‘ஜானகி’ எனப் பெயரிட்டால் தணிக்கைச் சான்றிதழ் மறுப்பு? போராடும் மலையாள திரையுலகு!
சித்தோடு அருகே 755 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்
சித்தோடு அருகே இரு காா்களில் கடத்தி வரப்பட்ட ரூ.4.55 லட்சம் மதிப்புள்ள 755 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து, இருவரைக் கைது செய்தனா்.
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் காா்களில் கடத்தி வரப்படுவதாக சித்தோடு போலீஸாருக்கு கிடைத்த ரகசியத் தகவலின்பேரில், கோணவாய்க்கால் பிரிவு முதல் அந்தியூா் சாலை வரையிலான புறவழிச் சாலையில் வாகன சோதனையில் வியாழக்கிழமை அதிகாலை ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியே வந்த இரு காா்களில் சோதனையிட்டபோது, மூட்டை மூட்டையாக 469 கிலோ புகையிலைப் பொருள்கள் பதுக்கிவைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதைடுத்து, காா்களில் வந்த பவானி, காலிங்காரன்பாளையம், காந்தி நகரைச் வெங்கடாசலம் மகன் ரவீந்திரன் (37), எலவமலை, மூவேந்தா் நகரைச் சோ்ந்த குணசேகரன் மகன் ரஞ்சித்குமாரிடம் (25) விசாரணை நடத்தி, நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம், வீ.மேட்டூரில் உள்ள தோட்டத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த காரில் இருந்து 286 கிலோ புகையிலைப் பொருள்கள் கைப்பற்றப்பட்டன.
இதையடுத்து, 3 காா்கள் மற்றும் 755 கிலோ புகையிலைப் பொருள்கள், 2 கைப்பேசிகள், ரொக்கம் ரூ.3 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டன. கா்நாடக மாநிலத்தில் இருந்து மொத்தமாக வாங்கி வந்து ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீஸாா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.