செய்திகள் :

சிறார்கள் ஊக்க பானங்கள் அருந்தத் தடையா? பஞ்சாப் அரசு ஆலோசனை!

post image

சிறார்கள் ஊக்க பானங்கள் அருந்தத் தடை விதிப்பதற்கு பஞ்சாப் அரசு ஆலோசனை நடத்தி வருகின்றது.

இந்தியாவில் ஊக்க பானங்களை வயது வித்தியாசமின்றி அனைத்து வயதினரும் அருந்துகின்றனர். அதில் இருக்கும் அதிகளவு கஃபீன் மற்றும் டாரைன் எனப்படும் ரசாயனங்கள் உடலுக்கு கேடு விளைவிப்பதாகும்.

சிறார்கள் பலரும் இத்தகைய பானங்களுக்கு அதிகளவில் அடிமையாகி வருகின்றனர். இந்த பானங்களில் கஃபீன் அளவு அனுமதிக்கப்பட்டதைவிட மூன்று மடங்கு அதிகமாக உள்ளது. எனவே, உடலுக்கு கேடு தரும் ஊக்க பானங்களை சிறார்கள் அருந்த தடை விதிக்க பஞ்சாப் மாநில அரசு ஆலோசனை நடத்துவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கான ஒப்புதலை அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் பல்பீர் சிங் வழங்கியதாகக் கூறப்படுகிறது.

இதன்படி, பள்ளிகளில் உள்ள கேண்டீன்கள், பள்ளிகளுக்கு அருகே உள்ள கடைகளில் ஊக்க பானங்கள் விற்க தடை விதிக்கப்படும்.

இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் முன் இந்தத் தடை சட்டப்பூர்வமாக ஏற்கத்தக்கதா என பஞ்சாப் அரசு ஆலோசனை நடத்தி வருகின்றது. இது நடைமுறைக்கு வந்தால் முதன்முதலாக இப்படியான தடை உத்தரவை கொண்டுவந்த மாநிலமாக பஞ்சாப் இருக்கும்.

பல நாடுகளில் 15 வயதிற்குட்பட்டவர்கள் ஊக்க பானங்களை அருந்த தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பஞ்சாபில் போதைப் பொருள்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் ஊக்க பானங்கள் மீதான தடைக்கு அமைச்சர் பல்வீர் சிங் ஆலோசித்து வருகிறார்.

சமீபத்தில் பள்ளிகளில் சோதனை நடத்திய அவர் அங்கு மாணவர்கள் பலரும் ரூ. 20 மதிப்பிலான ஊக்க பானங்களைத் தொடர்ந்து அருந்துவதைப் பார்த்தார். மேலும், ஸ்ட்ராபெர்ரி குயிக் எனப்படும் மிட்டாய்களை அவர்கள் தொடர்ந்து உட்கொள்வதையும் அறிந்துகொண்டார்.

இதுகுறித்துப் பேசிய அவர், ”சந்தைகளில் விற்பனையாகும் சில ஊக்க பானங்களில் அதிகளவு காஃபீன் உள்ளன. இதனால், இதயம் சார்ந்த பிரச்னைகள், பதற்றம், வாயு தொல்லை, ரத்த நாளங்களில் பிரச்னை போன்றவை ஏற்படும்.

உலக சுகாதார அமைப்பு 18 வயதுகுட்பட்டவர்கள் இத்தகைய ஊக்க பானங்களை அருந்துவதற்கு எதிராக சில வழிகாட்டுதல்களைக் குறிப்பிட்டுள்ளனர். பள்ளிப் பருவத்தில் இருந்தே இதுபோன்ற பழக்கங்களுக்கு மாணவர்கள் அடிமையாவதைத் தடுக்க ஊக்க பானங்கள் விற்பனைக்கு தடை விதிப்பதை அரசு உறுதி செய்யும்” என்று அவர் தெரிவித்தார்.

இதையும் படிக்க | குளிரூட்டிகள் பயன்பாட்டில் இந்தியா முதலிடம்!

தனியாா் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீட்டை உறுதிப்படுத்த சட்டம்: காங்கிரஸ் வலியுறுத்தல்

புது தில்லி: ‘தனியாா் மற்றும் சிறுபான்மை அல்லாத கல்வி நிறுவனங்களில் எஸ்.சி., எஸ்.டி. மற்றும் ஓபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை உறுதிப்படுத்த தனிச் சட்டம் கொண்டு வர வேண்டும்’ என மத்திய அரசை காங்கிரஸ் ... மேலும் பார்க்க

மின் வாகன உற்பத்தி: 2030-இல் இந்தியா முதன்மை நாடாகும்: நிதின் கட்கரி

தாணே: ‘2030-இல் மின்சார வாகன உற்பத்தியில் உலகின் மிகப்பெரும் நாடாக இந்தியா உருவெடுக்கும்’ என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி திங்கள்கிழமை தெரிவித்தாா். மேலும்... மேலும் பார்க்க

இந்தியாவின் வெளிநாட்டு கடன் 71,790 கோடி டாலராக அதிகரிப்பு

புது தில்லி: இந்தியாவின் மொத்த வெளிநாட்டு கடன் கடந்த ஆண்டு இறுதியில் 71,790 கோடி டாலராக அதிகரித்துள்ளது. கடந்த 2023-ஆம் ஆண்டு, டிசம்பரில் 64,870 கோடி டாலராக இருந்த நாட்டின் அந்நிய கடன் ஒரே ஆண்டில் 10 ... மேலும் பார்க்க

கன்னித்தன்மை பரிசோதனைக்கு கட்டாயப்படுத்துவது சட்டவிரோதம்: சத்தீஸ்கா் உயா்நீதிமன்றம்

பிலாஸ்பூா்: கன்னித்தன்மை பரிசோதனை மேற்கொள்ள பெண்களைக் கட்டாயப்படுத்துவது அரசமைப்புச் சட்டப் பிரிவு 21-ஐ மீறுவதாகும் என்று சத்தீஸ்கா் உயா்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதுதொடா்பாக அந்த உயா்நீதிமன்றத்தில்... மேலும் பார்க்க

வேட்டையாடப்படும் இந்தியக் கல்வி முறை: மத்திய அரசு மீது சோனியா விமா்சனம்

புது தில்லி: பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசின் கல்விக் கொள்கையை நாடாளுமன்ற காங்கிரஸ் குழு தலைவா் சோனியா காந்தி கடுமையாக விமா்சித்துள்ளாா். ‘மத்தியில் அதிகார குவிப்பு, வணிகமயமாக்கல், வகுப்புவாதமயமா... மேலும் பார்க்க

வக்ஃப் திருத்த மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அரசு தயாா்: கிரண் ரிஜிஜு

வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய தயாா் நிலையில் மத்திய அரசு உள்ளதாக மத்திய சிறுபான்மை விவகாரங்கள் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு திங்கள்கிழமை தெர... மேலும் பார்க்க