செய்திகள் :

`அதிமுக-வில் ஒரே நிலைப்பாடு இல்லை...'- செங்கோட்டையன் குறித்து தங்க தமிழ்ச்செல்வன்

post image

தேனி எம்.பி தங்க தமிழ்ச்செல்வன் இன்று மாவட்ட கலெக்டரை சந்தித்து கோடை கால குடிநீர் பிரச்னைகளை தீர்ப்பது தொடர்பாக பேசினார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த தங்க தமிழ்ச்செல்வன், ``கோடை காலத்தில் மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் தடையின்றி குடிநீர், மின்சாரம் தடையின்றி வழங்கப்பட வேண்டும். போடி பகுதி மக்கள் மற்றும் விவசாயிகளுக்கு 18 ஆம் கால்வாய் திட்டத்தின் மூலமாக பாசனத்திற்கும் குடிநீருக்கும் தண்ணீர் வழங்க வேண்டும். இதுகுறித்து கலெக்டரிடம் ஆலோசித்துள்ளேன்"

தங்க தமிழ்ச்செல்வன்

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நிலைப்பாடு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், ``செங்கோட்டையன் தனியாக டெல்லி செல்கிறார். நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்திக்கிறார். எடப்பாடி பழனிசாமியுடன் சன்டையிடுகிறார். சட்டமன்றத்தில் அதிமுக வெளிநடப்பு செய்தால் செங்கோட்டையன் விவாதத்தில் பங்கேற்கிறார். இவர்கள் செயல்பாட்டை பார்த்தால் அதிமுக வில் ஒரே நிலைப்பாட்டில் இல்லை என்பது வெட்ட வெளிச்சமாக காட்டுகிறது.

ஒன்றிய அரசு கொண்டு வந்த வக்ஃபு வாரிய சட்டத்திருத்தத்தை திமுக எதிர்க்கிறது, இது தொடர்பாக நீதிமன்றத்தின் மூலம் இஸ்லாமிய மக்களுக்கு ஒரு நல்ல தீர்வை நாங்கள் கொண்டு வருவோம்.

தேனி கலெக்டர் அலுவலகம்

திமுக அமைச்சர்கள் வீட்டில் தொடர்ந்து அமலாக்க துறை சோதனை நடத்துவது ஒன்றிய அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என்பது அனைவருக்கும் தெரிந்ததே இதை சட்டப்படி நாங்கள் சந்திப்போம்" என்றார்.

ஆணாதிக்கம், ஆபாசம், கொச்சைப் பேச்சு... ஒரு பொன்முடி சிக்கிவிட்டார். ஆனால், அவர்... இவர்?

பெண்களை மட்டம்தட்டிப் பேசுவது, வீடுகளில் காமெடி ஆக்கப்பட்டிருக்கிறது. பெண்களை ஆபாசமாகப் பேசுவது, மேடைகளில் காமெடி ஆக்கப்பட்டிருக்கிறது. அப்படித்தான், சமீபத்தில் தனது `நகைச்சுவை உணர்வை’ மேடையில் அள்ளி ... மேலும் பார்க்க

இந்தி திணிப்பு: "மகாராஷ்டிராவில் அஞ்சும் பட்னாவிஸ்; மோடி பதிலளிக்க வேண்டும்" - ஸ்டாலின் ட்வீட்!

புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்தி திணிக்கப்பட்டதாக, கடும் எதிர்ப்புகள் கிளம்பின.பின்னர், "மும்மொழிக் கொள்கையின்படி மாணவர்கள் கற்றுக்கொள்ளும் மூன்றில் இரண்டு மொழிகள் இ... மேலும் பார்க்க

Adyar park: சுட்டிக்காட்டிய விகடன்; பயன்படுத்த முடியாத நிலையிலிருந்த பூங்காவை சீரமைக்கும் அதிகாரிகள்

சென்னை அடையாறு, இந்திரா நகரில் (வார்டு 170 , மண்டலம் 13 ,பகுதி 40 ) அமைந்துள்ளபெருநகர மாநகராட்சி பூங்காவில் உள்ள சிறுவர் விளையாட்டு திடலில் இருக்கும் விளையாட்டு உபகரணங்கள் ஒன்று கூட பயன்படுத்தும் நிலை... மேலும் பார்க்க

"கட்சிக் கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும்" - உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து CPIM மேல்முறையீடு!

தமிழ்நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் வைத்துள்ள கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. பெ.... மேலும் பார்க்க

Pope: 'அடுத்த போப் யார்? - தேர்வு முறை எப்படி நடக்கும் தெரியுமா? - சுவாரஸ்ய தகவல்கள்!

கத்தோலிக்க திருச்சபையின் 266-வது போப்பாகவும், வாட்டிக்கன் நகரத்தின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட போப் பிரான்சிஸ் உடல்நலக் குறைவால் மரணமடைந்தார். அவருக்குப் பிறகு அடுத்த போப் யார்? என்ற கேள்வி எழுகி... மேலும் பார்க்க

வருவாய்த்துறை அதிகாரியை மிரட்டிய வழக்கு; காங்கிரஸ் எம்.எல்.ஏ-வுக்கு சிறைத் தண்டனை விதித்த கோர்ட்!

கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூர் சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ-வாக இருப்பவர் ராஜேஷ்குமார். இவர் காங்கிரஸ் இளைஞராணி மாவட்ட தலைவர், காங்கிரஸ் மாவட்ட தலைவர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்துவந்தார். கருங்கல் ... மேலும் பார்க்க