செய்திகள் :

சிறுவன் பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 14 ஆண்டுகள் சிறை!

post image

ஆவடி அருகே 7 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்தும் புதன்கிழமை திருவள்ளூர் மாவட்ட போக்ஸோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அருகே முத்தாப்புதுப் பேட்டையைச் சேர்ந்தவர் 7 வயது சிறுவன். கடந்த 14.4.2023 அன்று அதே பகுதியைச் சேர்ந்த திருமால் மகன் பிரவீன்(19) சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சிறுவன் பெற்றோரிடம் தெரிவித்ததால், இதுதொடர்பாக பட்டாபிராம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் பிரவீன் மீது போலீஸார் வழக்குப் பதிந்து கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உள்படுத்தினர். மேலும், இந்த வழக்கு விசாரணையும் கடந்த 2 ஆண்டுகளாக திருவள்ளூர் மாவட்ட போக்ஸோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் இறுதியாக போக்ஸோ நீதிபதி உமா மகேஸ்வரி முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் குற்றம் நிருபிக்கப்பட்டதால் பிரவீனுக்கு 14 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்தும் நீதிபதி தீர்ப்பு வழங்கினார். அதைத்தொடர்ந்து அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் இளைஞரைப் பாதுகாப்பாக அழைத்துச் சென்று புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

The Thiruvallur District POCSO Court on Wednesday sentenced a youth to 14 years in prison and a fine of Rs. 25,000 for sexually assaulting a 7-year-old boy near Avadi.

தவெக மாநாடு: தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

தமிழக வெற்றிக் கழகத்தில் 2-வது மாநில மாநாடு மதுரையில் நடைபெறுவதையொட்டி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநாடு, வாகை சூடும் வரலாறு திரும்புகிறது “வெற்றி... மேலும் பார்க்க

தவெக மாநாடு: 100 அடி கொடிக் கம்பம் சாய்ந்து கார் சேதம்!

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மதுரையில் நாளை(ஆக.20) நடைபெறும் 2-வது மாநில மாநாட்டுக்காக நட முயன்ற 100 அடி உயர கொடி மரம் கார் மேலே விழுந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.2026 ஆம் ஆண்டு பேரவைத்... மேலும் பார்க்க

தமிழ்நாட்டில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்களைக் கணக்கெடுக்க முடிவு!

தமிழ்நாட்டில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்களின் நிலை குறித்து ஆய்வு செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களில் இருந்து குறிப்பாக வட மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு புலம்... மேலும் பார்க்க

தவெக மாநாட்டில் பிளக்ஸ் பேனர் வைக்க முயன்ற மாணவர் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு!

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இனாம்கரிசல் குளத்தில் தவெக மாநாட்டிற்கு பிளக்ஸ் பேனர் வைப்பதற்காகக் கம்பி எடுத்து வந்தபோது மின்சாரம் பாய்ந்து கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீவ... மேலும் பார்க்க

50 ஆம் ஆண்டு திருமண நாள்! மனைவி துர்காவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

50 ஆம் ஆண்டு திருமண நாளையொட்டி, மனைவி துர்காவுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் புதன்கிழமை வாழ்த்து தெரிவித்துள்ளார்.திருமண நாளை முன்னிட்டு மறைந்த திமுக தலைவரும் தனது தந்தையுமான மு. கருணாநிதியின் நின... மேலும் பார்க்க

கொள்ளிடம் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

மேட்டூர் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியதால் கொள்ளிடம் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று(ஆகஸ்ட் 20) காலை 8.00 மணியளவில் அதன் முழு க... மேலும் பார்க்க