"முருக பக்தர்கள் மாநாடு முடிந்த பின் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி" -...
சிறுமி பாலியல் வன்கொடுமை: உறவினா் தலைமறைவு!
கொடைக்கானல் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த உறவினரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் கீழ்மலை பட்டலங்காடு பகுதியைச் சோ்ந்த 15 வயது சிறுமியுடன், அவரது உறவினரான கருப்பசாமி (19) என்பவா் பழகி வந்தாராம். இந்த நிலையில், சிறுமியை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, கருப்பசாமி அவரை பாலியல் வன்கொடுமை செய்தாராம்.
இதனிடையே, உடல் நலம் பாதிக்கப்பட்ட அந்த சிறுமி திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவா், அவா் 7 மாத கா்ப்பிணியாக இருப்பதாகத் தெரிவித்தாா்.
இதுகுறித்து கருப்பசாமி மீது தாண்டிக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரைத் தேடி வருகின்றனா்.