செய்திகள் :

சிதம்பரம்: மாணவிக்குப் பாலியல் வன்கொடுமை; வீடியோ எடுத்து மிரட்டிய அண்ணாமலை பல்கலை. பேராசிரியர் கைது

post image

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண்மை கல்லூரியில் 27 வயதுடைய மாணவி ஒருவர், 2018-ல் முதுநிலை வேளாண்மை படித்து வந்தார்.

அப்போது அதே துறையில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வந்த 55 வயதுடைய ராஜா, அந்த மாணவியுடன் நெருங்கிப் பழகியிருக்கிறார். ஒருகட்டத்தில் அந்த மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்.

அப்போது அதைத் தன்னுடைய செல்போனில் வீடியோ எடுத்து வைத்திருந்த உதவிப் பேராசிரியர் ராஜா, அதைக் காட்டி மாணவியை மிரட்டி பாலியல்ரீதியாக துன்புறுத்தியிருக்கிறார்.

அண்ணாமலை பல்கலைக்கழகம்
அண்ணாமலை பல்கலைக்கழகம்

அந்த வீடியோவை வெளியில் விட்டுவிடுவேன் என்று ராஜா மிரட்டியதால், பயந்துபோன மாணவி வேறு வழியின்றி பேராசிரியர் ராஜா அழைக்கும் இடத்திற்கெல்லாம் சென்றிருக்கிறார்.

ஒரு கட்டத்தில் பயந்துபோன மாணவி, கடலூர் மாவட்ட கண்காணிப்பாளர் ஜெயக்குமாரிடம் புகாரளித்திருக்கிறார். அதையடுத்து அந்த புகாரின் மீது விசாரணை நடத்த உத்தரவிட்டார் எஸ்.பி ஜெயக்குமார்.

விசாரணையில் மாணவி அளித்த புகார் உண்மை என்று தெரிய வரவே, உதவிப் பேராசிரியர் ராஜாவைக் கைது செய்ய உத்தரவிட்டார் எஸ்.பி ஜெயக்குமார். அதனடிப்படையில் சிதம்பரம் சாரதாராம் நகரைச் சேர்ந்த ராஜாவை, அண்ணாமலை நகர் போலீஸார் கைது செய்தனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

சென்னை: 'தடாவில் தொடங்கிய 'வடை' தகராறு' - மயிலாப்பூரில் நடந்த கொலை முயற்சி; என்ன நடந்தது?

சென்னை, மயிலாப்பூர் பகுதியில் வசித்து வரும் நண்பர்களான 17 வயதுடைய இரண்டு சிறுவர்கள் கடந்த 04.05.2025 அன்று இரவு வீட்டினருகே பேசிக் கொண்டிருந்தனர்.அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த அப்பகுதியைச் சேர்ந்த ... மேலும் பார்க்க

சென்னை: லவ் டார்ச்சர்; இளம்பெண் வீட்டில் ரகளை - இளைஞரை கைது செய்த போலீஸ்!

சென்னை, வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய பெண் ஒருவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அந்தப் பெண்ணின் மூத்த மகளை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த கோகுல்குமார் என்ற இளைஞர் காதலித்து வந்திருக்கிறார். அதற்... மேலும் பார்க்க

பீகாருக்கு மாற்றி அனுப்பப்பட்ட திருத்தணி தொழிலாளரின் சடலம்; மருத்துவர் இடமாற்றம்; பின்னணி என்ன?

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தாலுகா அருகிலுள்ள பி. ஆர். பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (55). கூலித் தொழிலாளரான இவர், குடும்பத் தகராறில் மதுவில் விஷம் கலந்து குடித்தார்.அதனால் ராஜேந்திரனை அவர... மேலும் பார்க்க

அடுத்தடுத்து மோசடி புகார்; வழக்குபதிவு - சிக்கலில் அதிமுக நிர்வாகி, தொழிலதிபர் ஆற்றல் அசோக் குமார்?

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஆற்றல் அசோக் குமார். இவரின் மாமியார் சரஸ்வதி மொடக்குறிச்சி தொகுதி பாஜக எம்எல்ஏவாக இருக்கிறார். அசோக் குமாரும் ஆரம்பத்தில் பாஜகவில் இருந்த நிலையில், பிறகு அதிமுகவி... மேலும் பார்க்க

லக்கி பாஸ்கர் பாணியில் மோசடி; வாடிக்கையாளர்களின் பணத்தைத் திருடி பங்குச்சந்தை முதலீடு; பின்னணி என்ன?

ராஜஸ்தான், கோடாவில் உள்ள ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியில் மக்கள் தொடர்பு மேலாளராக இருந்தவர் சாக்‌ஷி குப்தா. இந்த வங்கியில் பணம் டெபாசிட் செய்திருந்த வாடிக்கையாளர் ஒருவர் தனது பணத்தை எடுப்பதற்காக வங்கிக்கு வந்தார... மேலும் பார்க்க

"ஆள்மாறாட்டம் செய்து ரூ.7.50 லட்சம் மோசடி" - வெளிநாட்டில் கணவரை இழந்த பெண் ஆட்சியரிடம் புகார்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள கொத்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் குணசேகரன் (வயது: 53). இவர், ஈரோடு மாவட்டம், பெருந்துறையிலுள்ள தனியார் ஏற்றுமதி நிறுவனம் வாயிலாக, கனடா சென்றிருந்த நிலையில... மேலும் பார்க்க