செய்திகள் :

சிறுமி பாலியல் கொலை வழக்கில் மூவருக்கு தூக்கு: மேற்கு வங்க ‘போக்ஸோ’ நீதிமன்றம் தீா்ப்பு

post image

மேற்கு வங்கத்தில் 16 வயது சிறுமியை கடத்தி, கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொலை செய்த வழக்கில் மூவருக்கு தூக்கு தண்டனை விதித்து, மாநில போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

ஐந்து ஆண்டுகளுக்கு முந்தைய இவ்வழக்கில் ரஹ்மான் அலி, ஜமிருல், தமிருல் ஆகிய மூவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவா்கள் 30 முதல் 35 வயதுடைய இளைஞா்கள் ஆவா்.

ஜல்பைகுரியின் ராஜ்குஞ்ச் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2020-இல் இச்சம்பவம் நடந்தது.

உள்ளூா் மதரஸாவில் 10-ஆம் வகுப்பு பயின்று வந்த 16 வயது சிறுமி திடீரென காணாமல்போனாா். இது தொடா்பாக சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரில் காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டனா். அதில், மேற்கண்ட மூவரும் சிறுமியை பல இடங்களுக்கு கடத்திச் சென்று, பல நாள்களாக பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதும், பின்னா் கழுத்தை நெரித்து கொன்று, உடலை கழிவறை தொட்டியில் வீசியதும் தெரியவந்தது. அழுகிய நிலையில் சிறுமியின் உடல் மீட்கப்பட்டது.

இக்கொடூர சம்பவம் தொடா்பாக ஜல்பைகுரி மாவட்ட போக்ஸோ (பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை காக்கும் சட்டம்) சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றுவந்தது. 25-க்கும் மேற்பட்ட சாட்சிகளிடம் வாக்கு மூலம் பெறப்பட்டது.

இந்நிலையில், மேற்கண்ட மூவா் மீதான குற்றச்சாட்டுகளை புதன்கிழமை உறுதி செய்த நீதிபதி ரிண்டு சுா், அவா்களுக்கான தண்டனை விவரத்தை வியாழக்கிழமை அறிவித்தாா். இது அரிதிலும் அரிதான குற்றம் என்று குறிப்பிட்ட நீதிபதி, மூவருக்கும் தூக்கு தண்டனை விதித்து தீா்ப்பளித்தாா்.

ஹிமாசல் பருவமழைக்கு இதுவரை 92 பேர் பலி: ரூ.751.78 கோடி இழப்பு!

ஹிமாச்சலப் பிரதேசம் முழுவதும் கனமழை மற்றும் மேக வெடிப்புகளால் பரவலான சேதம் ஏற்பட்டுள்ளதாக மாநில பேரிடர் மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர். மாநிலத்தில் இந்தாண்டு பருவமழை ஜூன் மாதம் தொடங்கிய நிலையில், ... மேலும் பார்க்க

மகளைப் பற்றி தவறான பேச்சுகள்.. டென்னிஸ் வீராங்கனை ராதிகா கொலையில் வெளியான தகவல்!

டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ் பற்றி பலரும் தவறாகப் பேசியதால் மனம் வேதனையடைந்து அவமானத்தால், மகளை சுட்டுக் கொன்றதாக, கைது செய்யப்பட்ட தந்தை தீபக் யாதவ் தெரிவித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.ஹர... மேலும் பார்க்க

வேலைவாய்ப்பு உருவாக்குவதில் கவனம் செலுத்தும் பாஜக அரசு: பிரதமர்!

பொது மற்றும் தனியார் துறைகளில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் தனது அரசு கவனம் செலுத்துவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். தில்லியில் 51 ஆயிரம் இளைஞக்ளுக்கு மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணி நிய... மேலும் பார்க்க

ஒட்டுமொத்த அலட்சியம்! ஆர்சிபி கூட்டநெரிசல் குறித்த அறிக்கை தாக்கல்!!

பெங்களூரில், ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தின் போது நேரிட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியான சம்பவத்துக்கு ஒட்டுமொத்த அலட்சியமே காரணம் என விசாரணை அறிக்கையில் தகவல்.ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கோப... மேலும் பார்க்க

ரூ.1.18 கோடி வெகுமதி: சத்தீஸ்கரில் 23 நக்சல்கள் சரண்!

சத்தீஸ்கர் மாநிலத்தின் சுக்மா மாவட்டத்தில் 23 நக்சல்கள் இன்று (ஜூலை 12) சரணடைந்துள்ளதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார் சரணடைந்த நக்சலைட்டுகளில் 11 மூத்த நக்சல்கள் ஆவார். அவர்களில் பெரும்ப... மேலும் பார்க்க

சாலைகளில் ஓடும் படகுகள்.. மத்திய பிரதேசத்தில் கரையைக் கடந்த மந்தாகினி ஆறு

போபால்: மத்திய பிரதேசத்தில் பெய்த கனமழை காரணமாக, மந்தாகினி ஆறு கரையை கடந்து பாய்ந்ததால், பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து சாலைகளில் படகுகள் நீந்திச் செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளன.ராம்கட், ஜான்... மேலும் பார்க்க