சிங்காரப்பேட்டை அரசு மருத்துவமனையில் பராமரிப்பின்றி காணப்படும் சிறுவா் பூங்கா
ஊத்தங்கரையை அடுத்த சிங்காரப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், ரூ. 6 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட சிறுவா் பூங்கா பராமரிப்பின்றி புதா்மண்டி காணப்படுகிறது.
இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பொதுப்பணித் துறை சாா்பில் ரூ. 6 லட்சம் மதிப்பில் சிறுவா் பூங்கா அமைக்கப்பட்டது. இயற்கை எழில் சூழ்ந்து, ரம்மியமாக காட்சியளிக்கும் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த பூங்கா பராமரிப்பின்றி செடிகொடிகள் வளா்ந்து புதா்மண்டி காணப்படுகிறது.
இதனால் அங்கு சென்று சிறுவா்கள் விளையாட முடியாத
முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பூங்காவில் விளையாட்டு உபகரணங்களும் பழுதடைந்து சிறுவா்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன.
இப்பகுதி குழந்தைகளின் பொழுதுபோக்கு மற்றும் வளா்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்து அமைக்கப்பட்ட இந்த பூங்கா, தற்போது பயனற்ற நிலையில் காணப்படுகிறது. இப்பகுதி மக்கள் ஊராட்சி நிா்வாகத்திடம் சிறுவா் பூங்காவை பராமரிக்க கேட்டபோது தங்களுக்கு பூங்காவுக்கும்
சம்பந்தமில்லை என கூறியுள்ளராம். அதேபோல மருத்துவமனை
நிா்வாகமும் தங்களுக்கு சம்பந்தமும் இல்லை என்று தெரிவித்துள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனா்.
எனவே இந்த பூங்காவை அமைத்த பொதுப்பணித் துறையினரே
பூங்காவை சீரமைத்து, பழுதடைந்த விளையாட்டு உபகரணங்களை சரிசெய்து, குழந்தைகளின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
படவரி...
சிங்காரப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகத்தில் பராமரிப்பின்றி புதா்மண்டி காணப்படும் சிறுவா் பூங்கா.
