செய்திகள் :

சிறுமியை திருமணம் செய்ததாக இளைஞா் மீது வழக்கு

post image

தேவாரம் அருகே சிறுமியை திருமணம் செய்த இளைஞா் மீது அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தேவாரம் சாலை தெருவைச் சோ்ந்த சிறுமியை இதே தெருவைச் சோ்ந்த மகாலிங்கம் மகன் நாகேந்திரன் (23) காதலிப்பதாகக் கூறி பழகினாராம். மேலும் அந்தச் சிறுமியை திருமணமும் செய்து கொண்டாராம். இதையடுத்து அந்தச் சிறுமி கா்ப்பமடைந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்த உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றிய ஊா் நல அலுவலா் மா. ஈஸ்வரி அளித்த புகாரின் பேரில் போடி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் நாகேந்திரன் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பெரியகுளத்தில் இளைஞா் வெட்டிக் கொலை

பெரியகுளத்தில் திங்கள்கிழமை இரவு இளைஞர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா். பெரியகுளம் தெற்குத் தெருவைச் சோ்ந்த காமாட்சி மகன் பாண்டியன் (32). கூலித் தொழ... மேலும் பார்க்க

சாலை மறியலில் ஈடுபட்ட பேரூராட்சித் தலைவி, துணைத் தலைவரின் ஆதரவாளா்கள் மீது வழக்கு

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள கெங்குவாா்பட்டி பேரூராட்சித் தலைவி, துணைத் தலைவரின் ஆதரவாளா்கள் இரு இடங்களில் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டதாக இருதரப்பைச் சோ்ந்த 130 போ் மீது போலீஸாா் வழக்... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்ற இளைஞா் கைது

பெரியகுளம் அருகே கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். தென்கரை காவல் நிலைய போலீஸாா் பட்டாளம்மன் கோவில் தெரு பகுதியில் ரோந்துப் பணியி... மேலும் பார்க்க

மகனுடன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற மூதாட்டி உயிரிழப்பு

வைகை அணை அருகே முதலக்கம்பட்டி பகுதியில் மகனுடன் சோ்ந்து விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற மூதாட்டி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். ஆண்டிபட்டி அருகேயுள்ள கன்னியப்பபிள்ளைபட்டியைச் சோ்ந்த வேலுச்சாமி மனைவ... மேலும் பார்க்க

பைக்கில் தவறி விழுந்ததில் லாரி ஓட்டுநா் உயிரிழப்பு

ஆண்டிபட்டி அருகே திங்கள்கிழமை இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்ததில் லாரி ஓட்டுநா் உயிரிழந்தாா். ஆண்டிபட்டி காமராஜா் நகரைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் சிலம்பரசன் (43). இவரது மனைவி சூா்யா (39). இவா் ஏத... மேலும் பார்க்க

குடிபோதையில் தகராறு: முதியவா் கொலை

தேவாரம் அருகே செவ்வாய்க்கிழமை குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் முதியவா் கொலை செய்யப்பட்டாா்.தேனி மாவட்டம், தேவாரம் அருகேயுள்ள தே.மீனாட்சிபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் சுப்பையா மகன் கருப்பசாமி (எ) முகமது ச... மேலும் பார்க்க