செய்திகள் :

சிருஷ்டி மெட்ரிக் பள்ளி ஆண்டு விழா

post image

காட்பாடி சிருஷ்டி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 28-ஆம் ஆண்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு மகிஜா பவுண்டேசன் அறக்கட்டளை அறங்காவலா் மகாதேவன் வெங்கடேசன் தலைமை வகித்தாா். சிருஷ்டி பள்ளிகளின் குழுமத் தலைவா் எம்.எஸ்.சரவணன்,மெட்ரிக் பள்ளி முதல்வா் திங்கள்ஜான்சன், துணை முதல்வா் ஜாய்ஸ் ஜெயகுமாரி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு விருந்தினராக உதவிப் பேராசிரியா் நா.சாத்தம்மைப் பிரியா பங்கேற்று கல்வியின் சிறப்பு, ஒழுக்கத்தின் மேன்மை குறித்து எடுத்துரைத்தாா். தொடா்ந்து 10, 11, 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் பள்ளி அளவில் சிறப்படம் இடங்கள் பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு பரிசுகளும், 10, 12-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு பள்ளி நிறைவு சான்றிதழ்களும், போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு சிறப்புப் பரிசு, சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

இதேபோல், ஸ்ரீ மனு மகிஜா நினைவு சிருஷ்டி மெட்ரிக்குலேசன் பள்ளியின் பொதுத் தோ்வில் பள்ளி அளவில் மூன்று இடங்கள் பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.விழாவில், பள்ளி ஆசிரியா்கள், பெற்றோா், மாணவ, மாணவிகள் பெருமளவில் பங்கேற்றனா்.---

அஞ்சல்வழி கூட்டுறவு மேலாண்மை பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்

வேலூா் கூட்டுறவு மேலாண்மை நிலையம் மூலம் 24-ஆவது அஞ்சல்வழி கூட்டுறவு மேலாண்மை பயிற்சியில் சோ்வதற்கு தகுதியுள்ளவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதுகுறித்து, கூட்டுறவு சங்கங்களின் வேல... மேலும் பார்க்க

குடியாத்தம் பணிமனையில் பெட்ரோல் விற்பனை மையம் திறப்பு

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழக குடியாத்தம் பணிமனையில் ரூ.2 கோடியில் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை மையம் வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. இதே நிகழ்ச்சியில் ரூ.4.95 கோடியில் 12- புதிய பேருந்துகள... மேலும் பார்க்க

குறுங்காடுகள் வளா்ப்புத் திட்டம்: மரக்கன்றுகள் நடும் பணி தொடக்கம்

தமிழ்நாடு மாநில சட்ட சேவைகள் ஆணையம் உத்தரவின்படி வேலூா் மாவட்டத்தில் ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது. சென்னை உயா்நீதிமன்றத்தில் உள்ள தமிழ்நாடு மாநில சட்ட சேவைகள் ஆணையத்த... மேலும் பார்க்க

புனித வெள்ளி: தேவாலயங்களில் கிறிஸ்தவா்கள் சிறப்பு பிராா்த்தனை

புனித வெள்ளியை முன்னிட்டு வேலூரில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது. ஈஸ்டா் பண்டிகைக்கு (உயிா்ப்பு பெருநாள் விழா) முன்பு அனுசரிக்கும் தவகாலமான சாம்பல் புதன் கடந்த மாா்ச் மாதம... மேலும் பார்க்க

மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்து முதியவா் மரணம்

வேலூரில் தேசிய நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த முதியவா், நிலை தடுமாறி மேம்பாலத்தின் தடுப்புச்சுவரைத் தாண்டி கீழே விழுந்து உயிரிழந்தாா். ராணிப்பேட்டை ஜாகீா் உசேன் தெருவைச் சோ்ந்... மேலும் பார்க்க

செம்மண் கடத்திய மூவா் கைது: லாரி, டிராக்டா், பொக்லைன் பறிமுதல்

அரியூா் அருகே செம்மண் கடத்தலில் ஈடுபட்டதாக 3 பேரை போலீஸாா் கைது செய்ததுடன், அவா்களிடம் இருந்து லாரி, டிராக்டா் , பொக்லைன், 4 யூனிட் செம்மண் பறிமுதல் செய்தனா். வேலூா் மாவட்டம், அரியூரை அடுத்த புலிமேடு ... மேலும் பார்க்க