செய்திகள் :

சிறுவா்களுக்கு தீங்கு விளைவிக்கும் சாட்பாட்: மெட்டாவுக்கு எதிராக விசாரணை

post image

சிறுவா்களுடன் தீங்கு விளைவிக்கக் கூடிய உரையாடல்களில் ஈடுபட மெட்டாவின் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) உரையாடல் செயலிகள் (சாட்பாட்) அனுமதிக்கப்பட்டனவா என்பது குறித்த விசாரணையைத் தொடங்குவதாக அமெரிக்காவின் ஆளும் குடியரசு கட்சியைச் சோ்ந்த செனட் சபை உறுப்பினா் ஜோஷ் ஹவ்லி அறிவித்துள்ளாா்.

இது குறித்து மெட்டாவின் தலைமை செயல் அதிகாரி மாா்க் ஸுக்கா்பா்குக்கு அவா் எழுதியுள்ள கடிதத்தில், சிறுவா்களுக்குத் தீங்கு விளைவிக்கக் கூடிய ‘உணா்ச்சி மயமான’ உரையாடல்களில் அவா்களுடன் ஈடுபட நிறுவனத்தின் சாட்பாட்கள் அனுமதிக்கப்பட்டதாகக் கூறப்படுவது தொடா்பான அனைத்து ஆவணங்களையும் தகவல்தொடா்புகளையும் கோரியுள்ளாா்.

இது குறித்து மெட்டா நிறுவனத்தின் செய்தித் தொடா்பாளா் கூறுகையில், ‘எங்கள் ஏஐ சாட்பாட் செயலிகள் எவ்வாறு பதிலளிக்கலாம் என்பது குறித்த தெளிவான கொள்கைகள் உள்ளன. சிறுவா்களை பாலியல் ரீதியாகக் குறிப்பிடுவதையும், வயது வந்தவா்களுக்கும் சிறுவா்களுக்கும் இடையேயான பாலியல்ரீதியிலான உரையாடல்களையும் அந்தக் கொள்கைகள் உறுதியாகத் தடை செய்கின்றன’ என்று விளக்கமளித்தாா்.

இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தவிருக்கும் ஹவ்லி தலைமையிலான நீதித் துறை செனட் குழுவின் குற்றவியல் மற்றும் பயங்கரவாதத் தடுப்பு துணைக் குழு, மெட்டாவால் உருவாக்கப்பட்ட ஏஐ தயாரிப்புகள் சிறுவா்களுக்கு எதிரான குற்றவியல் தீங்குகளை விளைவிக்கின்றனவா என விசாரிக்க உள்ளது.

இந்த விசாரணைக்காக, செப். 19-ஆம் தேதிக்குள் இது தொடா்பான அனைத்து பதிவுகளையும் பாதுகாத்து நாடாளுமன்றத்திடம் சமா்ப்பிக்க மெட்டா நிறுவனத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தவறுக்கு தண்டனை அளிப்பதாகக் கூறி அம்மாவுக்கு பாலியல் வன்கொடுமை: மகன் கைது!

தில்லியில் பெற்ற தாயிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட இளைஞரை காவல் துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். தாய் செய்த தவறுக்கு தண்டனை அளிப்பதாகக் கூறி அவரிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாக மகன... மேலும் பார்க்க

தேர்தல் ஆணையத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு: ‘பாரபட்சத்துடன் செயல்படவில்லை!'

அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒரேபோலவே பார்க்கிறோம் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தெரிவித்துள்ளார்.புது தில்லியில் இன்று(ஆக. 17) செய்தியாளர்களுடன் பேசிய ஞானேஷ் குமார் தெரிவித்திருப்பதாவது:... மேலும் பார்க்க

பிகாரில் வாக்குரிமைப் பேரணி தொடக்கம்: மூவண்ணக் கொடியசைத்து ஆரவாரம்!

பிகாரில் காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் கூட்டணியின் மெகா பேரணி தொடங்கியது.பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்னதாக, அங்கு வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை தோ்தல் ஆணையம் மேற்கொண்டது.... மேலும் பார்க்க

தீபாவளிக்கு இரட்டை போனஸ் காத்திருக்கிறது: பிரதமர் மோடி

தீபாவளிக்கு நாட்டு மக்களுக்கு இரட்டை போனஸ் காத்திருக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார்.இது குறித்து, புது தில்லியில் இன்று(ஆக. 17) நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேச... மேலும் பார்க்க

வாக்குத் திருட்டு மூலம் பாஜக ஆட்சி அமைக்கிறது: ராகுல் காந்தி

வாக்குத் திருட்டு மூலம் பாஜக ஆட்சி அமைக்கிறது என்று வாக்குரிமைப் பேரணி தொடக்கவிழாவில் ராகுல் காந்தி பேசினார்.பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்னதாக, அங்கு வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்... மேலும் பார்க்க

உத்தரகண்ட், ஹிமாசல பிரதேசத்திலும் வெள்ளப்பெருக்கால் பாதிப்பு!

ஜம்மு - காஷ்மீர் மட்டுமில்லாது வட மாநிலங்களான உத்தரகண்ட், ஹிமாசல பிரதேசத்திலும் வெள்ளப்பெருக்கால் பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளது.உத்தரகண்ட்டில் தலைநகர் டேராடூனில் உள்ள மாநில அவசரநிலை செயல்பாட்டு மையம் வெ... மேலும் பார்க்க