செய்திகள் :

`சிறுவர்களை வைத்து ஆபாச ரீல்ஸ்' - 3 யூடியூப்பர்கள் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு!

post image

ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே ரீல்ஸ் எடுப்பதாக கூறி, 15 மற்றும் 17 வயது சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை அளித்து வீடியோபதிவு செய்த புகாரில் தஞ்சாவூரை சேர்ந்த யூடியூப்பர் திவ்யா(வயது 36), ஈரோட்டை சேர்ந்த கீழக்கரை என்ற கார்த்திக்(30), கடலூரை சேர்ந்த சித்ரா(48), ஆனந்தராமன்(24) ஆகிய 4 பேர் மீது ஜனவரி 29-ம் தேதி போக்சோ வழக்குப்பதிவு செய்து, ஶ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில் கைதான 4 பேருக்கும் ஜாமின் மனு இருமுறை தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், 3 முறை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டது. நாளையுடன் (மார்ச் 12) நீதிமன்ற காவல் நிறைவடைய உள்ளது.

குண்டர் சட்டத்தில் கைது

இந்த நிலையில், போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட திவ்யா, கார்த்திக், சித்ரா ஆகியோர் மீது ஏற்கெனவே பாலியல் வழக்குகள் நிலுவையில் உள்ளதால் 3 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க விருதுநகர் மாவட்ட காவல் கணகாணிப்பாளர் கண்ணன் பரிந்துரை செய்தார். அதன்பேரில் திவ்யா, சித்ரா, கார்த்திக் ஆகிய 3 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் உத்தரவிட்டார். அதன் அடிப்படையில், 3 பேரும் நேற்று குண்டர்‌சட்டத்தின்‌ கீழ் கைது செய்யப்பட்டனர்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

``தமிழகத்தில் தமிழ் தெரியாதவர்களை ஏன் வேலையில் சேர்க்க வேண்டும்?'' - உயர்நீதிமன்றம் கேள்வி

தமிழ் மொழி தேர்வில் வெற்றி பெறாதாவரை பணியில் சேர்க்க தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவிற்கு தடை கோரி மின்வாரிய தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. உயர்நீதிமன்ற மதுரைக் க... மேலும் பார்க்க

`ஆளுநர் ஏன் இன்னும் ஒப்புதல் அளிக்காமல் இருக்கிறார்?’ - ராஜேந்திர பாலாஜி வழக்கில் உச்ச நீதிமன்றம்

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி தமிழ்நாடு சட்டப்பேரவையில் அரசு நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்கள் தொடங்கி, முக்கியமான சட்ட நடவடிக்கைகளுக்கு அனுமதி கோரி அனுப்பி வைக்கும் கடிதங்கள் வரை நிலுவையில் போட்டு வைப்ப... மேலும் பார்க்க

``நீண்ட கால லிவ் இன் உறவில், ஆண் மீது பாலியல் வன்கொடுமை புகார் கூற முடியாது'' -சுப்ரீம் கோர்ட்

சமீப காலமாக லிவ் இன் உறவில் வாழும் தம்பதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அப்படி வாழும்போது அவர்களுக்குள் அனைத்து வகையான உறவுகளும் நடைபெறுகிறது. ஆனால் திடீரென அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்... மேலும் பார்க்க

`சிவாஜி கணேசனின் வீட்டில் எனக்கு எந்த பங்கும் இல்லை’ - ஜப்தி உத்தரவுக்கு எதிராக ராம்குமார் பதில்

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் வீட்டில் தனக்கு எந்த பங்கும் இல்லாத நிலையில், அந்த வீட்டை ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம் குமார் தரப்ப... மேலும் பார்க்க

`ஜகஜால கில்லாடி' படத்துக்காக கடன் : `சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவு’ - உயர் நீதிமன்றம்

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும், நடிகருமான துஷ்யந்த், அவரது மனைவி அபிராமி ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள ஈசன் புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் நடிகர் விஷ்ணு விஷால், நடிகை நிவேதா பெத்துராஜ் உள்ளிட்டோர... மேலும் பார்க்க

PM Modi: ``பட்டப்படிப்பு சான்றிதழை பொதுவில் வெளியிட முடியாது.." - நீதிமன்றத்தில் பல்கலைக் கழகம்!

பிரதமர் மோடியின் BA, MA பட்டப் படிப்பு சான்றிதழ் குறித்து ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அர்விந்த் கேஜ்ரிவால் கடந்த 2016-ம் ஆண்டு கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதிலளித்த அமித் ஷா, பிரதமர் மோடியின் பட்ட... மேலும் பார்க்க