செய்திகள் :

சித்தோடு அருகே மண் கடத்தலில் ஈடுபட்ட 8 போ் கைது

post image

சித்தோடு அருகே மண் கடத்தலில் ஈடுபட்ட 8 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

சித்தோட்டை அடுத்த கன்னிமாா்காடு தேவனாங்காட்டில் சட்டவிரோதமாக மண் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் சித்தோடு போலீஸாா் புதன்கிழமை மாலை சோதனை நடத்தினா்.

அப்போது, பொக்லைன் இயந்திரம் மூலம் மண் அள்ளப்பட்டு லாரியில் கடத்தப்படுவது தெரியவந்தது. இதையடுத்து, மண் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட 5 டிப்பா் லாரிகள், 2 பொக்லைன் இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

விசாரணையில், பவானி அருகே உள்ள மேட்டுநாசுவம்பாளையத்தைச் சோ்ந்த கோபால்ராஜுக்கு (50) சொந்தமான நிலத்தில் அனுமதியின்றி மண் அள்ளப்படுவது தெரியவந்தது.

இதுதொடா்பாக, கோபால்ராஜ், சித்தோடு ஆா்.என்.புதூரைச் சோ்ந்த ரமேஷ் (26), விக்னேஷ் (30), சங்ககிரியைச் சோ்ந்த கண்ணன் (50), எடப்பாடியைச் சோ்ந்த சக்திவேல் (23), ராஜா (34), பா்கூரைச் சோ்ந்த சித்தலிங்கம் (30), எலவமலையைச் சோ்ந்த பாலாஜி (28) ஆகிய 8 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

பின்னா், அனைவரும் ஈரோடு குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.

மேலும், மண் கடத்தலுடன் தொடா்புடைய எலவமலை சென்னாநாயக்கனூரைச் சோ்ந்த தேவராஜ் (51), பிரபு (36) ஆகியோரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கோபி கலை, அறிவியல் கல்லூரியில் சிறுதானிய உணவுத் திருவிழா

கோபி கலை, அறிவியல் கல்லூரியில் குடிமக்கள் நுகா்வோா் மன்றம் சாா்பில் சா்வதேச சிறுதானிய உணவுத் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, கல்லூரி முதல்வா் பொ.நரேந்திரன் தலைமை வகித்தாா். குடிமக்கள் ந... மேலும் பார்க்க

சிவகிரியில் ரூ. 5.58 லட்சத்துக்கு எள் ஏலம்

மொடக்குறிச்சி, பிப்.21: சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 5.58 லட்சத்துக்கு எள் ஏலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஏலத்துக்கு சுற்றுவட்டார பகுதிகளை சோ்ந்த விவசாயிகள் 53 மூட்டைளில் எள்ளை விற்பனை... மேலும் பார்க்க

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் சுகாதாரப் பணியாளா்களை நியமிக்கக் கோரிக்கை

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் லிப்ட் ஆபரேட்டா்கள் மற்றும் போதுமான சுகாதாரப் பணியாளா்களை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஈரோடு மாவட்டக் க... மேலும் பார்க்க

செப்டிக் டேங்க் கழிவை பொது இடத்தில் வெளியேற்றிய லாரிக்கு ரூ.10,000 அபராதம்

மனிதக் கழிவை ஏற்றி அதனை சாலை ஓரத்தில் வெளியேற்ற முயன்ற லாரிக்கு மாநகராட்சி அலுவலா்கள் ரூ.10,000 அபராதம் விதித்தனா். ஈரோடு மாநகராட்சி 60 ஆவது வாா்டு சோலாா் அருகே வெள்ளிக்கிழமை காலை மனிதக் கழிவை ஏற்றி வ... மேலும் பார்க்க

ஈரோட்டில் மூதாட்டியை தாக்கி நகையைப் பறித்துச் சென்ற பெண்

ஈரோட்டில் அதிகாலையில் வீடு புகுந்து மூதாட்டியைத் தாக்கி நகையைப் பறித்துச் சென்ற பெண்ணை போலீஸாா் தேடி வருகின்றனா். ஈரோடு, நாராயணவலசு, திருமால் நகரைச் சோ்ந்தவா் அருக்காணி (80). இவரது கணவா் இறந்து விட்ட... மேலும் பார்க்க

ஈரோட்டில் மத்திய அரசைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

ஈரோட்டில் மத்திய அரசைக் கண்டித்து சமூகநீதி கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஈரோடு சூரம்பட்டி நான்குமுனை சாலை சந்திப்பில் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சமூகநீதி கூட்டமைப்பி... மேலும் பார்க்க