செய்திகள் :

தனிமையில் நெருக்கம்... வீடியோ எடுத்து ஆசைக்கு இணங்கும்படி மிரட்டிய டாக்சி டிரைவரை கொன்ற காதல் ஜோடி

post image

பஞ்சாப்பை சேர்ந்த இளம் பெண் ஒருவர் வேலை தேடி மும்பை வந்திருக்கிறார். அவர் நவிமும்பை உல்வே பகுதியில் உள்ள கம்பெனி ஒன்றில் வேலைக்கு சேர்ந்தார். கம்பெனிக்கு செல்ல சுரேந்திர பாண்டே என்பவரின் ஓலா டாக்சியை பயன்படுத்தி வந்தார். எனினும் அவர் நிரந்தரமாக தங்குவதற்கு உடனே வீடு கிடைக்கவில்லை. இது குறித்து சுரேந்திர பாண்டேயிடம் அப்பெண் பேசினார். இதையடுத்து சுரேந்திர பாண்டே தனது வீட்டில் தங்க இடம் கொடுப்பதாக தெரிவித்தார்.

சுரேந்திர பாண்டே தனது வீட்டில் தனியாக வசித்து வந்தார். இதையடுத்து அப்பெண்ணுக்கு தனது வீட்டில் தங்க இடம் கொடுத்தார். இதனிடையே, அப்பெண் வீட்டில் இருந்தபோது அவரின் காதலன் விஷால் என்பவர் வந்தார். அங்கு இருவரும் தனிமையில் நெருக்கமாக இருந்தனர். அவர்கள் தனிமையில் இருந்ததை பார்த்த, பாண்டே தனது மொபைல் போனில் வீடியோ எடுத்துக்கொண்டார். அதன் பிறகு வீடியோவை காட்டி மிரட்டி தனது ஆசைக்கு இணங்கும்படி அப்பெண்ணை பாண்டே மிரட்டி உள்ளார்.

இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இத்தகராறு முற்றிய நிலையில், அப்பெண் காதலன் என இருவரும் சேர்ந்து பாண்டேயை சுத்தியலால் அடித்து கொலை செய்துவிட்டு தப்பித்து ஓடிவிட்டனர். இருவரும் விஷாலின் சொந்த ஊரான சங்கம்னாருக்கு தப்பிச்சென்றனர்.

அங்கு அவர்கள் உறவினர்களிடம் நடந்த சம்பவத்தை எடுத்துக்கூறினர். இதையடுத்து உறவினர்கள் இருவரிடமும் சொல்லி போலீஸில் சரணடையும்படி கேட்டுக்கொண்டனர். அதன் படி அங்குள்ள போலீஸ் நிலையத்தில் உண்மையை சொல்லி சரணடைந்தனர். இதையடுத்து நவிமும்பை போலீஸாருக்கு இது குறித்து சங்கம்னார் போலீஸார் தகவல் கொடுத்தனர். நவிமும்பை போலீஸார் பாண்டேயின் வீட்டிற்கு சென்றுபார்த்தபோது அவரது உடல் அழுகிய நிலையில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.

'அந்த பொண்ணுக்கு 3 முறை நிச்சயம் ஆகிருக்கு; எல்லாமே மோசடி' - இருட்டுக்கடை உரிமையாளர் சம்பந்தி

திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா உரிமையாளரின் மகளுக்கு வரதட்சணை கொடுமை நடந்ததாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. அப்போது இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் மகள் கனிஷ்கா தன் மாமனார் யுவராஜ் சிங் மற்றும் ... மேலும் பார்க்க

ராஜபாளையம்: 'குடும்ப தகராறில் கணவன் அடித்துக் கொலை'- தற்கொலை நாடகமாடிய தாய்-மகள் கைது!

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே குடும்பத் தகராறில் கணவனை அடித்துக் கொலை செய்துவிட்டு, தற்கொலை நாடகமாடிய சம்பவத்தில் தாய்-மகள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த பரபரப்பு சம்பவம் குறித்து போல... மேலும் பார்க்க

ரயில் தண்டவாளத்தில் தண்டால்; சோஷியல் மீடியாவில் பகிரப்பட்ட வீடியோ- இளைஞரை எச்சரித்து அனுப்பிய போலீஸ்

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோயில் அருகே தாமரை குட்டி விளைபகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். 90 கிலோ உடல் எடை கொண்ட கண்ணன், தனது எடையை விட 4 மடங்கு எடை கொண்ட 370 கிலோ காரை, யோக் வாக் என்ற முறைப்படி 25 மீட்ட... மேலும் பார்க்க

`பணம் திருடியதாக சந்தேகம்’ வேதனையில் 4வது மாடியில் இருந்து விபரீத முடிவெடுத்த கோவை மாணவி

கோவை நவ இந்தியா பகுதியில் இந்துஸ்தான் மருத்துவமனை இயங்கி வருகிறது. அவர்களுக்கு சொந்தமாக பாராமெடிக்கல் சயின்ஸ் கல்லூரியும் உள்ளது. இதில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகிறார்கள். அங்கு திருவண்... மேலும் பார்க்க

`இருட்டுக்கடையைக் கேட்டு கொடுமை செய்கிறார்கள்' - கணவர் வீட்டார் மீது புதுமணப்பெண் வரதட்சணை புகார்!

``இருட்டுக்கடை அல்வா கடையை தன் பெயருக்கு எழுதிக் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் வேறொரு பெண்ணுடன் குடித்தனம் நடத்துவேன்" என தன் கணவர் மிரட்டியதாக புதுமணப் பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ... மேலும் பார்க்க

போதைப்பொருளை கடலில் போட்டு தப்பிய கடத்தல் கும்பல்; 300 கிலோ மீட்பு.. குஜராத்தில் நடந்தது என்ன?

குஜராத் கடல் பகுதியில் அடிக்கடி போதைப்பொருள் கடத்தி வரப்படுவது வழக்கமாக இருக்கிறது. குஜராத் கடல் பகுதி மட்டுமல்லாது குஜராத் துறைமுகத்திற்கும் வெளிநாட்டில் இருந்து பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான போதை... மேலும் பார்க்க