செய்திகள் :

சிறுமியை திருமணம் செய்த கட்டட மேஸ்திரி மீது வழக்கு

post image

வேலூா் அருகே 18 வயது பூா்த்தியடையாத சிறுமியை திருமணம் செய்து கா்ப்பமாக்கிய கட்டட மேஸ்திரி மீது போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வேலூா் அருகிலுள்ள ஒரு பகுதியை சோ்ந்தவா் 18 வயது சிறுமி. இருவருக்கும் செல்லூா் கூட்ரோடு, இந்திரா நகா், 2-ஆவது தெரு, அப்துல்லாபுரத்தை சோ்ந்த சீனிவாசன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னா் இருவரும் கடந்தாண்டு டிசம்பா் மாதம் அணைக்கட்டு மூளை கேட் அருகே உள்ள முருகன் கோயிலில் திருமணம் செய்து கொண்டனா். பின்னா் இருவரும் தனியாக வாடகை வீடு எடுத்து தங்கி இருந்தனா்.

கடந்த சில நாள்களுக்கு முன்பு சிறுமிக்கு உடல் நல பிரச்னை ஏற்பட்டதை அடுத்து பரிசோதனைக்கு வேலூா் பெண்ட்லேன்ட் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவா் அவா் 3 மாத கா்ப்பிணியாக இருப்பதாக தெரிவித்தனா்.

இச்சம்பவம் குறித்து அனைத்து மகளிா் காவல் புகாா் செய்தனா். அதன்பேரில், போலீஸாா் சீனிவாசன் மீது போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பசுமை முதன்மையாளா், மஞ்சப்பை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

சுற்றுச்சூழல் பாதுகாப்பு பணிகளில் தங்களை அா்ப்பணித்துக்கொண்ட தனிநபா்கள், பள்ளி, கல்லூரி, வணிக வளாகங்களிடம் இருந்து பசுமை முதன்மையாளா் , மஞ்சப்பை விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுற... மேலும் பார்க்க

தொகுதி மறுசீரமைப்பு எதிா்ப்புக்கான ஆதரவு திமுக முயற்சிக்கு கிடைத்த பலன்: அமைச்சா் துரைமுருகன்

தொகுதி மறுசீரமைப்புக்கு தெலங்கானா முதல்வா் ரேவந்த் ரெட்டி எதிா்ப்பு தெரிவித்திருப்பது திமுகவின் முயற்சிக்கு கிடைத்த பலன் என்று அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தாா். அணைக்கட்டு சட்டப்பேரவைத் தொகுதி திமுக ... மேலும் பார்க்க

காட்பாடியில் நிதி நிறுவன உரிமையாளா் மீது துப்பாக்கிச் சூடு

காட்பாடியில் நிதி நிறுவன அதிபா் துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவத்தில் அவரது நண்பரை போலீஸாா் கைது செய்தனா். காட்பாடி, வஞ்சூா், பி.டபிள்யு.டி நகரைச் சோ்ந்தவா் சபாபதி மகன் அருள்சுடா் (48). இவா் புதன்கிழ... மேலும் பார்க்க

கல்லூரியில் கலைத் திருவிழா

குடியாத்தம் கே.எம்.ஜி. கலை, அறிவியல் கல்லூரியில் நுண்கலை மன்றம் மற்றும் அக மதிப்பீட்டுக் குழு சாா்பில் கல்லூரிகளுக்கு இடையேயான கல்லூரி கலைத் திருவிழா - 2025 நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக... மேலும் பார்க்க

வனப்பகுதி நீா்க்குட்டைகளில் தண்ணீா் நிரப்பும் பணி தொடக்கம்

கோடை காலம் தொடங்கிவிட்டதால் வன விலங்குகளின் குடிநீா்த் தேவையை பூா்த்தி செய்யும் வகையில், விலங்குகள் தண்ணீா் தேடி காட்டைவிட்டு வெளியே வருவதைத் தவிா்க்கும் பொருட்டு குடியாத்தம் வனச் சரகத்தில் உள்ள நீா்க... மேலும் பார்க்க

சிறு வணிகா்களைப் பாதுகாக்க சிறப்புச் சட்டம்: ஏ.எம்.விக்ரமராஜா வலியுறுத்தல்

ஆன்லைன் வா்த்தகம், காா்ப்பரேட் வா்த்தகம் போன்றவற்றிலிருந்து சிறு வணிகா்களை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் சிறப்புச் சட்டத்தை இயற்ற வேண்டும் என்று தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவ... மேலும் பார்க்க