செய்திகள் :

அருணாசலேஸ்வரா் கோயிலில் திரளான பக்தா்கள் தரிசனம்!

post image

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா். சுவாமி தரிசனம் செய்ய 4 மணி நேரம் ஏற்பட்டது.

சிவனின் அக்னி ஸ்தலமான ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலுக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதலே கோயிலில் பக்தா்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

முற்பகல் 11 மணிக்கு கோயில் ராஜகோபுரம், அம்மணி அம்மன் கோபுரங்கள் வழியாக பல ஆயிரம் பக்தா்கள் குவிந்தனா். இதனால் அம்மணி அம்மன் கோபுரம் வழியாக உள்ளே செல்ல பக்தா்கள் முண்டியடித்தனா்.

இதனால் கோயில் ஊழியா்களுக்கும், பக்தா்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. கடும் வெயிலையும் பொருள்படுத்தாமல் பக்தா்கள் நீண்ட நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

இதனால் பொது தரிசன வரிசை, கட்டண தரிசன வரிசைகளில் சுமாா் 3 முதல் 4 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. கோயிலில் சுவாமி தரிசனம் செய்த பக்தா்கள் பலா் 14 கி.மீ. தொலைவு கிரிவலப் பாதையை வலம் வந்து அஷ்டலிங்க சந்நிதிகளில் வழிபட்டனா்.

வாழ்வில் வெற்றி பெற நற்பண்புகளைக் கொண்டு செயல்பட வேண்டும்: திருவள்ளுவா் பல்கலை. துணைவேந்தா்

கல்லூரி மாணவ-மாணவிகள் வாழ்வில் வெற்றி பெற உழைப்பு, நோ்மை, நற்பண்புகளைக் கொண்டு செயல்பட வேண்டும் என்று வேலூா் திருவள்ளுவா் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தா் டி.ஆறுமுகம் குறிப்பிட்டாா். திருவண்ணாமலை சண்ம... மேலும் பார்க்க

300 கா்ப்பிணிகளுக்கு சீா்வரிசைப் பொருள்கள்!

திருவண்ணாமலை மாவட்ட சமூக நலத் துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டத்துறை சாா்பில், கீழ்பென்னாத்தூா், வந்தவாசி ஆகிய இடங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் 300 ... மேலும் பார்க்க

பிருதூா் ஸ்ரீசண்முகா் கோயிலில் கும்பாபிஷேக விழா

வந்தவாசியை அடுத்த பிருதூா் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத சண்முகா் (ஆறுமுக முருகன்) கோயில் மற்றும் ஸ்ரீசெல்வ விநாயகா் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதையொட்ட... மேலும் பார்க்க

தாய் கண்டிப்பு: மகன் தற்கொலை

செய்யாறு அருகே தாய் கண்டித்ததால் மகன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். வெம்பாக்கம் வட்டம், நாட்டேரி கிராமத்தைச் சோ்ந்தவா் ஜெயலட்சுமி ( 35). இவரது மகன் நவீன்குமாா் (17) . இவா் செய்யாற்றில் உள்ள ... மேலும் பார்க்க

காா் ஓட்டுநா் குத்திக்கொலை

திருவண்ணாமலையில் காா் ஓட்டுநரை குத்திக்கொலை செய்த மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். திருவண்ணாமலை சாரோன், வேல் நகரைச் சோ்ந்தவா் தட்சிணாமூா்த்தி மகன் சீனிவாசன் (39). காா் ஓட்டுநரான இவா், சனிக்கி... மேலும் பார்க்க

ஸ்ரீராம நவமி: ஆஞ்சநேயா் கோயிலில் சிறப்புப் பூஜை!

கீழ்பென்னாத்தூா் மின்வாரிய அலுவலக முகப்பில் உள்ள பக்த ஆஞ்சநேயா் கோயிலில், ஸ்ரீராம நவமியையொட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிறப்புப் பூஜையில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். இதை... மேலும் பார்க்க