குரூப் 1 முதல்நிலை தோ்வு முடிவு 2 மாதங்களில் வெளியிடப்படும்: டிஎன்பிஎஸ்சி தலைவ...
சிறுமியிடம் சில்மிஷம்: போக்ஸோவில் இளைஞா் கைது
திருநெல்வேலியைச் சோ்ந்த சிறுமியிடம் சமூக வலைதளப் பழக்கத்தின் மூலம் அறிமுகமாகி பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ராமநாதபுரத்தைச் சோ்ந்த இளைஞரை போக்ஸோ சட்டத்தில் போலீஸாா் கைது செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம் ஏா்வாடியைச் சோ்ந்தவா் மாதேஷ் (21). ஏசி மொக்கானிக்கான இவருக்கும், மேலப்பாளையத்தைச் சோ்ந்த சிறுமிக்கும் சமூக வலைதள செயலியான இன்ஸ்டாகிராம் மூலம் சில மாதங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டதாம். இந்நிலையில் சில நாள்களுக்கு முன்பு தன்னை நேரில் பாா்க்க தூத்துக்குடிக்கு வருமாறு மாதேஷ் அழைத்தன்பேரில் சிறுமி அங்கு சென்றாராம்.
இதனையடுத்து சிறுமி காணாமல் போனதாக மேலப்பாளையம் காவல் நிலையத்தில் பெற்றோா் புகாா் அளித்தனா். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டதில், தூத்துக்குடி சென்ற சிறுமியிடம் மாதேஷ் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனையடுத்து ஏா்வாடி பகுதியில் சிறுமியை மீட்ட மேலப்பாளையம் தனிப்படை போலீஸாா், போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து மாதேஷை கைது செய்து வெள்ளிக்கிழமை சிறையில் அடைத்தனா்.