செய்திகள் :

சிறையிலிருந்து தென் கொரிய அதிபர் விடுவிப்பு?

post image

தென் கொரியாவில் கிளர்ச்சி விவகாரத்தில் கைது செய்யப்பட்ட யூன் சுக் இயோல் விடுவிக்கப்பட்டதாக அந்நாட்டு செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தென் கொரிய அதிபர் யூன் சுக் இயோல் மீதான கிளர்ச்சி குற்றச்சாட்டுகள் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட நிலையில், அவரை விடுவிக்க நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டதாக அந்நாட்டு செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், நீதிமன்றத்தின் தரப்பிலிருந்து உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் எதுவும் பெறப்படவில்லை.

தென்கொரியாவில் எதிர்க்கட்சியினர் வடகொரியாவுடன் இணைந்து நாடாளுமன்றத்தை முடக்க சதித்திட்டம் தீட்டுவதாக அதிபர் யூன் சுக்-இயோல் டிசம்பர் மாதத்தில் ராணுவ அவசர நிலையை அறிவித்தார். ராணுவ அவசர நிலைக்கு, நாடு முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பியதால், சில மணி நேரங்களில் உத்தரவு கைவிடப்பட்டது.

இதையும் படிக்க:ரூ.100 கோடிக்கு மேல் சொத்து வைத்திருக்கும் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 191 ஆக உயர்வு!

இதனிடையே, ராணுவ அவசர நிலை உத்தரவு என்பது கிளர்ச்சிக்கு சமமானது என்று யூன் சுக் மீது பல்வேறு தரப்பினர் குற்றம் சாட்டினர். இதனைத் தொடர்ந்து, அவர் கைது செய்யப்பட்டார்.

தென் கொரிய வரலாற்றிலேயே அதிபர் பதவியில் இருக்கும் ஒருவர் கைது செய்யப்படுவது இதுவே முதல் முறை. இந்த குற்றத்தில், அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்கப்படலாம் என்றெல்லாம் கூறினர்.

அவரின் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால், பதவி நீக்கம் செய்வதுடன், அடுத்த இரு மாதங்களுக்குள் தேர்தலும் நடத்தப்படலாம்.

9 மாதங்களுக்குப்பின் பூமிக்கு திரும்புகிறார் சுனிதா வில்லியம்ஸ்!

இந்திய வம்சாவளியைச் சோ்ந்த நாசா விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ் 9 மாதங்களுக்குப்பின் பூமிக்கு திரும்புகிறார். அமெரிக்காவின் போயிங் உருவாக்கிய ஸ்டாா்லைனா் விண்கலம், சுனிதா வில்லியம்ஸ் மற்றும்... மேலும் பார்க்க

டிரம்ப் மீது தாக்குதல் நடத்த திட்டமா? வெள்ளை மாளிகை அருகே ஆயுதங்களுடன் திரிந்த நபர் சுட்டுப்பிடிப்பு!

வாஷிங்டன் : வெள்ளை மாளிகை அருகாமையில் ஆயுதம் ஏந்தி உலா வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவரை அமெரிக்க ரகசிய பாதுகாப்பு பணியாளர்கள் ஞாயிற்றுக்கிழமை(மார்ச் 9) துப்பாக்கியால் சுட்டுள்ளனர். சனிக்கிழமை(மார்ச் ... மேலும் பார்க்க

காய்ச்சல் இல்லை; ரத்தத்தில் சீரான ஆக்சிஜன்: போப் உடல் நிலை குறித்து வாடிகன்!

போப் பிரான்சிஸுக்கு காய்ச்சல் இல்லை என்றும் அவரின் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு சீராக இருப்பதாகவும் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 9) வாடிகன் தெரிவித்துள்ளது.தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்துவருவதால்... மேலும் பார்க்க

டிரம்ப்பின் சொத்து சூறையாடப்படும்: பாலஸ்தீனர்கள் எச்சரிக்கை

காஸாவைக் கைப்பற்றினால், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் சொத்துகள் சூறையாடப்படும் என்று பாலஸ்தீனர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.ஹமாஸின் பணயக் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்றும், காஸாவை மத்திய கிழக... மேலும் பார்க்க

சிரியா: 2 நாள் உள்நாட்டுப் போரில் ஆயிரக்கணக்கானோர் பலி

சிரியாவில் உள்நாட்டுப் போரில் 2 நாள்களில் ஆயிரக்கணக்கானோர் பலியானதாக போர் கண்காணிப்புக் குழு தெரிவித்தது.ஆப்பிரிக்காவை ஒட்டி அமைந்துள்ள மேற்காசிய நாடான சிரியாவில் முன்னாள் அதிபா் அல்-அஸாத் ஆதரவுப் படை... மேலும் பார்க்க

ரஷிய தாக்குதலில் 20 போ் உயிரிழப்பு: உக்ரைன்

தங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ரஷியா நடத்திய தாக்குதலில் 20 போ் உயிரிழந்ததாக உக்ரைன் தெரிவித்துள்ளது.இது குறித்து அந்த நாட்டு அதிகாரிகள் கூறியதாவது:டொனட்ஸ்க், காா்கிவ் உள்ளிட்ட பகுதிகளில் ரஷியா வ... மேலும் பார்க்க