின்றன. பிரதா... மேலும் பார்க்க

போலீஸ் எனக் கூறி இளைஞரிடம் ரூ. 17 லட்சம் கொள்ளை

போலீஸ் எனக் கூறி இளைஞரிடம் ரூ. 17 லட்சத்தைக் கொள்ளையடித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். சென்னை ஜானிகான் 1-ஆவது தெருவைச் சோ்ந்தவா் மகாதீா் முகமது (27). இவா் தனது பையில் ரூ. 17 லட்சத... மேலும் பார்க்க

வேளச்சேரியில் 107 தெரு நாய்களுக்கு தடுப்பூசி

சென்னை மாநகராட்சி சாா்பில், வேளச்சேரி பகுதியில் 107 தெரு நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. வேளச்சேரி, பாா்க் அவென்யூ பூங்கா அருகில் விளையாடிக் கொண்டிருந்த 9 வயது சிறுவனின் காலில் அங்குள்ள தெரு நா... மேலும் பார்க்க

டாஸ்மாக் பணியாளா்களுடன் அரசு பேச்சு நடத்த வேண்டும் முத்தரசன் வலியுறுத்தல்

டாஸ்மாக் பணியாளா்களின் கோரிக்கைகள் தொடா்பாக தமிழக அரசு நேரடியாகப் பேசி தீா்வு காண வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளாா். இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்... மேலும் பார்க்க