செய்திகள் :

அமைச்சர்கள், முதல்வர்கள் பதவிப்பறிப்பு! அமித் ஷா மீது தூக்கியெறியப்பட்ட மசோதா நகல்கள்!

post image

அமைச்சர்கள், முதல்வர்களின் பதவிப்பறிப்பு மசோதாக்களுக்கு எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா 3 மசோதாக்களை முன்மொழிந்தார். அரசியலமைப்பு மசோதா (130ஆவது திருத்தம்), யூனியன் பிரதேசங்களின் அரசு திருத்த மசோதா, ஜம்மு - காஷ்மீர் மறுசீரமைப்பு திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களை அமித் ஷா முன்மொழிந்தார்.

அமைச்சர்கள், முதல்வர்கள், பிரதமரோ தொடர்ச்சியாக 30 நாள்கள்வரையில் காவலில் வைக்கப்பட்டால், 31 ஆவது நாளில் அவர்கள் தன்னிச்சையாகவே பதவிநீக்கம் செய்யப்படுவர் என்ற மசோதாவை அமித் ஷா கூறினார். இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

மசோதாவின் நகல்களை எதிர்க்கட்சிகள் கிழித்ததுடன், அதனை அமித் ஷா அருகே தூக்கியெறிந்தனர்.

மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சியினர், தேர்தல் ஆணையத்தைத் தவறாக பயன்படுத்த முயற்சித்தது தோல்வியடைந்ததால், தற்போது எதிர்க்கட்சிகளைக் குறிவைத்து ஜனநாயகத்தை நசுக்குவதற்கும் மாநில அரசுகளைக் கவிழ்ப்பதற்கும் மற்றொரு உத்தியை அரசு செயல்படுத்துகிறது என்று குற்றம் சாட்டினர்.

இருப்பினும், மசோதாக்களை ஆய்வு செய்ய, அவற்றை ஒரு கூட்டுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று அமித் ஷா தெரிவித்தார்.

பணி நியமன முறைகேடு வழக்கில் முன்னாள் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியும், தில்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் முன்னாள் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கைது செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. அரவிந்த கேஜரிவால், சிறையிலிருந்தவாறே தனது முதல்வர் பொறுப்புகளைக் கவனித்து வந்தார்.

Amit Shah Introduces 'Criminal MPs' Bill, Opposition Throws Paper At Him

3,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்த ஆரக்கிள் நிறுவனம்!

அமெரிக்காவைச் சேர்ந்த மென்பொருள் நிறுவனமான ஆரக்கிள் இந்தியாவில் சுமார் 3,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. பிரபல தொழில்நுட்ப நிறுவனமான ஆரக்கிள், அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகி... மேலும் பார்க்க

தில்லியில் 3 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்தது: மூவர் பலி!

தில்லியில் தர்யாகஞ்ச் பகுதியில் மூன்று மாடிக் கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் மூன்று தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக போலீஸார் தெரிவித்தனர். இறந்தவர்கள் ஜுபைர், குல்சாகர் மற்றும் த... மேலும் பார்க்க

கால் லிட்டர்(250 மிலி) பாட்டிலின் விலை ரூ. 125?

இந்திய தேர்தல் ஆணைய அலுவலகத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் பயன்படுத்தும் குடிநீர் பாட்டில்களின் விலை இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், த... மேலும் பார்க்க

கேள்வி கேட்டால் தேச துரோகமா..? பத்திரிகையாளர்களுக்கு சம்மன்: முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

மூத்த பத்திரிகையாளர்கள் கரண் தாப்பர், சித்தார்த் வரதராஜனுக்கு அசாம் காவல் துறையினர் சம்மன் அனுப்பியதற்கு முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.தி வயர் இணையதளம் முடக்கம்பாகிஸ்தான் பயங்கரவாதி... மேலும் பார்க்க

கேரளத்தில் சிறுமி பலி: மூளையைத் தின்னும் அமீபா உடலுக்குள் எப்படி நுழைகிறது?

கேரளத்தில் மூளையைத் தின்னும் அமீபா தொற்றால் 9 வயது சிறுமி மரணமடைந்துள்ளார். மேலும் ஒரு 3 மாதக் குழந்தை மற்றும் 40 வயது நபர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கின்றனர். கேரளத்தில் ... மேலும் பார்க்க

தில்லி முதல்வரை தாக்கியவர் நாய் பிரியரா..? கைதானவரின் பின்னணி என்ன?

தில்லி முதல்வர் ரேகா குப்தா தாக்கப்பட்ட விவகாரத்தில் குஜராத்தைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.தில்லியின் சிவில் லைன்ஸில் உள்ள ரேகா குப்தாவின் வீட்டில், புதன்கிழமை காலை நடைபெற்ற மக்களின் குறை... மேலும் பார்க்க