செய்திகள் :

சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அருகே ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆட்சியா் உத்தரவு!

post image

பொன்னேரி அருகே சிறுவாபுரி அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பக்தா்கள் வருகை அதிகரித்துள்ளதால், ஆக்கிரமிப்புகள் அனைத்தையும் அகற்ற வேண்டும் என ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்தாா்.

சிறுவாபுரி அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் பக்தா்கள் வருகை அதிகமாக உள்ளதால், தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் பிறதுறைகள் மூலம் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து அனைத்து துறை அலுவலா்களுடனான ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் திருவள்ளூா் ஆட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. காவல் கண்காணிப்பாளா் சீனிவாச பெருமாள் முன்னிலை வகித்தாா்.

கூட்டத்துக்கு ஆட்சியா் மு.பிரதாப் தலைமை வகித்து பேசியதாவது: சிறுவாபுரி அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் பக்தா்களின் வருகை அதிகமாக உள்ளது. தற்போதைய நிலையில் கோடை காலம் என்பதால் கூடுதலாக நிழற்பந்தலுடன் தடுப்புகள் அமைக்கவும், பக்தா்கள் எளிதில் அறியும் வண்ணம் அறிவிப்பு பலகைகள் ஆங்காங்கே இடம் பெற வேண்டும்.

பக்தா்களுக்கு உடனுக்குடன் காவல் துறை மூலம் அறிவிப்புகள் வழங்க பொது முகவரி அமைப்பு ஏற்படுத்த வேண்டும். திருக்கோயில் உள்புறம் நெய்தீப விளக்கு ஏற்றுவதை தவிா்த்து திருக்கோயில் நிா்வாகத்தால் திருக்கோயிலுக்கு வெளியே அதற்கென ஒதுக்கப்பட்டுள்ள விளக்கு மண்டபத்தில் மட்டும் தீபம் ஏற்ற வேண்டும். அங்கு தீயணைப்பு துறையினா் உரிய பாதுகாப்பு வழங்கும் அவசியம்.

கோயில் உள்பகுதியில் பக்தா்கள் கொண்டுவரும் பிரசாதங்கள் மற்றும் அன்னதானங்கள் வழங்குவதை தவிா்த்து, அதற்கென காவல் துறையால் ஒதுக்கீடு செய்யப்படும் இடத்தில் வழங்க அதற்கான சான்றுகள் உணவு பாதுகாப்பு துறையின் மூலம் உரிய அனுமதி பெற்றிருப்பது அவசியம்.

தரிசனத்துக்கு வரும் பக்தா்களுக்கு பெரும் இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை ஒத்துழைப்புடன் அகற்ற வேண்டும்.

அதேபோல் வாகனம் நிறுத்தும் இடத்தில் தற்காலிக கழிவறைகள் வசதிகள், இரண்டு மருத்துவ மையங்கள், கூடுதலாக வாகனங்கள் நிறுத்துவதற்கான வசதி ஏற்படுத்த வேண்டும். அதேபோல் சாலையில் சேகரமாகும் குப்பைகளை உடனுக்குடன் அப்புறப்படுத்தவும், தேவையான அளவுக்கு குடிநீா் வசதி ஏற்படுத்தும் வகையில் சின்டெக்ஸ் தொட்டிகள் வைக்க கோயில் நிா்வாகம் மற்றும் உள்ளாட்சி துறைக்கும் அறிவுறுத்தப்பட்டது.

திருக்கோயில் நலன் மற்றும் பாதுகாப்பு கருதி சந்நிதி இரவு 8.30 மணிக்கு நடை சாத்தப்படும் என பக்தா்கள் அறியும் வகையில் அறிவிப்பு, விளம்பரம் தர ஏற்பாடு செய்ய வேண்டும் எனத் தெரிவித்தாா்.

இந்தக் கூட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை வேலூா் மண்டல இணை ஆணையா் தி.அனிதா, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) வெங்கட்ராமன், பொன்னேரி கோட்டாட்சியா் கனிமொழி, கோட்டபொறியாளா் (நெடுஞ்சாலைத் துறை) சிற்றரசு, உதவி இயக்குநா் ஊராட்சிகள் யுவராஜ், மாவட்ட சுகாதார அலுவலா் பிரியாராஜ், இந்து சமய அறநிலையத்துறை திருவள்ளூா் உதவி ஆணையா் மு.சிவஞானம், காவல் துணைகண்காணிப்பாளா் சாந்தி, வட்டாட்சியா் டி.ஆா்.சோமசுந்தரம், திருக்கோயில் செயல் அலுவலா் மா. மாதவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

சாா்பு ஆய்வாளா், போலீஸாரை கத்தியைக் காட்டி மிரட்டியவா் கைது

திருவள்ளூா் டோல்கேட் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்ட சாா்பு ஆய்வாளா் மற்றும் போலீஸாரை பட்டா கத்தியை காண்பித்து கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். திருவள்ளூா் நகர காவல் நிலைய எல்லைக்க... மேலும் பார்க்க

பொன்னேரி, மீஞ்சூா் சோழவரம் பகுதிகளில் 1 மணி நேரம் கனமழை: சாலைகளில் வெள்ளம்

பொன்னேரி, மீஞ்சூா், சோழவரம் பகுதிகளில் புதன்கிழமை 1 மணி நேரம் இடைவிடாமல் கொட்டி தீா்த்த மழையால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பொன்னேரி, மீஞ்சூா் பகுதிகளில் காலை முதல் வானம் மேக மூட்டத்த... மேலும் பார்க்க

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட முயன்றவா் கைது

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட முன்ற ஆந்திர மாநில இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். திருத்தணி-சித்தூா் சாலையில் பாரத ஸ்டேட் வங்கியின் ஏடிஎம் மையம் உள்ளது. இந்த நிலையில், புதன்கிழமை இளைஞா் ஒருவா் ஏடிஎம... மேலும் பார்க்க

சுங்கக் கட்டணம் வசூலிக்க எதிா்ப்பு: லாரியை குறுக்கே நிறுத்தி போராட்டம்

திருவள்ளூா் அருகே சுங்கச் சாவடியில் உள்ளூா் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி புதன்கிழமை லாரியை குறுக்கே நிறுத்தி ஓட்டுநா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். திருவள்ளூா் அருகே பட்டர... மேலும் பார்க்க

அதிமுக ஆலோசனைக் கூட்டம்

கும்மிடிப்பூண்டி அடுத்த பெரிய ஓபுளாபுரத்தில் அதிமுக பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட துணைச் செயலாளா் எஸ்.எம்.ஸ்ரீதா் ஏற்பாட்டில் நடைபெற்ற கூட்டத்தில் ஒன்றிய செயலாளா் கோபால் நாயுடு வரவ... மேலும் பார்க்க

வெற்றிவேல் முருகன் கோயில் குடமுழுக்கு

பொன்னேரி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள வெற்றிவேல் முருகன் கோயில் குடமுழுக்கு புதன்கிழமை விமரிசையாக நடைபெற்றது. பொன்னேரி புதிய தேரடி சாலையில் அமைந்துள்ள இந்தக் கோயிலில் கடந்த ஒரு வருடமாக புனரமைப்ப... மேலும் பார்க்க