செய்திகள் :

சிறிய அறைக்கு மாத வாடகை ரூ. 25,000! வைரலாகும் இளைஞரின் விடியோ!

post image

பெங்களூருவில் மிகச்சிறிய அறைக்கு மாத வாடகையாக ரூ. 25 ஆயிரமாக வசூலிக்கப்பட்டு வருகிறது.

சொந்த ஊரை விட்டு பெங்களூருவுக்கு வேலைக்குச் சென்ற இளைஞர், தான் வாடகைக்கு எடுத்த அறை குறித்து வெளியிட்ட விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

நகர்ப்புறங்களில் வீடுகளுக்கு ஏற்படும் தேவைகள் நாளுக்கு நாள் அதிகரித்திக்கொண்டே செல்கிறது. கிராமப்புறங்களில் இருந்து வேலைவாய்ப்புக்காகவும் அதிக ஊதியத்துக்காகவும் நகர்ப்புறங்களில் உள்ள நிறுவனங்களை, வாய்ப்புகளை நோக்கி மக்கள் படையெடுத்து வருகின்றனர்.

நாளுக்குநாள் அதிகரிக்கும் நகர்ப்புற மக்கள் தொகையானது நகர்ப்புற திட்டமிடலின் அவசியத்தை வலியுறுத்துகிறது.

சென்னை உள்பட பெங்களூரு, மும்பை, புணே, தில்லி ஆகிய நகரங்களில் வீடுகளுக்கான தேவை அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

கல்வி நிறுவனங்கள், வேலைவாய்ப்புகள் என கிராமங்களில் இருந்து நகர்ப்புறங்களை நோக்கி நகரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது என்பதையே இவை காட்டுகின்றன.

அவ்வாறு அறைகள் எடுத்து தங்குபவர்கள் சந்திக்கும் சவால்கள் சொல்லில் அடங்காதவை.

பெங்களூருவில் வேலைக்காகச் சென்ற இளைஞர் ஒருவர், தான் வாடகைக்கு எடுத்துள்ள அறை குறித்து விளக்குவதன் மூலம் அங்கு வாழ்க்கை முறையின் அவலத்தை, உண்மையை உணர முடியும்.

அந்த விடியோவில் இளைஞர் ஒருவர் அறையின் நடுவில் நின்று தனது இரு கைகளையும் விரிக்கிறார். இரு கைகளும் இருபுற சுவர்களைத் தொடுகின்றன. அந்த அளவுக்கு குறுகிய அகலம் உடையதாக அந்த அறை உள்ளது என்பதை சுட்டிக்காட்டுகிறார்.

பின்னர் தனது ஒரு காலை பின்பக்க சுவரை நோக்கித் தூக்கி தனது கையை முன்பக்க கதவை நோக்கி உயர்த்துகிறார். அந்த அளவே அறையின் நீளம் உள்ளது. இந்த அறைக்கு அவர் கொடுக்கும் வாடகைதான் வியப்பை ஏற்படுத்துகிறது. பராமரிப்பு செலவின்றி மாதத்துக்கு ரூ. 25,000 வாடகையாக வசூலிக்கப்படுகிறது.

இந்த அறையில் ஒரே ஒரு நன்மை உள்ளது. அது என்னவென்றால், அறையில் வைக்க பொருள்களை வாங்கிக் குவித்து பணத்தை வீணாக்குவது தடுக்கப்படும். அந்தவகையில் இந்த அறையில் இருந்து பணத்தை சேமிக்கலாம் என்று சோகம் கலந்த புன்னகையோடு கூறுகிறார் அந்த இளைஞர்.

இளைஞர் பதிவிட்டுள்ள இந்த விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. இதில் சிலர் மும்பையிலும் இதே நிலைதான் எனக் கருத்துகளைப் பதிவிட்டுள்ளனர்.

மும்பையிலும் இதே நெருக்கடி உள்ளது. சில நாள்களில் புணேவும் இந்த நிலைக்கு மாறிவிடும். மக்கள்தொகை அதிகரித்துக்கொண்டே சென்றால் எல்லா நகரங்களும் ஒரே மாதிரியானதாக ஆகிவிடும் என பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

இதையும் படிக்க | நொய்டாவில் ரூ.30 கோடிக்கு வீடு வாங்கிய அர்னாப் கோஸ்வாமி!

இறுதிச் சடங்கில் ஊழியரின் சடலத்தை சுமந்துசென்ற பிரபல தொழிலதிபர்!

அபுதாபியில் மாரடைப்பால் உயிரிழந்த தனது ஊழியரின் சடலத்தை லூலூ குழுமத் தலைவர் யூசப் அலி சுமந்து சென்றார்.அபுதாபியை தலைமையிடமாக கொண்ட லூலூ குழுமத்துக்கு 23-க்கும் மேற்பட்ட நாடுகளில் கிளைகள் உள்ளன. இந்திய... மேலும் பார்க்க

நாளை பௌர்ணமி: பிரயாக்ராஜில் அதிகாரிகள் பிறப்பித்த முக்கிய உத்தரவு

நாளை மாகி பூர்ணிமா புனித நீராடல் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, பிரயாக்ராஜில் போக்குவரத்துக் காவல்துறையினர் மிக முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளனர். மேலும் பார்க்க

பெற்றோர் உடலுறவு குறித்து அவதூறு: யூடியூபர்கள் மீது வழக்கு!

பெற்றோர் உடலுறவு கொள்வது குறித்து பொதுவெளியில் அவதூறாகப் பேசிய யூடியூபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.நகைச்சுவை நடிகர் சமய் ரெய்னாவின் இந்தியாஸ் காட் லேடன்ட் என்ர நிகழ்ச்சியில் ரன்வீர் அல்ல... மேலும் பார்க்க

விலைவாசி உயர்வு, மணிப்பூர் நிலவரம்: மக்களவையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் நோட்டீஸ்!

விலைவாசி உயர்வு குறித்து விவாதம் நடத்தக் கோரி காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த் இன்று(செவ்வாய்க்கிழமை) மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கினார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜன. 31 ஆம... மேலும் பார்க்க

கான்பூர் ஐஐடியில் பி.எச்டி. மாணவர் தற்கொலை! ஓராண்டில் 3-வது சம்பவம்!

கான்பூர் ஐஐடியில் பி.எச்டி. பயிலும் மாணவர் திங்கள்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.நொய்டாவைச் சேர்ந்த அங்கித் யாதவ்(வயது 24) என்ற இளைஞர் கான்பூர் ஐஐடியில் வேதியியல் துறையில் பி.எச்டி. ஆராய்ச்சி... மேலும் பார்க்க

தில்லி தோல்விக்குப் பிறகு... கேஜரிவாலை சந்திக்கிறார் பஞ்சாப் முதல்வர்!

ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் தில்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜரிவாலை, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் சிங் சந்திக்கவுள்ளார். இதற்காக பஞ்சாபில் இருந்து தில்லிக்கு அவர் புறப்பட்டுள்ளார். மேலும் பார்க்க