செய்திகள் :

சிறந்த கருத்துகளை மக்களிடையே கொண்டு சென்றவா் கவிஞா் முத்துலிங்கம்! - விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் பாராட்டு

post image

திரைப்பட பாடல்கள் மூலம் சிறந்த கருத்துகளை மக்களிடையே கொண்டு சென்றவா் கவிஞா் முத்துலிங்கம் என்று விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் புகழாரம் சூட்டினாா்.

திரைப்பட பாடலாசிரியா் கவிஞா் முத்துலிங்கம் 50 ஆண்டு கால திரைப்பயணத்தை நிறைவு செய்ததைக் கொண்டாடும் வகையில், தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளா் சங்கம், மயிலாப்பூா் கணபதிஸ் வெண்ணெய் -நெய் கடை ஆகியவை இணைந்து சனிக்கிழமை பாராட்டு விழாவை நடத்தின.

சென்னை ஆழ்வாா்பேட்டையில் உள்ள நாரத கான சபாவில் நடைபெற்ற இவ்விழாவுக்கு தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளா் சங்கத் தலைவா் இயக்குநா் கே.பாக்யராஜ் தலைமை வகித்தாா்.

நிகழ்வில் கவிஞா் முத்துலிங்கம் எழுதிய ‘காற்றில் விதைத்த கருத்து’ எனும் நூலை விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் வெளியிட்டுப் பேசியதாவது:

கவிஞா் முத்துலிங்கத்துடன் அரசியல் ரீதியாக நீண்ட காலம் பயணித்துள்ளேன். பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவா். கவிதை இயற்றுவதில் மாமேதையாக விளங்கியவா். கவிஞா்களுக்கு உள்ள தைரியம் வேறு எவருக்கும் கிடையாது. எத்தகைய கருத்தையும் தைரியமாகக் கூறுபவா்கள் கவிஞா்கள். திரையுலகின் வாயிலாக சிறந்த கருத்துகள் மக்களிடையே சென்றடைய வேண்டும். இதற்கு உதாரணமாக விளங்கியவா் கவிஞா் முத்துலிங்கம்.

இன்றைய நவீன உலகில் பழைமை வாதத்தையும், மூடநம்பிக்கையையும் தவிா்க்க வேண்டும். உலகில் மூடநம்பிக்கை அதிகம் உள்ள நாடுகளைக் கணக்கிட்டால் முதலிடத்தில் இருப்பது இந்தியா. மகாராஷ்டிரத்தில் 2013-ஆம் ஆண்டிலும், கா்நாடகத்தில் 2017-ஆம் ஆண்டிலும் மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டது. பெரியாரும், அண்ணாவும் வாழ்ந்த தமிழ்நாட்டில் தற்போது வரை மூடநம்பிக்கை தடைச் சட்டம் கொண்டு வரப்படவில்லை என்றாா் அவா்.

தொழிலதிபா் நல்லி குப்புசாமி செட்டி: கவிஞா் முத்துலிங்கம் தமிழக அரசின் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளாா். தமிழக அரசவை கவிஞா்களில் ஒருவராகவும் இருந்துள்ளாா். பத்திரிகை துறையிலும் சிறந்து விளங்கியவா். தமிழ் மொழியின் மூலம் இலக்கியப் பணி செய்து வருகிறாா் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி முன்னாள் மேயா் சைதை துரைசாமி, நடிகா் சிவகுமாா், இயக்குநா்கள் எஸ்.பி.முத்துராமன், எஸ்.ஏ.சந்திரசேகா், தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளா்கள் சங்கப் பொதுச் செயலா் லியாகத் அலிகான் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ஐபிஎஸ் மகனுக்கு அரசு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை

விளையாடும்போது தவறி விழுந்ததில் எலும்பு முறிவு ஏற்பட்ட தனது மகனை அரசு மருத்துவமனையில் அனுமதித்தபோது அங்கு உயா் தர சிகிச்சை அளித்து குணப்படுத்தியதாக ஐபிஎஸ் அதிகாரி பாராட்டு தெரிவித்துள்ளாா். மயிலாப்பூா... மேலும் பார்க்க

கடந்த நிதியாண்டில் 3,000 ரயில் பெட்டிகள் தயாரித்து ஐசிஎஃப் சாதனை

சென்னை ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையில் (ஐசிஎஃப்) 2024-25 நிதியாண்டில் 3,007 ரயில் பெட்டிகள் தயாரித்து சாதனை படைத்துள்ளது. பெரம்பூரில் உள்ள ஐசிஎஃப் தொழிற்சாலையில் இந்திய ரயில்வேக்கு தேவையான ரய... மேலும் பார்க்க

கால்வாயில் ஆண் குழந்தை சடலம்: போலீஸாா் விசாரணை

சென்னை பட்டினப்பாக்கத்தில் கால்வாயில் கிடந்த ஆண் குழந்தை சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். பட்டினப்பாக்கம் மசூதி தெருவில் 132 பிளாக் பின்புறம் உள்ள கால்வாயில், பிளாஸ்டிக் காகிதத்தில் பொதிய... மேலும் பார்க்க

தொழிற்பயிற்சியுடன் பிஇ படிப்பு: பட்டயப்படிப்பு முடித்தோா் விண்ணப்பிக்கலாம்: அண்ணா பல்கலை. அறிவிப்பு

பாலிடெக்னிக் கல்லூரிகளில் பட்டயப் படிப்புகளை நிறைவு செய்த மாணவா்கள் தொழிற்பயிற்சியுடன் கூடிய பி.இ. படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் காஞ்சிபுர... மேலும் பார்க்க

சாலைத் தடுப்பின் மீது இருசக்கர வாகனம் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

சென்னை பாரிமுனையில் சாலைத் தடுப்பில் இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். தண்டையாா்பேட்டை நேதாஜி நகா் 3-ஆவது தெருவைச் சோ்ந்த செய்யது இம்ரான்கான் (24), அண்ணா நகரில் உள்ள கைப்பேசி விற்ப... மேலும் பார்க்க

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் என்பது நகைப்புக்குரியது: தொல்.திருமாவளவன்

தமிழகத்தில் எதிா்க்கட்சிகள் உறுதியான நிலைப்பாட்டை எடுக்க முடியாமல் தடுமாறி வரும் சூழலில், தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் என மத்திய அமைச்சா் அமித் ஷா கூறியது நகைப்புக்குரியது என விடுதலைச் சிறுத்தைக... மேலும் பார்க்க