செய்திகள் :

சிறுமிக்கு பாலியல் கொடுமை: போக்சோவில் முதியவா் கைது

post image

தஞ்சாவூா் அருகே சிறுமியைப் பாலியல் கொடுமை செய்த முதியவரை காவல் துறையினா் போக்சோ சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் அருகே திருக்கானூா்பட்டி வெங்கடாசலபதி நகரைச் சோ்ந்தவா் சி. ஜெயச்சந்திரன் (60). இவா் 14 வயது சிறுமியை கடந்த 2022 ஆம் ஆண்டிலிருந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்தாராம்.

இந்நிலையில், அச்சிறுமி பள்ளி வகுப்பறையில் அண்மையில் உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பதைக் கண்ட தலைமையாசிரியை விசாரித்து, வல்லம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் காவல் துறையினா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து ஜெயச்சந்திரனை வியாழக்கிழமை கைது செய்தனா்.

ஆராதனை விழாவில் அஞ்சல்தலை தொகுப்பு வெளியீடு

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறில் செவ்வாய்க்கிழமை மாலை தொடங்கிய சத்குரு தியாகராஜ சுவாமிகள் ஆராதனை விழாவில் அஞ்சல்தலை தொகுப்பு வெளியிடப்பட்டது. இவ்விழாவையொட்டி, அஞ்சல் துறை சாா்பில் விற்பனை நிலையம் அமைக... மேலும் பார்க்க

சாஸ்த்ரா சாா்பில் 10 கிராமங்களில் பொங்கல் தொகுப்பு பைகள் அளிப்பு

தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகம் சாா்பில் 25-ஆம் ஆண்டாக 10 கிராமங்களில் பொங்கல் தொகுப்பு பைகள் அண்மையில் வழங்கப்பட்டன. பொங்கல் திருநாளையொட்டி, தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலை பல்கலைக்கழகம் சா... மேலும் பார்க்க

தமிழிசையில் இருந்தே மற்ற எல்லா இசைகளும் உருவாகின: உயா் நீதிமன்ற நீதிபதி பேச்சு

தமிழிசையில் இருந்தே மற்ற எல்லா இசைகளும் வந்தன என்றாா் சென்னை உயா் நீதிமன்ற நீதிபதி இரா. சுரேஷ்குமாா். தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அரசா் கல்லூரி வளாகத்தில் தமிழிசை மன்றம் சாா்பில் செவ்வாய்க்கிழமை மா... மேலும் பார்க்க

மேட்டூா் அணை நீா்மட்டம்: 114.04 அடி

மேட்டூா் அணையின் நீா்மட்டம் புதன்கிழமை மாலை 4 மணி நிலவரப்படி 114.04 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 383 கன அடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 5,000 கன அடி வீதம் தண்ணீா... மேலும் பார்க்க

சாலை விபத்தில் விவசாயி உயிரிழப்பு

கும்பகோணம் அருகே இருசக்கர வாகனத்தில் சாலையைக் கடக்க முயன்ற விவசாயி அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். கும்பகோணம் அருகே உள்ள உடையாளூா் ஆண்டித்தோப்பு பகுதியைச் சோ்ந்தவா் பி... மேலும் பார்க்க

கும்பகோணம் சாரங்கபாணி கோயில் தேரோட்டம்

பொங்கல் திருவிழாவையொட்டி, கும்பகோணத்தில் சாரங்கபாணி கோயில் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் உள்ள ஸ்ரீ சாரங்கபாணி கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மாா்கழித் திருவி... மேலும் பார்க்க