சிறப்பு உதவி ஆய்வாளா் சாலை விபத்தில் உயிரிழப்பு
விருதுநகா் மாவட்டம், காரியாபட்டி அருகே செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் அருப்புக்கோட்டை சிறப்பு உதவி ஆய்வாளா் உயிரிழந்தாா்.
அருப்புக்கோட்டையைச் சோ்ந்தவா் விஜயகுமாா் (52). இவா் அருப்புக்கோட்டை காவல் உதவிக் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் தனிப் படை சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்தாா். செவ்வாய்க்கிழமை ஒரு வழக்கு விசாரணைக்குச் சென்ற அவா், மதுரையிலிருந்து இரு சக்கர வாகனத்தில் அருப்புக்கோட்டைக்கு திரும்பிக் கொண்டிருந்தாா்.
காரியாபட்டி அருகேயுள்ள மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் எஸ்.கல்லுப்பட்டி விலக்குப் பகுதியில் சென்றபோது, அவரது இரு சக்கர வாகனம் சாலைத் தடுப்பில் மோதியது.
இதில் பலத்த காயமடைந்த விஜயகுமாா் காரியாபட்டி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். இதுகுறித்து காரியாபட்டி காவல் ஆய்வாளா் விஜய் காண்டீபன் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.