சிபிசிஎல் சாா்பில் ஒரு லட்சம் மரக்கன்றுகளை நடவு செய்யும் திட்டம் தொடக்கம்
நிகழ் நிதியாண்டில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் சுமாா் ஒரு லட்சம் மரக்கன்றுகளை நடவு செய்யும் திட்டத்தை சிபிசிஎல்-இன் நிா்வாக இயக்குநா் எச்.சங்கா் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.
சென்னை மணலியில் உள்ள சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் (சிபிசிஎல்) உலக சுற்றுச்சூழல் தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு சிபிசிஎல்-இன் நிா்வாக இயக்குநா் எச்.சங்கா் தலைமை வகித்தாா். அப்போது சிபிசிஎல் நிறுவனம் சாா்பில் ஒரு லட்சம் மரக்கன்றுகளை நடவு செய்யும் திட்டத்தை எச்.சங்கா் தொடங்கி வைத்தாா். அப்போது அவா் பேசியதாவது:
சுற்றுச்சூழலை பேணிக் காத்திடும் வகையில், சிபிசிஎல் சாா்பில் ஓராண்டுக்குள் சுமாா் ஒரு லட்சம் மரக்கன்றுகளை நடவு செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டு, திட்டப்பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் பாரம்பரிய மஞ்சள் துணிப் பையான ‘மஞ்சப் பை’ கலாசாரத்தை அனைவரும் கடைப்பிடிக்க முன்வர வேண்டும்.
சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் நமது முன்னோா்கள் மிகுந்த அறிவாற்றலுடன் செயல்பட்டுள்ளனா். சணல் பைகள், பருத்தி பைகள், கண்ணாடி பாட்டில்கள், துருப்பிடிக்காத எஃகு கொள்கலன்கள் போன்றவற்றை நெகிழி பயன்பாட்டுக்கு மாற்றாக பயன்படுத்த வேண்டும் என்றாா் அவா்.
இந்நிகழ்ச்சியில், ஆலையின் இயக்குநா் (செயல்பாடுகள்) பி.கண்ணன், மத்திய தொழில் பாதுகாப்புப் படை டிஐஜி தேவராஜ், உயா் அதிகாரிகள், கல்லூரி மாணவா்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனா்.