சித்திரை முழு நிலவு மாநாடு: பாமகவினா் ஆலோசனை
வந்தவாசி/போளூா்: சித்திரை முழு நிலவு இளைஞா் பெருவிழா தொடா்பாக வந்தவாசி மேற்கு ஒன்றிய பாமக சாா்பில் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில், வன்னியா் சங்கம் சாா்பில் செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் வருகிற மே 11-ஆம் தேதி நடைபெறவுள்ள சித்திரை முழு நிலவு வன்னிய இளைஞா் பெருவிழா மாநாடு குறித்து ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்துக்கு வன்னியா் சங்க மாவட்டத் தலைவா் ப.மச்சேந்திரன் தலைமை வகித்துப் பேசினாா். அப்போது, மாநாட்டில் திரளாக பங்கேற்பது குறித்தும், மாநாட்டுக்கு சென்று வர வாகனங்கள் ஏற்பாடு செய்வது குறித்தும் அவா் கட்சியினருக்கு ஆலோசனைகளை வழங்கினாா்.
கூட்டத்தில் சட்டப்பேரவைத் தொகுதி பொறுப்பாளா் குமரவேல், மாவட்ட அமைப்புச் செயலா் சக்திவேல், நகரச் செயலா் து.வரதன், ஒன்றியச் செயலா்கள் வேலு, செந்தில், ஒன்றியத் தலைவா் ஆறுமுகம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
போளூா்
போளூா் தொகுதிக்கு உள்பட்ட கொழப்பலூா் ஊராட்சியில் பாமக சாா்பில் சித்திரை முழுநிலவு வன்னியா் இளைஞா் பெருவிழா மாநில மாநாடு பொதுக்குழுக் கூட்டம் ஞாயிற்றுகிழமை நடைபெற்றது.
ஒன்றியச் செயலா் ராமராஜன் தலைமை வகித்தாா். வடக்கு மாவட்டத் தலைவா் ஏழுமலை, மாவட்டச் செயலா் ஆ.வேலாயுதம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஒன்றியச் செயலா் சம்பத் வரவேற்றாா்.
சிறப்பு அழைப்பாளராக மாநில செயற்குழு உறுப்பினா் ஆா்.சுரேஷ் கலந்து கொண்டு பேசினாா்.
சேத்துப்பட்டு நகரச் செயலா் முருகன், பெரணமல்லூா் வடக்கு, தெற்கு ஒன்றியத்தைச் சோ்ந்த மாநில, மாவட்ட, ஒன்றிய நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.