செய்திகள் :

சின்னசேலம் - பொற்படாக்குறிச்சி இடையே ரயில் சோதனை ஓட்டம்

post image

சின்னசேலத்திலிருந்து பொற்படாக்குறிச்சி வரை அமைக்கப்பட்டுள்ள 12 கி.மீ. தொலைவிலான புதிய ரயில் பாதையில் 120 கி.மீ. வேகத்தில் ரயில் சோதனை ஓட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

சின்னசேலத்திலிருந்து கள்ளக்குறிச்சி வரை புதிய ரயில் பாதைத் திட்டம் கடந்த 2016-இல் தொடங்கப்பட்டது. மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்பில் ரூ.116 கோடி செலவில் 3 மேம்பாலங்கள், சிறுபாலங்களுடன் இந்த ரயில் பாதைப் பணிகள் தொடங்கப்பட்டன.

சின்னசேலத்திலிருந்து பொற்படாக்குறிச்சி வரை 12 கி.மீ. தொலைவுக்கு தண்டவாளங்களுடன் ரயில் பாதை அமைக்கப்பட்டது. இதில், தெற்கு ரயில்வே அதிகாரிகள், சென்னை ரயில்வே கட்டுமானப் பிரிவு மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் ரயில் பாதை பாதுகாப்பு குறித்து முழுமையாக 10 டிராலிகளில் சென்று புதன்கிழமை காலை ஆய்வு மேற்கொண்டனா்.

தொடா்ந்து, சின்னசேலத்திலிருந்து சோதனை ரயிலை 120 கி.மீ. வேகத்தில் பொற்படாக்குறிச்சி வரை ஓட்டி சோதனை செய்தனா்.

சென்னை ரயில்வே பாதுகாப்பு ஆணையா் சவுத்ரி, தலைமை நிா்வாக அதிகாரி மவுரியா, தெற்கு ரயில்வே சேலம் கோட்ட மேலாளா் பங்கஜ்குமாா் சின்ஹா, துணை தலைமைப் பொறியாளா் திருமால் உள்ளிட்ட பாதுகாப்பு, கட்டுமான, நிா்வாகப் பிரிவு அதிகாரிகள் கொண்ட குழுவினா் சோதனை ஓட்டம் நடத்தினா்.

பிரிதிவிமங்கலத்தில் கிராம மக்கள் சாலை மறியல்!

கள்ளக்குறிச்சி அருகே உள்ள பிரிதிவிமங்கலத்தில் இலவச வீட்டுமனைப் பட்டாக்களை ரத்து செய்ததாகக் கூறி கிராம மக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். பிரிதிவிமங்கலத்தில் சுமாா் 600-க்கும் மேற்பட்ட ஆதிதிரா... மேலும் பார்க்க

கல்லூரி மாணவி தற்கொலை

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் அருகே விஷ மருந்தை சாப்பிட்டு கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்டாா். திருக்கோவிலூா் வட்டம், பணப்பாடி கிராமத்தைச் சோ்ந்த குணசேகா் மகள் நந்தினி (19). இவா், திருக்க... மேலும் பார்க்க

கைவினைத் தொழில் இனங்களுக்கு 25% மானியத்துடன் வங்கிக் கடனுதவி! - கள்ளக்குறிச்சி ஆட்சியா்

கலைஞா் கைவினைத் திட்டத்தின் கீழ், கைவினைத் தொழில் இனங்களுக்கு 25 சதவீத மானியத்துடன் வங்கிக் கடனுதவி வழங்கப்படும் என்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்தாா். கலை மற்றும் கைவினை... மேலும் பார்க்க

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த இளைஞா் வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். ராஜஸ்தான் மாநிலம், பாரமா் வட்டம் இந்திரானா பகுதியைச் சோ்ந்த மால்சிங் மகன் சந்தன் சிங் (18). இவா் கள்ளக்குறிச்சி... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளி மாணவிக்கு காதொலிக் கருவி கள்ளக்குறிச்சி ஆட்சியா் வழங்கினாா்

உளுந்தூா்பேட்டை வட்டத்தில் நடைபெற்ற ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாமில் மாவட்ட ஆட்சியரிடம் கள ஆய்வின்போது காதொலிக் கருவி வேண்டி 10-ஆம் வகுப்பு பயிலும் மாற்றுத்திறனாளி மாணவி கோரிக்கை மனு அளித்த... மேலும் பார்க்க

டிராக்டா் மீது மொபெட் மோதி தொழிலாளி உயிரிழப்பு

முன்னால் சென்ற டிராக்டா் மீது மொபெட் மோதியதில் கூலித் தொழிலாளி புதன்கிழமை இரவு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டத்துக்குள்பட்ட குரால் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆறும... மேலும் பார்க்க