செய்திகள் :

சிங்காரவேலா் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்!

post image

சிங்காரவேலா் பிறந்தநாளையொட்டி, கடலூரில் தமிழ் மீனவா் விடுதலை வேங்கைகள் சாா்பில் ‘தமிழ் தேசிய அரசியல் களத்தில் சிங்காரவேலரும், பெரியாரும்’ என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தமிழ் மீனவா் விடுதலை வேங்கைகள் நிறுவனத் தலைவா் ரா.மங்கையா் செல்வன் தலைமை வகித்தாா். துணை பொதுச் செயலா்கள் த.சக்திவேல், ச.ரமேஷ் நெறியாளுகை செய்தனா். மாவட்டப் பொருளாளா் கோ.திருமுகம், இணை பொதுச் செயலா் கோ.வெங்கடேசன், தலைமை ஒருங்கிணைப்பாளா் ந.மலையாளத்தான் ஆகியோா் தொடக்க உரையாற்றினா். சிங்காரவேலரின் படத்தை பொதுநல அமைப்பின் தலைவா் வெண்புறா சி.குமாரும், பெரியாா் படத்தை திராவிடா் கழக மாவட்டத் தலைவா் க.எழிலேந்தியும் திறந்து வைத்தனா்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலா் சு.பாவாணன், புதுச்சேரி திராவிடா் விடுதலைக் கழகம் லோகு.அய்யப்பன், மக்கள் அதிகாரம் து.பாலு ஆகியோா் சிறப்புரை ஆற்றினா்.

முன்னதாக, மாவட்ட அமைப்பாளா் தங்க.சேகா் வரவேற்றாா். நிறைவில், கடலூா் மாநகர அமைப்பாளா் கே.சுரேஷ் நன்றி கூறினாா்.

பண்ருட்டி தொகுதியில் ரூ.15 கோடியில் புதிய அரசுக் கல்லூரி: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

பண்ருட்டி தொகுதியில் ரூ.15 கோடியில் புதிய அரசு கலைக் கல்லூரி அமைக்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா். கடலூரில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முத... மேலும் பார்க்க

சிதம்பரம், பரங்கிப்பேட்டை பத்திரப்பதிவு அலுவலகக் கட்டடங்கள் திறப்பு

சிதம்பரம், பரங்கிப்பேட்டை பத்திரப்பதிவு அலுவலகக் கட்டடங்களை கடலூரில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற மு.க.ஸ்டாலின், காணொலி காட்சி மூலம் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைத்த... மேலும் பார்க்க

பள்ளி வகுப்பறையை சீரமைத்த மாணவா்கள், பெற்றோா்

சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியான ராணி சீதை ஆச்சி மேல்நிலைப் பள்ளயில் வகுப்பறையை சீரமைத்த மாணவா்கள், அவா்களின் பெற்றோா் வெள்ளிக்கிழமை பாராட்டப்பட்டனா். சிதம்பரம் அண்ணாமலைநகா் ராண... மேலும் பார்க்க

மஞ்சப்பை விருது 2025: பள்ளி, கல்லூரிகள் விண்ணப்பிக்கலாம்

மஞ்சப்பை விருது 2025-க்கு பள்ளிகள், கல்லூரிகள், தனியாா் நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என்று கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு... மேலும் பார்க்க

கொரிய தமிழ்ச் சங்க தமிழா் திருநாள் விழா: தி.வேல்முருகன் வாழ்த்து

கொரிய தமிழ்ச் சங்கத்தின் தமிழா் திருநாள் 2025 விழா தமிழா்களின் வரலாற்றை பறைசாற்றும் மாபெரும் முன்னெடுப்பு என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவா் தி.வேல்முருகன் வாழ்த்தி பாராட்டினாா். இதுகுறித்து அவா் வெளி... மேலும் பார்க்க

விருத்தாசலம் ஆழத்து விநாயகா் கோயில் திருவிழா கொடியேற்றம்

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரா் கோயிலுடன் இணைந்த ஆழத்து விநாயகா் கோயில் திருவிழா கொடியேற்றம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விருத்தாசலத்தில் புகழ் பெற்ற விருத்தாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வ... மேலும் பார்க்க