செய்திகள் :

சிரியாவின் கடலோர நகரங்களில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்!

post image

சிரியாவின் டார்டூஸ் மற்றும் லடாகியா ஆகிய கடலோர மாகாணங்களின் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது.

டார்டூஸ் மற்றும் லடாகியா ஆகிய மாகாணங்களின், மக்கள் குடியிருப்புகளின் அருகில் அமைந்துள்ள முன்னாள் சிறப்புப் படையின் தலைமையகம் மற்றும் ராணுவ தளங்களைக் குறிவைத்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டார்டூஸ் நகரத்தில் சிறப்புப் படைகள் பயன்படுத்திய ராணுவ தளங்கள் மற்றும் அல்-வுஹைப் தொழிற்பேட்டை ஆகிய பகுதிகளின் மீது இஸ்ரேலின் போர் விமானங்கள் நேற்று (மே 30) தாக்குதல் நடத்தியுள்ளன.

இதேபோல், லடாகியா மாகாணத்தின் ஸமா எனும் கிராமம் மற்றும் மினா அல்-பைடா துறைமுகப் பகுதியின் மீதும் நேற்று (மே 30) தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சிரியா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், இந்தத் தாக்குதலில் உண்டான உயிர் மற்றும் பொருள் சேதங்கள் குறித்து எந்தவொரு தகவலும் வெளியிடப்படவில்லை. மேலும், சிரியாவின் பாதுகாப்புத் துறையும் இதுவரையில் எந்தவொரு அறிக்கையும் வெளியிடவில்லை.

இந்தத் தாக்குதல் குறித்து, இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிரியாவின் லடாகியா மாகாணத்திலிருந்த ஆயுதங்கள் சேகரிப்புக் கூடங்கள் தகர்க்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

மேலும், அங்கு சர்வதேச மற்றும் இஸ்ரேலிய கப்பல் போக்குவரத்துக்கு பாதிப்பை உள்ளாக்கக் கூடிய ஏவுகணைகள் இருந்ததாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த சில மாதங்களாகவே சிரியா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களில் ஏராளமான மக்கள் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:இந்தியா - பாகிஸ்தான் உடன்பாட்டுக்கு அமெரிக்கா காரணம்! 10-வது முறையாக டிரம்ப் பேச்சு!

பாகிஸ்தான் நிலநடுக்கத்தால் பரபரப்பு! சிறையிலிருந்து 200 கைதிகள் தப்பியோட்டம்!

பாகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின்போது கராச்சியிலுள்ள சிறையிலிருந்து சுமார் 200-க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியுள்ளனர்.சிந்து மாகாணத்தின், கராச்சி நகரத்துக்கு அருகில் நேற்று (ஜூன் 2) இரவு நிலநடுக்கம்... மேலும் பார்க்க

அழியப்போகிறதா உலகம்? தென்னாப்ரிக்காவின் ஒவ்வொரு அணுவையும் மிரட்டும் காலநிலை!

அடிஸ் அபாபா, எத்தியோப்பியா/ஜெனிவா போன்ற தென்னாப்ரிக்க நாடுகளின் முக்கிய நகரங்களை மிக மோசமான வானிலை மற்றும் காலநிலை மாற்றங்கள், ஒவ்வொரு அணுவையும் அசைத்துப் பார்த்து வருகிறது.ஆப்ரிக்க நாட்டின் இது, சமூக... மேலும் பார்க்க

துருக்கியைத் தாக்கிய நிலநடுக்கம்: இளம்பெண் பலி, 12 பேர் காயம்!

துருக்கியின் கடலோர நகரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகப் பேரிடர் குழு மேலாண்மை குழு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்தக் குழு வெளியிட்ட தகவலில், துருக்கியின் கடலோர நகரத்தில் 5.8 ரிக்டர் அளவிலான நிலநடு... மேலும் பார்க்க

வங்கதேச தந்தையின் புகைப்படம் அகற்றப்பட்ட புதிய நோட்டுகள் அறிமுகம்!

வங்கதேசத்தின் தந்தை என்றழைக்கப்படும் அந்நாட்டின் முதல் அதிபரும் முன்னாள் பிரதமருமான ஷேக் முஜிபுர் ரஹ்மானின் புகைப்படம் புதிய பணத் தாள்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.அவரின் புகைப்படத்துக்கு பதிலாக ஹிந... மேலும் பார்க்க

5 நிமிடங்களுக்கு ஒரு ஸ்க்ரீன் ஷாட்.. வடகொரிய செல்போன் மூலம் தெரிய வந்த பேரதிர்ச்சி!

வடகொரியாவிலிருந்து கடத்திவரப்பட்ட செல்போன் மூலம், அந்நாட்டு அரசு, மக்களை கடுமையான சென்சார் தொழில்நுட்பங்கள் மூலம் எந்த அளவுக்குக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது என்பது தெரிய வந்துள்ளது.மக்களை மிகுந்த... மேலும் பார்க்க

பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக பேச்சு: பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க இந்திய வம்சாவளி மாணவிக்குத் தடை

நியூயாா்க்: அமெரிக்காவில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகப் பேசிய இந்திய வம்சாவளி மாணவி மேகா வெமுரி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டது. அமெரிக்காவின் கேம்பிரிட்ஜ் நகரில் உள்ள மாஸசூசெட்ஸ் தொழி... மேலும் பார்க்க