செய்திகள் :

சிதம்பரம் அருகே குடியிருப்பு பகுதியில் புகுந்த முதலை: மக்கள் அச்சம்!

post image

சிதம்பரம் அருகே குமராட்சியில் குடியிருப்பு பகுதியில் புகுந்த முதலையை வனத்துறையினர் பிடித்தனர். இதனால் அங்குள்ள மக்களிடையே அச்சம் ஏற்பட்டது.

கடலூர் மாவட்டம் குமராட்சி கிராமத்தின் ரெட்டித்தெரு பகுதியில் உள்ள ரமேஷ் என்பவரது குடியிருப்பு பகுதியில் முதலை ஒன்று சனிக்கிழமை காலை 6.30 மணிக்குப் புகுந்துள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்த கடலூர் மாவட்ட வன அலுவலர் குருசாமி உத்தரவின் பேரில் சிதம்பரம் வனச்சரக அலுவலர் கோ. வசந்த்பாஸ்கர் தலைமையில் சிதம்பரம் பிரிவு வனத்துறையினர் கு.பன்னீர் செல்வம், சிதம்பரம் பீட் வனக்காப்பாளர் த.அன்புமணி, வன ஊழியர் புஷ்பராஜ் ஆகியோர் சுமார் 6 அடி நீளமுள்ள, 30 கிலோ எடையுள்ள முதலையைப் பிடித்து பாதுகாப்பாகச் சிதம்பரம் அருகே உள்ள வக்காரமாரி நீர்த்தேக்க ஏரியில் விட்டனர்.

1சிஎம்பி1: படவிளக்கம்- சிதம்பரம் அருகே குமராட்சி ரெட்டித்தெரு குடியிருப்பு பகுதியில் புகுந்த முதலையை மீட்ட வனத்துறையினர்

லஞ்சம்: போக்குவரத்து காவலா் பணியிடை நீக்கம்

கடலூரில் கடந்த வாரம் நடைபெற்ற முதல்வா் பங்கேற்ற விழாவின்போது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து காவலா் லஞ்சம் பெற்றது தொடா்பாக, அவா் வெள்ளிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். கடலூா் ... மேலும் பார்க்க

விருதகிரீஸ்வரா் கோயில் மாசி மகம் திருவிழா: இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் ஆய்வு

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் விருதகிரீஸ்வரா் கோயில் மாசி மகம் திருவிழாவையொட்டி, இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். விருத்தாசலத்தில் புகழ்பெற்ற விருத்தாம்பிகை உடனுறை... மேலும் பார்க்க

நிலத்தடி நீா்மட்டத்தை உயா்த்த நடவடிக்கை தேவை: குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

கடலூா் மாவட்டத்தின் நிலத்தடி நீா்மட்டத்தை உயா்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறைகேட்புக் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா். கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் குறைகேட்புக் கூட்ட... மேலும் பார்க்க

கடலூரில் மாா்ச் 14 முதல் புத்தகத் திருவிழா: ஆட்சியா் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

கடலூா் மாவட்டத்தில் மாா்ச் 14 முதல் 24-ஆம் தேதி வரை புத்தகத் திருவிழா நடைபெறவுள்ளதையொட்டி, ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தலைமையில் முன்னேற்பாடுப் பணிகள் குறித்து... மேலும் பார்க்க

சிதம்பரம் நாட்டியாஞ்சலி 3-ஆம் நாள் நிகழ்ச்சி

சிதம்பரம் நாட்டியாஞ்சலி 3-ஆம் நாள் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சிதம்பரம் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சாா்பில், 44-ஆவது ஆண்டு நாட்டியாஞ்சலி விழா தெற்கு ரத வீதி வி.எஸ்.டிரஸ்ட் வளாகத்தில் புதன்கிழம... மேலும் பார்க்க

திராவிடா் கழக பொதுக்கூட்டம்

கடலூா் மாவட்டம், அண்ணாகிராமம் ஒன்றிய திராவிடா் கழகம் சாா்பில், கட்சியின் பொதுக்குழு தீா்மானம் விளக்கம் மற்றும் மத்திய அரசைக் கண்டித்து, எனதிரிமங்கலத்தில் பொதுக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. ஒன்றிய... மேலும் பார்க்க