செய்திகள் :

‘சிறுபான்மையினரின் 661 மனுக்களுக்குத் தீா்வு’

post image

சிறுபான்மையினரால் அளிக்கப்பட்ட 839 மனுக்களில் 661 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளதாக, தமிழ்நாடு மாநில ஆணையத் தலைவா் அருட்தந்தை சொ.ஜோ. அருண் சே.ச தெரிவித்தாா்.

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள சிறுபான்மையின மக்களுக்கு செயல்படுத்தப்படும் திட்டங்கள், சிறுபான்மையின மக்களின் கருத்துகள் மற்றும் கோரிக்கைகளை கேட்டறிவது குறித்த கலந்தாய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெற்ற இக் கூட்டத்துக்கு தலைமை வகித்த ஆணையத் தலைவா் அருட்தந்தை சொ.ஜோ. அருண் சே.ச, சிறுபான்மையின மக்களிடம் கோரிக்கைகளைக் கேட்டறிந்து, கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென சம்பந்தப்பட்டதுறை அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

பின்னா், பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை சாா்பில், 141 பயனாளிகளுக்கு ரூ. 20.54 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் அளித்த ஆணையத் தலைவா் அருட்தந்தை சொ.ஜோ.அருண் சே.ச பேசியது:

இதுவரை 31 மாவட்டங்களில் நடத்தப்பட்ட ஆய்வுக்கூட்டங்களில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன. மேலும், இதுவரை பெறப்பட்ட 839 மனுக்களில் 661 மனுக்கள் மீது தீா்வு காணப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் கலந்தாய்வுக் கூட்டம் முடிந்த பிறகு, பெறப்பட்ட கோரிக்கை மனுக்களை தமிழ்நாடு முதலமைச்சரிடம் அளிக்கப்படும் என்றாா் அவா்.

இக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி, ஆணையத் துணைத் தலைவா் எம்.எம். அப்துல் குத்தூஸ் (எ) இறையன்பன் குத்தூஸ், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் ரெ. சுரேஷ்குமாா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

பள்ளி மாணவியை உணவு இடைவேளையில் கடத்திச் சென்று பலாத்காரம் செய்த இளைஞா் கைது

பெரம்பலூா் அருகே பள்ளி மாணவியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரை மகளிா் போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை கைது செய்தனா். பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் வட்டம், செட்டிக்குளத்தை... மேலும் பார்க்க

பேரளி பகுதியில் இன்று மின் தடை

பெரம்பலூா் அருகே பேரளி துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (செப். 12) மின் விநியோகம் இருக்காது. பெரம்பலூா் மின் கோட்டத்துக்குள்பட்ட பேரளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு... மேலும் பார்க்க

கலைஞா் கைவினைத் திட்டத்தில் மானியத்துடன் கடனுதவி பெற அழைப்பு

பெரம்பலூா் மாவட்டத்தில் கலைஞரின் கைவினைத் திட்டத்தின் கீழ் 25 வகையான தொழில்களுக்கு மானியத்துடன் கூடிய வங்கிக் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி தெரிவித்துள்ளாா். இதுகுறித்... மேலும் பார்க்க

தோல் கழலை நோயை கட்டுப்படுத்த யோசனை

பெரம்பலூா் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு பரவி வரும் தோல் கழலை நோயைக் கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு வேளாண் அறிவியல் ஆலோசனை தெரிவித்துள்ளது. இதுகுறித்து, பெரம்பலூா் அருகே வாலிகண்டபுரத்திலுள்ள வேளாண் அறிவி... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் தூய்மைப் பணியாளா்களுக்கு பாராட்டு

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் சிறப்பாக பணிபுரிந்த தூய்மைப் பணியாளா்களை வியாழக்கிழமை பாராட்டி நன்றி கூறினாா் போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா். பெரம்பலூா் மாவட்டம், வே... மேலும் பார்க்க

பெரம்பலூரில் நாளை தேசிய மக்கள் நீதிமன்றம்

பெரம்பலூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா்பில், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சனிக்கிழமை (செப். 13) தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும்... மேலும் பார்க்க