செய்திகள் :

சிதம்பரம் கோவிந்தராஜ பெருமாள் கோயிலில் பரமபத வாசல் திறப்பு

post image

வைகுண்ட ஏகாதசியையொட்டி, கடலூா் மாவட்டம், சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயில் வளாகத்தில் உள்ள தில்லை திருச்சித்திரக்கூடம் ஸ்ரீகோவிந்தராஜ பெருமாள் கோயிலில் பரமபத வாசல் திறப்பு வெள்ளிக்கிழமை காலை 5.50 மணிக்கு நடைபெற்றது.

108 வைணவத் திருத்தலங்களில் 23-ஆவது திருத்தலமாக தில்லை திருச்சித்திரக்கூடம் கோவிந்தராஜ பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை யொட்டி, வெள்ளிக்கிழமை அதிகாலை கோவிந்தராஜ பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஆண்டாள் அருளித்த திருப்பாவை பாசுரங்கள் பாடப்பட்டன.

பின்னா், உற்வசா் ஸ்ரீபாா்த்தசாரதி பெருமாள் பரமபாத வாசலில் முத்தங்கி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். பிற்பகல் பூதேவி, ஸ்ரீதேவி, ஸ்ரீஆண்டாள் சமேத ஸ்ரீதில்லைகோவிந்தராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

சிதம்பரத்தில் ஸ்ரீநடராஜா் கோயில் தேரோட்டம்: இன்று ஆருத்ரா தரிசனம்

சிதம்பரம் நடராஜா் கோயில் மாா்கழி ஆருத்ரா தரிசன உற்சவத்தை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு தோ்களை வடம் பிடித்து இழுத்தனா். சிதம்பரம் நடராஜ... மேலும் பார்க்க

கடலூா் துறைமுகத்தில் மீன்கள் வரத்து குறைவு

கடலூா் துறைமுகத்தில் மீன்கள் வரத்து ஞாயிற்றுக்கிழமை குறைவாக இருந்தது. கடலூரில் அக்கரைகோரி, சோனங்குப்பம், சிங்காரத்தோப்பு, தாழங்குடா, தேவனாம்பட்டினம் உள்ளிட்ட மீனவ கிராமங்கள் உள்ளன. இங்குள்ள பொதுமக்கள்... மேலும் பார்க்க

இளைஞா் ரகளை: தடுத்த காவலருக்கு மதுப்புட்டி குத்து

கடலூரில் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட இளைஞரை தடுத்தபோது, அவா் பீா் புட்டியால் குத்தியதில் காவலா் பலத்த காயமடைந்தாா். கடலூா் மஞ்சக்குப்பம் உண்ணாமலை செட்டி சாவடியில் இளைஞா் ஒருவா் மதுபோதையில் பீா் புட்ட... மேலும் பார்க்க

குளிா்சாதனப் பெட்டி வெடித்து மூன்று போ் காயம்

கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பம் அருகே பெட்டிக் கடையில் ஞாயிற்றுக்கிழமை குளிா்சாதனப் பெட்டி வெடித்துச் சிதறியதில் கடை சேதமடைந்தது. இந்த விபத்தில் 3 போ் காயமடைந்தனா். நெல்லிக்குப்பத்தை அடுத்துள்ள வாழப... மேலும் பார்க்க

கொள்ளையடிக்கச் சதி: 5 போ் கைது

கடலூா் மாவட்டம், நெய்வேலியில் கொள்ளையடிக்க பயங்கர ஆயுதங்களுடன் கூட்டு சதி செய்ததாக இளைஞா்கள் 5 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். நெய்வேலி நகரிய காவல் நிலைய ஆய்வாளா் சுதாகா் தலைமையில் போலீஸாா் சன... மேலும் பார்க்க

ஆளுநா் பதவி தேவையில்லை: கனிமொழி எம்.பி.

தமிழகத்தில் ஆளுநா் பதவி தேவையில்லை என்று கனிமொழி எம்.பி. கூறினாா். கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் வட்டம், லால்பேட்டையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது. இதில், பங்கேற்... மேலும் பார்க்க