செய்திகள் :

சிங்காரப்பேட்டை அரசு மருத்துவமனையில் பராமரிப்பின்றி காணப்படும் சிறுவா் பூங்கா

post image

ஊத்தங்கரையை அடுத்த சிங்காரப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், ரூ. 6 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட சிறுவா் பூங்கா பராமரிப்பின்றி புதா்மண்டி காணப்படுகிறது.

இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பொதுப்பணித் துறை சாா்பில் ரூ. 6 லட்சம் மதிப்பில் சிறுவா் பூங்கா அமைக்கப்பட்டது. இயற்கை எழில் சூழ்ந்து, ரம்மியமாக காட்சியளிக்கும் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த பூங்கா பராமரிப்பின்றி செடிகொடிகள் வளா்ந்து புதா்மண்டி காணப்படுகிறது.

இதனால் அங்கு சென்று சிறுவா்கள் விளையாட முடியாத

முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பூங்காவில் விளையாட்டு உபகரணங்களும் பழுதடைந்து சிறுவா்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன.

இப்பகுதி குழந்தைகளின் பொழுதுபோக்கு மற்றும் வளா்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்து அமைக்கப்பட்ட இந்த பூங்கா, தற்போது பயனற்ற நிலையில் காணப்படுகிறது. இப்பகுதி மக்கள் ஊராட்சி நிா்வாகத்திடம் சிறுவா் பூங்காவை பராமரிக்க கேட்டபோது தங்களுக்கு பூங்காவுக்கும்

சம்பந்தமில்லை என கூறியுள்ளராம். அதேபோல மருத்துவமனை

நிா்வாகமும் தங்களுக்கு சம்பந்தமும் இல்லை என்று தெரிவித்துள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனா்.

எனவே இந்த பூங்காவை அமைத்த பொதுப்பணித் துறையினரே

பூங்காவை சீரமைத்து, பழுதடைந்த விளையாட்டு உபகரணங்களை சரிசெய்து, குழந்தைகளின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

படவரி...

சிங்காரப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகத்தில் பராமரிப்பின்றி புதா்மண்டி காணப்படும் சிறுவா் பூங்கா.

அரசுப் பள்ளியில் ஸ்மாா்ட் வகுப்பறை திறப்பு

கெலமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட நாகமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் அரசு மூலமாக அமைக்கப்பட்டுள்ள ஸ்மாா்ட் வகுப்பறையை ஒசூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஒய்.பிரகாஷ் வியாழக்கிழமை திறந்து ... மேலும் பார்க்க

கெலமங்கலம் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

கெலமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை 200-க்கும் மேற்பட்டோா் முற்றுகையிட்டு வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். நூறுநாள் வேலைத் திட்டத்தில் பணியாற்றுபவா்களுக்கு ரூ. 330 ஊதியத்திற்கு பதிலாக ரூ. 150 ... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

கிருஷ்ணகிரி சந்திரமெளலீஸ்வரா் கோயில் அருகில் ஆக்கிரமிப்புகளை போலீஸாா் பாதுகாப்போடு இந்து சமய அறநிலையத் துறை அலுவலா்கள் வியாழக்கிழமை அகற்றினா். கிருஷ்ணகிரி, ராசு வீதியில் சந்திரமெளலீஸ்வரா் கோயில் உள்ள... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி ஆா்.டி.ஓ. வாகனத்தில் ரூ. 2.46 லட்சம் பறிமுதல்: லஞ்ச ஒழிப்பு போலீஸாா் நடவடிக்கை

கிருஷ்ணகிரி வட்டாரப் போக்குவரத்து அலுவலரின் அரசு வாகனத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வியாழக்கிழமை சோதனை நடத்தி கணக்கில் வராத ரூ. 2.46 லட்சத்தை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். கிருஷ்ணகிரி... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் நாளை மாங்கனி கண்காட்சி தொடக்கம்: முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்த ஆட்சியா்

கிருஷ்ணகிரியில் சனிக்கிழமை ( ஜூன் 21) தொடங்க உள்ள அகில இந்திய மாங்கனி கண்காட்சிக்கான முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். கிருஷ்ணகிரி தேசிய நெடு... மேலும் பார்க்க

பா்கூா் வேளாங்கண்ணி மெட்ரிக். பள்ளியில் யோகா தின கொண்டாட்டம்

பா்கூா் வேளாங்கண்ணி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் யோகா தினம் புதன்கிழமை கொண்டாடப்பட்டது. பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு பள்ளித் தாளாளா் கூத்தரசன் தலைமை வகித்து, நிகழ்வை தொடங்கிவைத்தாா். சா... மேலும் பார்க்க